12-16-2005, 06:09 PM
ரவி உள்ளே நுழையவும் பிறகென்ன அத்தானும் வந்திட்டார் வாங்கோ அத்தான் . அக்கா நான் அத்தானுக்கு கொண்டந்த சாமான்களை எடு. அத்தான் உங்களிறக்கு ஸ்பெசல் ஸ்கொச் 25 இயர் ஓல்ட் ஒண்டு கொண்டந்தனான் அடிச்சு பாத்து சொல்லுங்கோ எப்பிடியெண்டு. எனறவாறே ஈசன் கையில் மது போத்தலை எடுத்தவாறு.
உங்களை பாத்து கொண்டிருந்தனான் அப்பதானே உங்கடை சாட்டிலை நானும் கொஞ்சம் அடிக்கலாம் இல்லாட்டி அக்காள் விடமாட்டாள்.என்று சொல்லி கொண்டே அவன் இரண்டு கிளாசில் மதுவை ஊற்ற சாந்தி பேசாமல் பாத்த வண்ணம் நின்றாள்.
ரவியும் பெரிதாக எதுவும் பேசவில்லை தொலை காட்சியை பாத்தபடி சாந்தியின் தம்பியின் கதைகளிற்கு ஓம் இல்லை ம்..என்ன சொற்கள் மட்டுமே அவன் வாயிலிருந்து வந்தது. நிண்ட நேரத்தின் பின்னர் ஈசனும் ஏதோ புரிந்தவனாக பேசுவதை குறைத்து கொண்டு சரி எனக்கும் கொஞ்சம் அலுப்பா இருக்கு படுப்பம் என்றவாறு படுக்கைக்கு போன ஈசனுக்குள் ஆயிரம் கேள்விகள் எதற்குமே விடை தெரியாது உறங்கி போனான்.
மறு நாள் ரவி வேலைக்கு போன பின்னர் ஈசன் சாந்தியிடம் அக்கா உண்மையை சொல்லு நீயும் பெரிசா கதைக்கிறாய் இல்லை அத்தனும் உம்மெண்டு கொண்டிருக்கிறார் உங்களிற்கை ஏதும் பிரச்சனையா?? இல்லாட்டி நான் வந்தது பிடிக்கேல்லையா பிடிக்காட்டி சொல்லு நான் இப்பவே போறன் நான் கன காலத்திற்கு பிறகு உன்னை பாக்கிறணெண்டு எவ்வளவு ஆசையா வந்தனான் இஞ்சை யென்னண்டா ஏதோ இழவு வீடு மாதிரி இருக்கு என்றவும்.
சாந்தி அதற்கு மேலும் தனது உணர்ச்சிகளை அடக்கமுடியாமல் தம்பி என்னத்தை சொல் எல்லாம் என்ரை விதி யென்றவாறு ஒரு குழந்தையை போல விக்கி விக்கி அழ தொடங்கி விட்டாள்.ஈசனுக்கு அவளது அழுகையை நிறுத்துவதே பெரும்பாடாகி விட்டது .என்ணெண்டு சொல்லிட்டு அழன் எனக்கு ஒண்டும் விழங்கேல்லை என்ன பிரச்சனையெண்டாலும் சொல்லு முடிஞ்சளவு உதவி செய்யிறன் .
சாந்தி ஓரளவு தன்னை ஆசுவாச படுத்திக் கொண்டு நடந்ததையெல்லாம் மூக்கை சீறியபடியே மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டு கொண்டிருந்த ரவி
. ம் இஞ்சை தண்ணியடிக்கிறது கட்டையடிக்கிறது எல்லாம் அனேகமான எல்லா இளைஞரிட்டையும் சில நேரம் இருக்கும் ஆனால் குடும்பம் எண்டு வரேக்கை கொஞ்சம் மாறத்தான் வேணும் சில நேரம் அத்தான் கொஞ்சம் கொஞ்சமா மாறுவார் நீ அதுகளை உடைனை விடச்சொல்லி அடம் பிடிச்சு சண்டை பிடிக்காதை நான்வேணுமெண்டா கதைச்சு பாக்கிறன்.
இல்லையடா நான் ஒண்டுமே சொல்லுறேல்லை அவரும் மாறுவார் எண்டுதான் நானும் பொறுமையா இருக்கிறன் ஆனால் அவரின்ரை பழக்கம் கூடிக்கொண்டுதான் போகுதே ஒழிய குறையேல்லை அதை விட இப்ப வீட்டுக்கே சில நேரங்களிலை வாறது இல்லை ஏன் எங்கை போறார் எண்டு கேக்க ஏலாது கேட்டா அது பெரிய பிரச்:சனையாயிடும் நீயும் ஒண்டும் அவரிட்டை கேக்காதை பிறகு நான் சொல்லித்தான் நீ கே;கிறாயெண்டு அது வேறை பிரச்சனையா போகும் .எந்த நேரம் என்ன நடக்குமெண்டு தெரியாமல் தினம் தினம் செத்து பிழைக்கிற வாழ்க்கையா போச்சு எனக்கு.
ஆனால் இதையொண்டையும் நீ ஊருக்கு சொல்லி போடாதை பிறகு அங்கை அப்பர் அம்மா வேறை என்னாலை யோசிச்சு அவைக்கு மேன் பிரச்சனை ஏதோ என்ரை தலைவிதி இப்பிடி அது என்னோடை போகட்டும். நான் கும்பிட்ட தெய்வங்கள்: தான் எனக்கு வழி காட்ட வேணும் எண்று ஒரு பெரு மூச்சுடன் நிறுத்தினாள்.
அக்கா எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை ஏதோ பக்குவமா அத்தானோடை கதைச்சு பார் எனக்கு இவ்வளவும் கேட்டா பிறகு இஞ்சை நிக்கவும் ஒரு மாதிரியிருக்கு அதாலை நான் என்ரை சினேதன் வீட்டிலை போய் நிக்கிறன் குறை நினைக்காதை. நான் போகேக்கை போன் பண்ணுறன்;.என்ற வாறு ஈசன் தனது பொதியை தயார் செய்தான்.
நானும் உன்னட்டை சொல்ல நினைச்சனான் நீ இஞ்சை நிக்கிறதும் அவருக்கு பெரிசா பிடிக்கேல்லை அதை உன்னட்டை என்ணெண்டு சொல்லுறது அதை விடை அவர் சில நேரம் உன்னோடை பிரச்சனைக்கு வந்திடுவாரோ எண்டு வேறை எனக்கு பயம் அதாலை நீ வேறையிடத்திலை நிக்கிறது உனக்கும் நல்லது கோவிக்காதையடா என்றவாறு ஈசனின் கைகளை பிடித்து கொண்டாள்.
ஈசன் தனது நண்பன் வீட்டிற்கு போய்விட இரவு வேலையால் வந்த ரவி . சாந்தி ஈசன் கொண்டு வந்த சொக்லெற்ரை சாப்பிட்டபடி தொலை காட்சி பாத்து கொண்டுருந்ததை கண்டதும்
எங்கை உன்ரை தம்பி ஆழை காணேல்லை
சாந்தி எழுந்தவாறு அலன் யாரோ தன்ரை சினேதன் வீட்டை நிக்கிறணெண்டு போட்டான் போகேக்கை வருவானாம் உங்களிட்டையும் சொல்ல சொன்னவன்.
ரவி அலமாரியிலிருந்த முதல்நாள் ஈசன் குடுத்த விஸ்கியில் இருந்த மீதத்தையும் இரண்டு கிளாசையும் எடுத்தவாறு என்ன என்னைப்பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாத்தையும் சொல்லி ஆளை அனுப்பிட்டியா??வா வந்து இதிலை இரு என்று சாந்தியை கூப்பிட சாந்தி தயங்கியவாறு நிக்க வாடி வந்து இரடி எண்று கத்த சாந்தி பயத்துடன் அருகில் போய் இருந்தாள்.
இரண்டு கிளாசில் விஸ்கியை ஊத்தியபடி நான் ஒரு முடிவுக்கு வந்திட்டன் இப்பிடியே ஒவ்வொரு நாளும் நானும் நீயும் சண்டை பிடிச்சு மூஞ்சையை நீட்டி கொண்டிருக்கிறதிலை பிரயோசனம் இல்லை.என்று கூறிவிட்டு சாந்தியை உற்று பார்த்து ஒரு புன்னகை செய்து விட்டு தனது சட்டை பையிலிருந்து ஒரு கட்டு துண்டை எடுத்து லைற்றரில் சுூடாக்கி அதனை புகையிலை தூளுடன் கலந்து பேப்பரில் சுத்தியவாறு தொடர்ந்தான்.
அதாலை நீ யோசிக்காதை உன்னை வீட்டை விட்டு கலைக்கப்பேறனெண்டு ஏணெண்டா பிரெஞ்சு காரியளிட்டை இல்லாத ஏதோ ஒரு ஒரு கிக் உன்னட்டை இருக்கு ஆனால் நீ விரும்பின மாதிரி என்னாலை மாற ஏலாது அதாலை நீ நான் விரும்பின படி மாறிடு பிறகு இரண்டு பேருக்கும் பிரச்சனையே இல்லை .
என்ற படி ஒரு விஸ்கி கிளாசை சாந்தியின் கையில் கொடுத்து விட்டு தானும் மற்ற கிளாசை தனது கையில் எடுத்து சாந்தியின் கிளாசில் சிங் என்று சொல்லி தட்டி விட்டு குடி என்றான்.சாந்தி என்ன செய்வது என்று தெரியாமல் மலைத்துப்போய் நிற்க
அவன் தனது விஸ்கியை ஒரே மடக்கில் குடித்து முடித்து விட்டு .
குடியடி குடி குடி குடி தம்பி கொண்டந்த சொக்கிலேற்ரை ஆசையா திண்டனியல்லே இதுவும் உன்ரை தம்பிதான் கொண்டந்தவன் குடி என்றவாறு அவளது கிளாசை அவளது வாயில் வைத்து திணித்து ஊற்றி விட கொஞ்ச விஸ்கி அவளின் தொண்டைக்குள் இறங்க அவள் திமிறி அவனை தள்ளிவிட மீதி கிளாசுடன் கீழே விழுந்துடைந்தது அவள் வேண்டாமப்பா அய்யோ தயவு செய்து என்னை விட்டு விடுங்கோ வேண்டாம் என்று கத்தியவாறு குளியலறைக்கு ஓட வெளிக்கிட அவளை கதிரையில் இழுத்து இருத்தி விட்டு அவன் சுத்திய கட்டுசிகரற்ரை புகைத்து சாந்தியின் முகத்தில் மாறி மாறி ஊதி விட்டு ஒரு மன நோயாளியை போல் சிரித்தான்.
சாந்திக்கு வயிற்ரை புரட்டிகொண்டு வாந்தி வருவது போல இருந்தது வார்த்தைகள் வரவில்லை கண்கள் பிதுங்கி தலை சுற்றுவது போல இருந்தது ஓங்காழித்த படி குளியலறைக்குள் பேனவள் கீழே விழுந்து தட்டு தடுமாளி எழுந்து குடல் வெளியே வருவது போல வாந்தியெடுத்து கொண்டிருக்க .
அவனோ விழுந்து விழுந்:து சிரித்தபடி முதல் இப்பிடித்தான் இருக்கும் போக போக பிறகு நீயே என்னை கேட்பாய் என்று சொல்லி கொண்டிருக்க வாசல் அழைப்பு மணி அடிக்கும் ஓசை கேட்டது. ரவி சினத்துடன் அடசே பக்கத்து வீட்டு காரன் வந்திட்டானாக்கும் ஒரு சின்ன சத்தம் கேட்டா போதும் உடைனை வந்திடுவான் இண்டைக்கு இவனுக்கு இருக்கு என்று நினைத்தபடி போய் கதவு துவாரம் வழியாக பாரத்தான் வெளியே இரண்டு காவல் துறை அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர்
உங்களை பாத்து கொண்டிருந்தனான் அப்பதானே உங்கடை சாட்டிலை நானும் கொஞ்சம் அடிக்கலாம் இல்லாட்டி அக்காள் விடமாட்டாள்.என்று சொல்லி கொண்டே அவன் இரண்டு கிளாசில் மதுவை ஊற்ற சாந்தி பேசாமல் பாத்த வண்ணம் நின்றாள்.
ரவியும் பெரிதாக எதுவும் பேசவில்லை தொலை காட்சியை பாத்தபடி சாந்தியின் தம்பியின் கதைகளிற்கு ஓம் இல்லை ம்..என்ன சொற்கள் மட்டுமே அவன் வாயிலிருந்து வந்தது. நிண்ட நேரத்தின் பின்னர் ஈசனும் ஏதோ புரிந்தவனாக பேசுவதை குறைத்து கொண்டு சரி எனக்கும் கொஞ்சம் அலுப்பா இருக்கு படுப்பம் என்றவாறு படுக்கைக்கு போன ஈசனுக்குள் ஆயிரம் கேள்விகள் எதற்குமே விடை தெரியாது உறங்கி போனான்.
மறு நாள் ரவி வேலைக்கு போன பின்னர் ஈசன் சாந்தியிடம் அக்கா உண்மையை சொல்லு நீயும் பெரிசா கதைக்கிறாய் இல்லை அத்தனும் உம்மெண்டு கொண்டிருக்கிறார் உங்களிற்கை ஏதும் பிரச்சனையா?? இல்லாட்டி நான் வந்தது பிடிக்கேல்லையா பிடிக்காட்டி சொல்லு நான் இப்பவே போறன் நான் கன காலத்திற்கு பிறகு உன்னை பாக்கிறணெண்டு எவ்வளவு ஆசையா வந்தனான் இஞ்சை யென்னண்டா ஏதோ இழவு வீடு மாதிரி இருக்கு என்றவும்.
சாந்தி அதற்கு மேலும் தனது உணர்ச்சிகளை அடக்கமுடியாமல் தம்பி என்னத்தை சொல் எல்லாம் என்ரை விதி யென்றவாறு ஒரு குழந்தையை போல விக்கி விக்கி அழ தொடங்கி விட்டாள்.ஈசனுக்கு அவளது அழுகையை நிறுத்துவதே பெரும்பாடாகி விட்டது .என்ணெண்டு சொல்லிட்டு அழன் எனக்கு ஒண்டும் விழங்கேல்லை என்ன பிரச்சனையெண்டாலும் சொல்லு முடிஞ்சளவு உதவி செய்யிறன் .
சாந்தி ஓரளவு தன்னை ஆசுவாச படுத்திக் கொண்டு நடந்ததையெல்லாம் மூக்கை சீறியபடியே மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டு கொண்டிருந்த ரவி
. ம் இஞ்சை தண்ணியடிக்கிறது கட்டையடிக்கிறது எல்லாம் அனேகமான எல்லா இளைஞரிட்டையும் சில நேரம் இருக்கும் ஆனால் குடும்பம் எண்டு வரேக்கை கொஞ்சம் மாறத்தான் வேணும் சில நேரம் அத்தான் கொஞ்சம் கொஞ்சமா மாறுவார் நீ அதுகளை உடைனை விடச்சொல்லி அடம் பிடிச்சு சண்டை பிடிக்காதை நான்வேணுமெண்டா கதைச்சு பாக்கிறன்.
இல்லையடா நான் ஒண்டுமே சொல்லுறேல்லை அவரும் மாறுவார் எண்டுதான் நானும் பொறுமையா இருக்கிறன் ஆனால் அவரின்ரை பழக்கம் கூடிக்கொண்டுதான் போகுதே ஒழிய குறையேல்லை அதை விட இப்ப வீட்டுக்கே சில நேரங்களிலை வாறது இல்லை ஏன் எங்கை போறார் எண்டு கேக்க ஏலாது கேட்டா அது பெரிய பிரச்:சனையாயிடும் நீயும் ஒண்டும் அவரிட்டை கேக்காதை பிறகு நான் சொல்லித்தான் நீ கே;கிறாயெண்டு அது வேறை பிரச்சனையா போகும் .எந்த நேரம் என்ன நடக்குமெண்டு தெரியாமல் தினம் தினம் செத்து பிழைக்கிற வாழ்க்கையா போச்சு எனக்கு.
ஆனால் இதையொண்டையும் நீ ஊருக்கு சொல்லி போடாதை பிறகு அங்கை அப்பர் அம்மா வேறை என்னாலை யோசிச்சு அவைக்கு மேன் பிரச்சனை ஏதோ என்ரை தலைவிதி இப்பிடி அது என்னோடை போகட்டும். நான் கும்பிட்ட தெய்வங்கள்: தான் எனக்கு வழி காட்ட வேணும் எண்று ஒரு பெரு மூச்சுடன் நிறுத்தினாள்.
அக்கா எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை ஏதோ பக்குவமா அத்தானோடை கதைச்சு பார் எனக்கு இவ்வளவும் கேட்டா பிறகு இஞ்சை நிக்கவும் ஒரு மாதிரியிருக்கு அதாலை நான் என்ரை சினேதன் வீட்டிலை போய் நிக்கிறன் குறை நினைக்காதை. நான் போகேக்கை போன் பண்ணுறன்;.என்ற வாறு ஈசன் தனது பொதியை தயார் செய்தான்.
நானும் உன்னட்டை சொல்ல நினைச்சனான் நீ இஞ்சை நிக்கிறதும் அவருக்கு பெரிசா பிடிக்கேல்லை அதை உன்னட்டை என்ணெண்டு சொல்லுறது அதை விடை அவர் சில நேரம் உன்னோடை பிரச்சனைக்கு வந்திடுவாரோ எண்டு வேறை எனக்கு பயம் அதாலை நீ வேறையிடத்திலை நிக்கிறது உனக்கும் நல்லது கோவிக்காதையடா என்றவாறு ஈசனின் கைகளை பிடித்து கொண்டாள்.
ஈசன் தனது நண்பன் வீட்டிற்கு போய்விட இரவு வேலையால் வந்த ரவி . சாந்தி ஈசன் கொண்டு வந்த சொக்லெற்ரை சாப்பிட்டபடி தொலை காட்சி பாத்து கொண்டுருந்ததை கண்டதும்
எங்கை உன்ரை தம்பி ஆழை காணேல்லை
சாந்தி எழுந்தவாறு அலன் யாரோ தன்ரை சினேதன் வீட்டை நிக்கிறணெண்டு போட்டான் போகேக்கை வருவானாம் உங்களிட்டையும் சொல்ல சொன்னவன்.
ரவி அலமாரியிலிருந்த முதல்நாள் ஈசன் குடுத்த விஸ்கியில் இருந்த மீதத்தையும் இரண்டு கிளாசையும் எடுத்தவாறு என்ன என்னைப்பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாத்தையும் சொல்லி ஆளை அனுப்பிட்டியா??வா வந்து இதிலை இரு என்று சாந்தியை கூப்பிட சாந்தி தயங்கியவாறு நிக்க வாடி வந்து இரடி எண்று கத்த சாந்தி பயத்துடன் அருகில் போய் இருந்தாள்.
இரண்டு கிளாசில் விஸ்கியை ஊத்தியபடி நான் ஒரு முடிவுக்கு வந்திட்டன் இப்பிடியே ஒவ்வொரு நாளும் நானும் நீயும் சண்டை பிடிச்சு மூஞ்சையை நீட்டி கொண்டிருக்கிறதிலை பிரயோசனம் இல்லை.என்று கூறிவிட்டு சாந்தியை உற்று பார்த்து ஒரு புன்னகை செய்து விட்டு தனது சட்டை பையிலிருந்து ஒரு கட்டு துண்டை எடுத்து லைற்றரில் சுூடாக்கி அதனை புகையிலை தூளுடன் கலந்து பேப்பரில் சுத்தியவாறு தொடர்ந்தான்.
அதாலை நீ யோசிக்காதை உன்னை வீட்டை விட்டு கலைக்கப்பேறனெண்டு ஏணெண்டா பிரெஞ்சு காரியளிட்டை இல்லாத ஏதோ ஒரு ஒரு கிக் உன்னட்டை இருக்கு ஆனால் நீ விரும்பின மாதிரி என்னாலை மாற ஏலாது அதாலை நீ நான் விரும்பின படி மாறிடு பிறகு இரண்டு பேருக்கும் பிரச்சனையே இல்லை .
என்ற படி ஒரு விஸ்கி கிளாசை சாந்தியின் கையில் கொடுத்து விட்டு தானும் மற்ற கிளாசை தனது கையில் எடுத்து சாந்தியின் கிளாசில் சிங் என்று சொல்லி தட்டி விட்டு குடி என்றான்.சாந்தி என்ன செய்வது என்று தெரியாமல் மலைத்துப்போய் நிற்க
அவன் தனது விஸ்கியை ஒரே மடக்கில் குடித்து முடித்து விட்டு .
குடியடி குடி குடி குடி தம்பி கொண்டந்த சொக்கிலேற்ரை ஆசையா திண்டனியல்லே இதுவும் உன்ரை தம்பிதான் கொண்டந்தவன் குடி என்றவாறு அவளது கிளாசை அவளது வாயில் வைத்து திணித்து ஊற்றி விட கொஞ்ச விஸ்கி அவளின் தொண்டைக்குள் இறங்க அவள் திமிறி அவனை தள்ளிவிட மீதி கிளாசுடன் கீழே விழுந்துடைந்தது அவள் வேண்டாமப்பா அய்யோ தயவு செய்து என்னை விட்டு விடுங்கோ வேண்டாம் என்று கத்தியவாறு குளியலறைக்கு ஓட வெளிக்கிட அவளை கதிரையில் இழுத்து இருத்தி விட்டு அவன் சுத்திய கட்டுசிகரற்ரை புகைத்து சாந்தியின் முகத்தில் மாறி மாறி ஊதி விட்டு ஒரு மன நோயாளியை போல் சிரித்தான்.
சாந்திக்கு வயிற்ரை புரட்டிகொண்டு வாந்தி வருவது போல இருந்தது வார்த்தைகள் வரவில்லை கண்கள் பிதுங்கி தலை சுற்றுவது போல இருந்தது ஓங்காழித்த படி குளியலறைக்குள் பேனவள் கீழே விழுந்து தட்டு தடுமாளி எழுந்து குடல் வெளியே வருவது போல வாந்தியெடுத்து கொண்டிருக்க .
அவனோ விழுந்து விழுந்:து சிரித்தபடி முதல் இப்பிடித்தான் இருக்கும் போக போக பிறகு நீயே என்னை கேட்பாய் என்று சொல்லி கொண்டிருக்க வாசல் அழைப்பு மணி அடிக்கும் ஓசை கேட்டது. ரவி சினத்துடன் அடசே பக்கத்து வீட்டு காரன் வந்திட்டானாக்கும் ஒரு சின்ன சத்தம் கேட்டா போதும் உடைனை வந்திடுவான் இண்டைக்கு இவனுக்கு இருக்கு என்று நினைத்தபடி போய் கதவு துவாரம் வழியாக பாரத்தான் வெளியே இரண்டு காவல் துறை அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
hock: போய் வரும் வரை பொறுப்பது கஷ்டம்..சொல்லிட்டு ப்போங்கோ... :roll:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->