Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என் நாட்குறிப்பில்கிறுக்கியது
#41
<img src='http://music.indya.com/images/ddlj.jpg' border='0' alt='user posted image'>

கோயில் திருவிழாவில்தான்
பின் அடிக்கடி பார்த்துக்கொண்டோம்
அப்போது தான் காதல்
உன்பக்கமும் இருந்தது தெரிந்தது.....

அன்று சாமி ஊர்வலத்துடன் நானும் கூட வந்தேன்....
உன் வீட்டு வாசல் வரவும் ஓரமாய் ஒதுங்கிக்கொண்டேன்
நான் வருவேன் என்று எதிர்பார்த்திருந்திருபந்தாய் நீ..

தீவெட்டி வெளிச்சத்தில் உன் கண்கள் என்னைத்தேடியதும்...
காணாமல் கண்கலங்கியதும்..
என் அடிமனசில்; அப்படியே உள்ளது.
Reply
#42
sOliyAn Wrote:நனைந்தால்தானே தும்மலாம்? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

தும்மினால்தான் - அவள்
இதயம் வலிக்கும்
எனக்காக - அவர்
நனைந்ததை நினைத்து
Reply
#43
காதல் பிசாசாகி
பிசத்தத்தொடங்கின்
தும்மல் என்ன
தூய்மை என்ன...!

இன்று....
கவிதையும் அளவில்லாப் பொய்களும்
'பாக்கும்' படமும்
விலையில்லாப்
பரிசும் வழிந்தே போதலும்
நாளை....
மாலையும் கழுத்தும்- பின்
குழந்தையும் குட்டியுமாய்
காதலுக்கு வரைவிலக்கணம்...?!
இதோடு நின்றால்
அட சாமிக்கு ஒரு கும்பிடு
அன்றில்
கருவோடு கைவிட்டு
கருக்கலைப்போ,
வீதியோரத்தில் மனிதசிசுவோ
பரிசளித்தால்.....
நிச்சயம் காதலெனும்
பரப்புரை வேண்டாம்
அது இறந்தே போகட்டும்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#44
aathipan Wrote:<img src='http://www.thisisbradford.co.uk/escene/images/kajol.jpg' border='0' alt='user posted image'>

நீ இன்று எங்கிருக்கிறாயோ தெரியாது
ஆனாலும்
என் இதயத்தில்
இன்னும் இருக்கிறாய்

என்னை
என்னிடமே தந்தவிடு - நான்
இன்னும்
என்னைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்
துாங்க முடியாமல்
என்று
என் வாயால்
நீ கேட்க
நினைக்கிறாயா?


aathipan Wrote:பள்ளி செல்லும் நாட்களில்
நீ பார்த்துவிட்டு பாராததுபோல்
செல்வாய்...

அப்போதே எனக்கு காதல் என்று சொல்லலாம்..

ஒரு நாள் பள்ளிவிட்டு வரும்போது
பாதி வழியில் துப்பாக்கிச்சத்தம்
அது உன்வீட்டுப்பக்கம் தான்..
பதறி அடித்து ஓடிவந்தேன்..
நல்ல காலம் யாருக்கும் எதுவும் இல்லை...
ஆனால்
[Image: archana2.jpg]
பாதையை
பார்த்துப் போ
எங்காவது
மோதிச்
செத்துப் போவாய்
என்று சொல்வதற்காக
திரும்பிப்பார்த்தேன்
பாவம் - நான்
உன்னைக்
காதலித்ததாக
நினைத்துக்
கொண்டிருக்கிறாய்

பதறி அடித்து
நீ ஓடிவந்ததால்தான்
எங்களுக்கே
பிரச்சனை வந்தது
படைகளால்........
நீ
ஏதோ
காக்க வந்ததாய்
அட சீ போடா...........
aathipan Wrote:ஆனால்
கூலிப்படைகளிடம் நன்றாக வாங்கிக்கொண்டேன்..
இன்றும் நான் குனிந்து நிமிர வலிக்கிறது..
அந்த வலியுடன் உன்நினைவும் சேர்ந்திருக்கிறது..
நீ நிமிர்ந்து
நடந்தாய் - எனக்கு
ஞாபகமேயில்லை
வலியுடன்தான்
நிமிர்கிறாயா?
நிமிர்வதற்கே
முடியாமல்
பண்ணுவதற்காய்
நான் - இன்னும்
உன்னைத்
தேடிக் கொண்டிருக்கிறேன்

காணமுடிந்தால் - என்
மிலிட்டரி கணவரிடம்
சொல்லி................

கனவு கண்டே
பாடங்களில்
கோட்டை விட்டாய்
இன்னுமா?.........

கனவுகளில்
வாழாதே - இப்போதாவது
நிஜத்துடன் வாழ
முயற்சி செய்.......
மீண்டும்
என் கண்ணில்
பட்டுவிடாதே
பிழைத்துப் போ..........


<img src='http://perso.club-internet.fr/jfmarche/Logo.gif' border='0' alt='user posted image'>
<span style='font-size:22pt;line-height:100%'>அஜீவன்</span>
Reply
#45
வயதான குருவிக்கு
வாய்கொஞ்சம் நீளம் தான்

வயதானதென்று தான்
வாய்மூடிப்பொறுத்திருந்தேன்

என்னை ஏசினால் ஏற்றுக்கொள்வேன்
என் எழுத்தை ஏசினாலும் ஏற்றுக்ககொள்வேன்

காதலை அல்லவா குற்றம்
சொல்கிறீர்
பதில் சொல்லியே ஆகவேண்டும்...
காதல் என்றதும்
இந்தக்கால சினிமாவும்
நீர் செய்யத காதலும் தான் நினைவி;ல் வருகிறதோ..
அதுதான்
கருக்கலைப்பு
வீதியோரத்தில் மனித சிசு என்று
ஏதேதோ பிதற்றுகிறீர்.

மனிதனுக்கு நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்ததே காதல் தானய்யா?

உமக்கு காதல் என்றதும் காமம் தான் கண்ணில் நிற்கிறது போலும்

பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிக்கொள்ளும்
வயதாகிவிட்டதல்லவா?
Reply
#46
Unscientific Answers

Are your palms sweaty, is your heart racing, And your voice caught within your chest?

It isn't Love, it's Like.
You can't keep your eyes or hands off of them, am I right?

It isn't Love, it's Lust.
Are you proud, and eager to show them off?

It isn't Love, it's Luck.
Do you want them because you know they're there?

It isn't Love, it's Loneliness.
Are you there because it's what everyone wants?

It isn't Love, it's Loyalty.
Do you stay for their confessions of Love, because you don't want to hurt them?

It isn't Love, it's Pity.
Are you there because they kissed you, or held your hand?

It isn't Love, it's being Unconfident.
Do you belong to them because their sight makes your heart skip a beat?

It isn't Love, it's Infatuation.
Do you pardon their faults because you care about them?

It isn't Love, it's Friendship.
Do you tell them every day they are the only one you think of?

It isn't Love, it's a Lie.
Are you willing to give all of your favorite things for their sake?

It isn't Love, it's Charity.
Does your heart ache and break when they're sad?

Then it's Love.
Are you attracted to others, but stay with them faithfully without regret?

Then it's Love.
Do you accept their faults because they're a part of who they are?

Then it's Love.
Do you cry for their pain, even when they're strong?

Then it's Love.
Do their eyes see your true heart, and touch your soul so deeply it hurts?

Then it's Love.
But do you stay because a blinding, incomprehensible mix of pain and elation pulls you close and holds you?

Then it's Love.
Would you give them your heart, your life, your death?

Then it's Love.
Now, if Love is painful, and tortures us so,
why do we Love?
Why is it all we search for in life?
This pain, this agony?
Why is it all we long for?
This torture, this powerful death of self?
Why?
Because it's...
Love
Reply
#47
aathipan Wrote:யாருடைய புகழ்ச்சியை எதிர்பார்த்தும் நான் இங்கு கவிதை எழுத வில்லை....

யார் நனைநதார்கள் யார் நனைய வில்லை என்று எனக்கு கவலையும் இல்லை......

ஏட்டிக்கு போட்டியாய் கவிதைகள் வேண்டாம்......

நான் எதிர்பார்த்தது உண்மையாகிவிடப்போகிறது....

அன்புடன் ஆதீபனுக்கு,
உணர்ச்சி வசப்பட்டவன்தான் உண்மையான கலைஞன்.
அதற்காக உடனடியாக கோபப் படக் கூடாது. உங்களிடம் நிறையவே திறமையிருக்கிறது. எதாவது ஒன்று உங்களை தாக்குகிறதோ,அல்லது உங்களுக்கு பதில் எழுதுவதற்கு விருப்பமில்லையோ அதை தவிர்த்து விடுங்கள்...........
சிலவேளை அப்படி ஏன் செய்தேன் என்று ஒருவேளை பின்னர் தோன்றலாம்.இல்லாவிடில் உங்கள் எண்ணங்களை நேர்மையோடு தொடர்ந்தும் எழுதுங்கள்.ஒருநாள் நீங்கள் உங்களையே வெல்வீர்கள். இது நிச்சயம்..............

உன்னை அறிந்தால் -நீ
உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் - தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் - நீ
வாழலாம்

நான் சொல்வதை ஏற்றுக் கொள்ள மறுப்பீர்களானால்,
இன்று அல்ல என்றோ ஒரு நாள் உங்களுக்கு அது புரியும்....................
(உங்களைப் போல் உணர்ச்சிவசப்பட்டு இன்று வேதனைப்படுபவன்.................அனுபவப்பட்டவன் என்பதால் சொல்கிறேன்.)
உங்களைப் போன்றவர்கள் உதிர்ந்து விடக் கூடாது.
பூத்துக் குலுங்க வேண்டும்.அது நிறைவேறும் என்று நம்புகிறேன்.....................
[Image: claps.jpg]
aathipan Wrote:ஏட்டிக்கு போட்டியாய் கவிதைகள் வேண்டாம்......

நான் எதிர்பார்த்தது உண்மையாகிவிடப்போகிறது....
ஏட்டிக்கு போட்டியாக நான்தான் எழுதினேன்.உங்கள் கவிதைகள் என்னை ஈர்த்த போது,அதோடு உறைந்து போவேன்.சில வரிகளில் பல கோடி அர்த்தங்கள்.............சிலவேளை உங்களுக்கே தெரியாத - புரியாத திறமையாக இருக்கலாம்.

உங்கள் கவிதைப் பெண், இன்று வேறொருவருக்கு மனைவியாகி அதுவும்...............
aathipan Wrote:ஒரு நாள் பள்ளிவிட்டு வரும்போது
பாதி வழியில் துப்பாக்கிச்சத்தம்
அது உன்வீட்டுப்பக்கம் தான்..
பதறி அடித்து ஓடிவந்தேன்..
நல்ல காலம் யாருக்கும் எதுவும் இல்லை...
ஆனால்
கூலிப்படைகளிடம் நன்றாக வாங்கிக்கொண்டேன்..
என்ற வரிகளின் ஊடாக , உங்களால் இப்படியான ஒரு விபத்து நடந்து அவள் ஒரு படை அதிகாரிக்கு இரையாகி அவனோடு வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தால், அவள் என்ன நினைப்பாள் என்று யோசித்தேன்.அதை எழுத்துகளில் வடித்தேன்...........
நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களென்று..............ஆனால்.........

(நான் கதையொன்றை வாசிக்கும் போது அந்த பாத்திரமாக வாசிப்பேன்.பின்னர் அதற்கு எதிராக ஒருவர் சிந்தித்தால்................எப்படியென்று பார்ப்பேன்.என் படைப்புகளில் யாரையும் நான் வில்லத்தனமாக காட்டுவதேயில்லை.அவர்கள் சரியென்று நினைப்பது போல்தான் படைப்பேன்.பெண்ணின் பகுதியை எழுதும் போது என்னை ஒரு பெண்ணாகவோ,ஒரு குழந்தையானால் ஒரு குழந்தையாகவோ என்னை மாற்றிக் கொள்வேன்............)

பல கவிஞர்கள் விழுந்ததற்கு காரணம், அவர்களை விடுத்து வேறு ஒருவரது மனதை புரிந்து எழுத முடியாததுதான்.

உ+ம்:கண்ணதாசனின் பாடல்களை பாருங்கள்,
கடவுடளை எதிர்த்த பாடல்களும் உண்டு.கடவுளிடம் வரம் கேட்ட பாடல்களும் உண்டு.
காதலை எதிர்த்த பாடல்களும் உண்டு. காதலுக்காக உருகிய பாடல்களும் உண்டு.

aathipan Wrote:யாருடைய புகழ்ச்சியை எதிர்பார்த்தும் நான் இங்கு கவிதை எழுத வில்லை....
இதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.ஒருவன் எதையாவது எதிர்பார்க்காமல் எதுவுமே செய்வதில்லை.
உங்கள் கவிதைகளில் பாருங்கள் எங்கும் எதிர்பார்ப்புகள்,நிறைந்து (கிடந்தன)கிடக்கிறது..................சில வேளை அடி மனது சொல்வதை புறமனது சொல்ல மறுக்கலாம்.அது உண்மையில்லை.
aathipan Wrote:நான் எதிர்பார்த்தது உண்மையாகிவிடப்போகிறது....
நீங்கள் எதையோ எதிர் மறையாக எதிர்பார்த்துக் கொண்டே செயல் படுகிறீர்கள் என்பதை இந்த வரி கூறுகிறது.
நம்பிக்கை, ஒரு நாள் சாதிப்பேன் என்று எண்ணுங்கள். எதிரிகளாகவோ, கெட்டவர்களாகவோ யாரும் பிறப்பதில்லை.அது உருவாகிறது,அது மாறவும் வாய்ப்பிருக்கிறது.இல்லாவிடில் மனநல மருத்துவ மனைகளும்,சிறைகளும் தேவையில்லை. கெட்டவர்வர்களையும்,பகைவர்களையும் கொன்று போடலாம்.
தயவு செய்து கொஞ்சம் அமைதியாக யோசியுங்கள்........
ஒரு கலைஞன் அழிவதை நான் விரும்பவில்லை.

Have always balanced mind
controlle anger by love
reduce your wants
avoid unnececssary worry
-swamy sivananda

aathipan Wrote:இன்னும் வரும்

வரவேண்டும்...............
அதுவே என் பிரார்த்தனை.................
ஒருநாள் உங்கள் ரசிகனாக நானும் இருக்க வேண்டும்.

அன்புடன்
அஜீவன்
Reply
#48
<img src='http://www.thisisbradford.co.uk/escene/images/kajol.jpg' border='0' alt='user posted image'>

ஒரு நாள் நீ சைக்கிளில் வந்துகொண்டிருந்தாய்
காற்றில் உன் தொப்பி பறந்து கீழே விழுந்துவிட்டது
நான் ஏதோ பொது சேவகன் போல ஓடிவந்து எடுத்துக்கொடுத்தேன்
நீ என் பெயர் சொல்லி நன்றி சொன்னாய்.......
எத்தனை காலம் நான் ஏங்கியிருக்கிறேன்
நீ என் பெயர் சொல்லிக்கேட்க...
என் பெயரே அன்று தான் பேறுபெற்றது....
Reply
#49
aathipan Wrote:<img src='http://www.terravista.pt/nazare/2643/ka22.jpg' border='0' alt='user posted image'>

ஒரு நாள் நீ சைக்கிளில் வந்துகொண்டிருந்தாய்
காற்றில் உன் தொப்பி பறந்து கீழே விழ்ந்துவிட்டது
நான் ஏதோ பொது சேவகன் போல ஓடிவந்து எடுத்துக்கொடுத்தேன்
நீ என் பெயர் சொல்லி நன்றி சொன்னாய்.......
எத்தனை காலம் நான் ஏங்கியிருக்கிறேன்
நீ என் பெயர் சொல்லிக்கேட்க...
என் பெயரே அன்று தான் பேறுபெற்றது....

உன் ஏக்கத்தை தீர்ப்பதற்கே
அப்படி
நாடகம் ஆடினேன்
நீ குதுாகலத்தில்
திளைத்துப் போனாய்
ஆனால்
நானோ - என்
நண்பர்கள் வைத்த
போட்டியில்
வெற்றி பெற்றேன்
அன்று
வழிந்த
உன் முகத்தை
இன்றும்
என்னால்
மறக்க முடியவில்லை.
[Image: boy3.jpg]
Reply
#50
<img src='http://perso.wanadoo.fr/veronique.piaser/srilanka/guest/images/maison.jpg' border='0' alt='user posted image'>

அன்றிலிருந்து தினமும் உன்னைப்பார்க்கவேண்டும்....
ஒரு நாள் பாராவிட்டால் பைத்தியம் ஆனேன் நான்
மேற்கில் இருக்கின்ற நன்பன் வீடு செல்வதற்கும்
கிழக்கில் இருக்கும் உன்வீடு கடந்து பயணிப்பேன்
சுற்றிச்சுற்றி அங்குதான் நான் எப்பொழுதும்....
ஆனாலும் உன்வீட்டுப்பக்கம் திரும்பிப்பார்த்ததில்லை...
நீ வாசலில் நின்றாலும் பார்த்துவிட்டு
நான் பாராதது போல செல்ல முயற்சிப்பேன்
உனக்கு எல்லாம் தெரிந்திருக்கும்.....
நீ புன்னுறுவல் மட்டும் செய்வாய்...
Reply
#51
அடடா சின்னப்பையா
நீர் என்ன காதலோ கொள்கிறீர்....
மாணிக்கவாசகனும்
ஆண்டாளும்
காட்டாத காதலா
காட்டுறியள்.....!
காதல் என்று
கண்ட கன்னியர் பின்
றோட்டில் அலையும் கூத்தும்
பள்ளிப் பருவத்தில்
படிப்புவிட்டு காதலோடா..?!
சொல்லடா தம்பி
உன் காதலுக்கு வரைவிலக்கணம்.....!

உள்ள சினிமாச் சிங்காரிகள்
படம் போட்டு வரிபடிக்கும்
சின்னப்பையன் - நீ
சினிமாவால் காமத்தால்
கட்டுண்ட கதை சொல்வது
வேடிக்கை பையா....!

பொய்யுரைத்தே பழகிப்போன
உள்ளங்களுக்கு
தானெடுத்த நிலைதெரியாதோ.....!
சற்று திரும்பிப்பார்
பள்ளியிலே காதலென்று
பரிசு பெற்ற தங்கையவள்
வீட்டுக்குள் இயந்திரமாய்
உனக்கோர் அடிமையாய்
தன்னிலை கெட்டுக் கிடக்கிறாள்...!
அன்றில்
ஊர் சுற்றும் தறிகெட்ட நிலையானாள்....!
இப்படி எத்தனையோ சங்கதிகள்...!

காலம் மாறும்
இளமை கலையும்
காதலென்று
கொண்ட வெறி கலையும்
அப்போ சந்திப்பாய்
எது உண்மை என்று....!
அதுவரை
நம் வரிகளின் ஓசை
செவிடன் காதில் சங்காமே...!

நன்றி வணக்கம்...!
:evil: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#52
சருகுகள் சத்தமிடுவதால் ஆணிவேர் என்றும் அழிந்துபோனதில்லை என்று யாரோ ஒரு கவிஞர் வடித்துப்போயிருந்தார்.
நீங்கள் எழுதிக்கொள்ளுங்கள் ஆதிபன் உங்களுடன் போட்டியான் அஜீவன் அண்ணா வருவார். அவரின் ஊக்கம் உங்களை இன்னுமு; இன்னும் எழுதது}ண்டும்.

நீங்கள் காதலை காதலித்ததால் எழுதுகின்றீர்கள். சாPரத்தை காதலித்தோர் கதைகள்தான் சூத்தை என்று ஒப்பாகிவிட்டனவே !
[b] ?
Reply
#53
aathipan Wrote:யாருடைய புகழ்ச்சியை எதிர்பார்த்தும் நான் இங்கு கவிதை எழுத வில்லை....

யார் நனைநதார்கள் யார் நனைய வில்லை என்று எனக்கு கவலையும் இல்லை......

ஏட்டிக்கு போட்டியாய் கவிதைகள் வேண்டாம்......

நான் எதிர்பார்த்தது உண்மையாகிவிடப்போகிறது....

<span style='font-size:25pt;line-height:100%'>மேலே உள்ளது போல் எழுதிய தமிழ் வாசகங்களை மாற்றி, கீழே உள்ள ஆங்கில வாசங்கள் எழுதப்பட்டிருக்கிறது.</span>

[quote=aathipan]Unscientific Answers

Are your palms sweaty, is your heart racing, And your voice caught within your chest?

It isn't Love, it's Like.
You can't keep your eyes or hands off of them, am I right?...................................
why did you remove this......................?it's not nice.......
எவராவது எழுதிய கருத்துகளை நீக்குவதற்காக அல்ல
சில எழுத்துப்பிழைகளை திருத்துவதற்காக மட்டுமே <b><span style='font-size:25pt;line-height:100%'>edit</b> எனும் விசை தரப்பட்டுள்ளது.</span>

எவராவது எழுதிய கருத்துகளை மாற்றுவார்களானால், பின்னால் பதில் கருத்து எழுதுவோர்.......................என்ன...............?

[Image: mad-art-1.gif]தயவு செய்து எழுதுவதற்கு முன் தீர யோசித்து எழுதுங்கள்.
இல்லை எழுதியது சரிதான் என்றால் வாதாடி வெற்றி பெறுங்கள்.
இல்லாவிடில் எழுதியதற்கு மன்னிப்புக்கு கேட்க வேண்டியதில்லை,வருத்தமாவது தெரிவிக்கும் நாகரீகம் தேவை.
இது ஒரு நல்ல மனிதனுக்கான அறிமுகம்.
இதனால் ஒருவரும் தாழ்ந்து விட மாட்டார்கள்.
உயர்ந்துதான் நிற்பார்கள்............

இந்த வார்த்தை பலருக்கு தவறாக படலாம்.
அல்லது சுடலாம்.
ஆனால் என் கருத்து நியாயமானது.

மோகன்,இப்படியான நிகழ்வுகள் நடந்தால் EDIT பகுதியை பாவிக்க நேர்மையான எழுத்தாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்குங்கள்

அன்புடன்
அஜீவன்
[Image: fire.jpg]
Reply
#54
வணக்கம்

அஜீவன் அண்ணா சொல்வதுபோல் எடிட் பகுதி திருத்தத்திற்கு மட்டுமே தவிர கருத்தை மாற்றிக்கொள்வதற்காக அல்ல. இதற்கு மோகன் அண்ணா என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்.

ஆதிபனிற்கு இது ஒரு எச்சரிக்கையாகவும் அறிவுறுத்தலாகவும் அமையட்டும். ஒருவர் செய்யும் தவறினால் அது பலரையும் தாக்கும் அபாயம் இருக்கின்றது.


சுட்டிக்காட்டியதற்கு நன்றி அஜீவன் அண்ணா !
[b] ?
Reply
#55
அன்பின்;;; அஜீவன்
உங்கள் மனம் நொந்திருந்தால் மன்னியுங்கள்.......

நானோ அங்கிகரிக்கப்படாத கவி
நான் எழுதுபவை எல்லாம் வெறும் கிறுக்கல்கள்தான்..
அவற்றைப்படித்துவிட்டு
நிறையப்பேர் முகம் சுளிப்பது எனக்கு நன்றாக்தெரிகிறது.....

இருந்தும் முயற்சிக்கிறேன்.....

எனது மக்களாவது ஏற்றுக்கொள்வார்கள் என்றுதான்
யாழின் பக்கங்களில் கிறுக்கி வைத்தேன்.....
என் காதல்க்கிறுக்கல்களுக்கு கொஞ்சம் எதிர்ப்புத்தான்....

காதலை எடுத்துக்கொண்டது..
காதல் எல்லோரும் வாழ்வில் செய்திருப்பார்கள்....
சலிக்காமல் படிப்பார்கள் என்றுதான்...

அவர்கள் மனதில் பழைய நினைவுகளை
மீண்டும் கொண்டுவந்து முடிந்தால் இரசிக்க வைத்து
என் கிறுக்கல்களுக்கு கவிதைகள் என்ற
அங்கிகாரம் பெற முயற்சித்தேன்.

இவையெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்பில்லைத்தான்....

நீங்களும் ஏதேதோ அதன்கீழ் விளையாட்டாக எழுதிவிட்டீhகள்......

அதனால் என் கிறுக்கல்களில் உள்ள பாத்திரங்கள்கேலிக்குரியதாகபோய்விட்டது......
நான் ஏற்படுத்த நினைத்த பாதிப்பு படிப்போர் மனதில் ஏற்படாமல் போய்விட்டது...

ஒரு கலைஞனின் படைப்பை
ஒரு கலைஞன் கேலிசெய்வது
சகஜம் தான்..

ஆனால் உங்கள் நிலை உயர்ந்தது... அல்லவா...

குண்டூசி செய்கின்ற கொல்லனை
கார்கள் செய்கின்ற தொழிலதிபர்
தனக்கு நிகராக எடுத்துக்கொண்டு கேலி செய்வதோ?
விமர்சிப்பதோ நியாயமா?

நீங்கள் என் நிலையில் இருந்து சிந்திருந்தால் நிச்சயமாக எழுதி இருக்க வாய்பில்லை...
வேறு வேலைகளுக்கிடையே
நன்பன் என்ற முறையில் என் கவிதைக்கு ஏதாவது எழுதிவைக்க நினைத்திருப்பீhகள்...
அது வினையாக முடிந்தது....

இருந்தாலும் நம் நட்பு ஒடியவில்லை...
நுனிக்கருமபில் இருந்து உண்பது போல தானே நல்ல நட்பு..
இப்போது இனி;க்காவிட்டாலும் என்றோ இனிக்கும்.. என் எதிர்பார்க்கிறேன்...

இந்நிலையில் நீங்கள் செய்வதாக இருந்த உதவியை நான் ஏற்றுக்கொண்டால்
நான் சுயநலவாதியோ என எனக்கே சந்தேகம் ஏற்பட்டுவிடும்....
அதனால் உங்கள்;; உதவியை தற்காலிகமாக நிராகரிக்கிறேன்....
வெறும் நட்பு போதும்.......

கருத்தை மாற்றியதற்காக நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இது போல இனி நடக்காது பார்த்துக்கொள்கிறேன். எனக்கு இது முதலில் தெரியாது.
நான் என் கவிதைகளில் ஒன்றிரண்டைக்கூட மாற்றியுள்ளேன். முதலில் இமேஜாக இருந்தன அவை. என் கவிதை ஊற்று கொஞ்சம் வற்றிவிட்டது. விரைவில்; சந்திப்போம்.
Reply
#56
அன்பு நன்பா பரணி,

நான் வேண்டுமென்றால் சூத்தையாயிருக்காலம்! காதல் என்றும் சூத்தை ஆகாது. காதலை கத்தரிக்காயுடன் ஒப்பிடுவது வேதனை அளிக்கிறது நன்பா.
Reply
#57
kuruvikal Wrote:அடடா சின்னப்பையா
நீர் என்ன காதலோ கொள்கிறீர்....
மாணிக்கவாசகனும்
ஆண்டாளும்
காட்டாத காதலா
காட்டுறியள்.....!
காதல் என்று
கண்ட கன்னியர் பின்
றோட்டில் அலையும் கூத்தும்
பள்ளிப் பருவத்தில்
படிப்புவிட்டு காதலோடா..?!
சொல்லடா தம்பி
உன் காதலுக்கு வரைவிலக்கணம்.....!

உள்ள சினிமாச் சிங்காரிகள்
படம் போட்டு வரிபடிக்கும்
சின்னப்பையன் - நீ
சினிமாவால் காமத்தால்
கட்டுண்ட கதை சொல்வது
வேடிக்கை பையா....!

பொய்யுரைத்தே பழகிப்போன
உள்ளங்களுக்கு
தானெடுத்த நிலைதெரியாதோ.....!
சற்று திரும்பிப்பார்
பள்ளியிலே காதலென்று
பரிசு பெற்ற தங்கையவள்
வீட்டுக்குள் இயந்திரமாய்
உனக்கோர் அடிமையாய்
தன்னிலை கெட்டுக் கிடக்கிறாள்...!
அன்றில்
ஊர் சுற்றும் தறிகெட்ட நிலையானாள்....!
இப்படி எத்தனையோ சங்கதிகள்...!

காலம் மாறும்
இளமை கலையும்
காதலென்று
கொண்ட வெறி கலையும்
அப்போ சந்திப்பாய்
எது உண்மை என்று....!
அதுவரை
நம் வரிகளின் ஓசை
செவிடன் காதில் சங்காமே...!

நன்றி வணக்கம்...!
:evil: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil:

நாங்கள் தொட்டுக் கொள்ளவில்லை
முட்டிக் கொள்ளவில்லை
நமக்குள் இனிதான ஒரு உலகம்
உள்ளிருந்ததை இவர் அறியார்.
அது உனக்கும் எனக்குமான உலகம்.

நம்முலகு காதல் உலகாம்,
காமத்தீ பற்றியெரியும் புற்றாம்,
களவாகச் சுவையுணரும்,
கள்வர் வாழுலகாம்,
புலம்புகிறார் புலவர் பலர்.

அழுக்கையே தின்னுமிவர் முன்
அதாமும் ஏவாளும் என்ன
ஈசனும் , அம்மையும் கூட
உடல் தீண்டும் பண்டம்தான்.

வரிவடிப்பில் வல்ல கம்பராய்
கவிவடிக்கும் கண்ணில்லாக் குருடரிவர்.
உதடுரசல் , உடலுரசல்
இதுமட்டுமே காதலென உணர்ந்தவரின்
கண்ணிலினி நாம் வரவே வேண்டாம்.
இது காதல் இவர்க்கெல்லாம் புரியாத
புது உலகு.

09.11.03.
Reply
#58
சடத்துக்குச் சக்கரையின் இனிப்பென்ன
சங்கீதமாயினும் சடம் சடம்தான்.
லப்பா , டப்பா , லடக்கா , லொடக்கா
தப்பாயெண்ணும் குணத்தின் முன்
முத்தானாலும் அதன் முழுமை தெரியாது.

காதல் பொய்யாம்
கன்னியரெல்லாம் கத்தரிக்காயாம்
இக்கண்கண்ட எல்லாம்
களிவுகளானதால் கண்ணெல்லாம்
அதுவாய் கண்பெற்ற வானுலகப் பேய்.
Reply
#59
யார் கண்ணில் மாயை
விம்பமாகிக் காட்சியளிக்கிறது...?
நம்மிலோ....?!
தந்தோமே
காதலுக்கு உதாரணம்
'மாணிக்கவாசகனும்
ஆண்டாளும் காட்டாத காதலா'
கேட்டோமே
உங்கள் காதலுக்கு
வரைவிலக்கணம்....!
இன்னுமே தரவில்லை
தகுந்த பதில்...!
அதற்குள்
சும்மா வரிகளில்
உங்கள் காதலின் புனிதம்
செப்புவது தவறம்மா...!
கள்வனும் காட்டுவான்
தன் செயலில்
தர்மமே....!
இங்கு யாமல்ல கள்வர்
காதலென்று
மாயை வளர்த்து
மனங்கள் சிதைப்போரே
கள்வர்.....!
தெளிந்து கொள்ளுங்கள்
வரிவரையமுதல்....!

நன்றி...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#60
குருவி தன்ரை படுமோசமான அனுபவங்களை பகிருது. தன்னைப்போலை மற்றவையையும் நினைக்சு பறையுது. அதுக்கை கவிதைவேறா? கவிதையை கருத்தா பறையிறது.. கவிதை எண்டு மனிசரை கொல்லாமல்:

http://www.yarl.com/kalam/viewtopic.php?t=1180

Cry Cry :roll:
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)