தமிழினி நீங்கள் சொன்னது போலை அவாவும் திருப்பி இரண்டு போட்டிருந்தால் எனக்கும் சந்தோசம் தான் ஆனால் என்ன செய்ய இந்த கதையின் நாயகியின் சுபாவம் அப்படியில்லை பின்னர் மாறுதா எண்டு பாப்பம்
கதவு திறக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்து நேரத்தை பார்த்தாள்மறுநாள் மணி மதியம் பன்னிரண்டை தாண்டியிருந்தது ரவி தள்ளாடியபடி வந்து கொண்டிருந்தான். எழுந்து வந்து ரவியிடம் .நேற்று இரவு நடந்ததுக்கு மன்னிச்சு கொள்ளுங்கோ நான் வேணுமெண்டு அப்பிடி செய்யேல்லை அவரிலை தான் பிழை சும்மா தள்ளிவிட அவரும் விழுந்திட்டார் வேணுமெண்டா நான் அவரிட்டையும் மன்னிப்பு கேக்கிறன்.
ரவி எதுவுமே பேசாமல் போய் கட்டிலில் விழுந்தான் சாந்தி அருகே போய் என்னப்பா கோவமா சரி என்னிலை தான் பிழை உடுப்பை மாத்திட்டு படுங்கோ ஏதாவது சாப்பிட்டனீங்களோ? நீங்கள் சிகரற் தான் பத்திறீங்கள் எண்டு இவ்வளவு நாளும் நினைச்சு கொண்டிருந்தனான் ஆனால் ..என்று சாந்தி முடிக்கமுதல்.
ஓமடி கஞ்சா கட்டை தூள் எல்லாம் தான் பத்திறனான் அதுக்கு இப்ப என்ன உன்ரை வீட்டு காசிலையா பத்திறன் போடி முதலிலை வெளியிலை எண்று கத்தினான் ரவி . சாந்தி பேசாமல் அறையை விட்டு வெளியேறி குளியலறையில் நுளைந்து கண்ணாடியில் முகத்தை பார்த்தாள்.
கன்னம் வீங்கி கண்களும் சிவந்திருந்தது அன்று இருவருமே பின்னர் பேசி கொள்ளவில்லை மறு நாள் ரவி வழைமைபோல வேலைக்கு போய்விட சாந்தி வகுப்பிற்கு போகலாமா வேண்டாமா என் யேசித்தவள் வீட்டிலை இருந்து யோசிச்சு என்ன பிரயோசனம் ரவியின் கோபமும் கொஞ்ச நேரத்திலை குறைந்து விடும் எண்று எண்ணியவளாய் புறப்பட்டு லிப்றறினுள் நுளைந்தாள்.
லிப்ற் இரண்டாம் மாடியில் நிற்க அதில் சிவா ஏறி கொண்டான்.ஆகா இண்டைக்கு தனிய மாட்டு பட்டிட்டா இண்டைக்கு இவாவை நாலு கேள்வி கேக்க வேண்டும் எண்று எண்ணி சிவா சாந்தியை பார்த்த மறு கணம் எதுவும் பேசாமல் தலையை குனிந்து கொண்டான். சாந்தி அவனைப்பார்த்து வணக்கம் எண்றாள் அதற்கு சிவா தலையை குனிந்த படியே வணக்கம் என்றான்.
இருவரும் பஸ் நிலையத்தை அடைந்ததும் பஸ் வர ஏறி கொண்டனர் . உள்ளே ஒரு தனி இருக்கையில் இருக்க போன சிவா சாந்தியை பாத்து நீங்கள் இருங்கோ என கூற முதலில் மறுத்த சாந்தி பின்னர் அமர்ந்து கொள்ள சிவா சாந்தியிடம்.
நீங்கள் ஊரிலை எந்த இடம்
நான் யாழ்ப்பாணம் நவாலி
ஒ நவாலியோ நான் மானிப்பாய்
தெரியும் ரவி சொன்னவர் உங்களிற்கு தம்பையா மாஸ்ரரை தெரியுமோ தமிழ் படிப்பிச்சவர்
ஓ நல்லா தெரியும் அவரிட்டை நானும் படிச்சிருக்கிறன் அவர் உங்களிற்கு ...........
அவரின்ரை மகள்தான் நான்
ஒ அவரின்ரை மகளோ நீங்கள் நான் கண்டதேயில்லை
இப்படியாக படித்த பாடசாலை தெரிந்த சிலர் என்று சில ஊர் விடயங்களை இருவரும் பேசி கொண்டிருக்கையில.; அதுசரிமுதலே உங்களையெண்டு கேக்க வேணுமெண்டு நினைச்சனான் உங்களிற்கு ஏதும் சுகமில்லையா ??ஏணெண்ணடா கன்னம் வீங்கின மாதிரி கண்ணும் சிவந்திருக்கு......... என்று சிவா இழுக்க.
சற்று தடுமாறிய சாந்தி ஓம் சுவமில்லை அதோடை பாத்றுமிலை வழுக்கி விழுந்திட்டன் என்றுஅதுதான் கன்னத்திலை அடி பட்டிட்டிது .
அடடா பாத்றுமிலை வழுக்கி விழுந்தா கை கால் தலை தான் அடிபடுறது வழைமை ஆனால் நீங்கள் வித்தியாசமாய் விழுந்திருக்கிறியள் போலை அதுதான் வித்தியாசமாய் கன்னம் இரண்டிலையும் அடி பட்டிருக்கு எற்று சிவா கூற சாந்தியும் தன்னை மறந்து சிரித்தாள் .
சிவா இறங்க வேண்டிய இடம் வர விடை பெற்று கொண்டு போய்விட்டான்.
பின்னர் சாந்தியும் ரவியின் கோபம் குறையும் எண்றெண்ணி ஒவ்வொரு நாளும் முடிந்தளவு பொறுமையாய் ரவியுடன் கதைத்து பார்த்தாள் ஆனால் ரவியின் பேச்சும் திட்டும் இடைக்கiடை அடியும் கூடி கொண்டு போனதே தவிர குறைந்த பாடில்லை.
சில நாட்கள் ரவி வீட்டிற்கே வருவதில்லை .வந்தாலும் எரிந்து விழுந்துதான் பேசுவான். வீட்டில் செலவிற்கும் இப்போ சாந்தி பல தடைவை கேட்டால் தான் ஒருக்கா குடுப்பான். அதுவும் அவனிற்கு விஸ்கி வாங்கிய மிகுதியில்தான் வீட்டு சாமான்கள் வாங்க வேண்டும். அவன் உணவு விடுதியொன்றில் வேலை செய்வதால் அவன் அனேகமாக அங்கேயே சாப்பிட்டு விடுவான்.
மற்றபடி அப்பப்போ அவனது ஆசையை தீர்த்து கொள்ளும் ஒரு இயந்திரமாகவே சாந்தி மாறி போய் விட்டாள். சாந்திக்கும் ஏனிந்த வாழ்க்கை காலமெல்லாம் இப்படிதானா போக போகின்றது ரவி வழைமைக்கு திரும்புவான் எண்று எண்ணி மாதங்கள் நான்கு ஓடி ஏமாற்றமே மிஞ்சியது.
இதே நேரம் சிவாவுடன் அவள் அடிக்கடி கதைத்து அவனிடம் தனது துன்பங்களை பகிர்ந்து கொள்ளுமளவிற்கு அவர்களது நட்பும் வளர்ந்தது. ஒருநாள் திடீரென அவளது ஒன்று விட்ட தம்பியொருவன் இங்கிலாந்திலிருந்து தொலை பேசி முலம் தனக்கு ஒரு வாரம் விடுமுறை இருப்பதாகவும் அவளிடம் வருவதாக கூறிவிட
அவளிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை தம்பி இங்கை வந்து பாத்து அவனும் கவலை பட்டு என்ரை பிரச்சனையளை ஊருக்கு சொல்லி என்னவாக போகுதோ அதை விட அவன் வாறத்திற்கு ரவி என்ன சொலுறானோ என்று பல வித குழப்பங்களுடன் எதற்கும் ரவியிடம் தம்பி வாற விடயத்தை கூற வெண்டும் என்று முடிவெடுத்தாள்.
அன்றிரவு ரவியிடம். என்னப்பா லண்டனிலை ஒரு தம்பியிருக்கிறான் எண்டு சொல்லியிருக்கிறன் தானே அவன் அடுத்த கிழைமை வாறதா ரெலிபோன் பண்ணினவன் ஒரு கிழைமை நிப்பானாம்
சினத்துடன்:பார்த்த ரவி. நினைச்சனான் என்ன உன்கு என்னாலை பிரச்சனை உடைனை வா எண்டு அடிச்சு சொல்லிட்டியாக்கும் அவர் பஞ்சாயத்து பண்ண வாறாரோ வரட்டும் பாக்கிறன்.
அது சரி அவன் உண்மையா உன்ரை ஒண்ட விட்ட தம்பிதானோ இல்லாட்டி ஏணெண்டா அக்கா தம்பி எண்டு பாசம் பொழிவியள் பிறகென்னடா எண்டா ஒரு நாளைக்கு இரண்டு பேரையும் காணகிடைக்காது ஓடிப்போய் ஒண்டா குடும்பம் நடத்துவியள்.
சாந்திக்கு காதுகள் கூசியது சே ஏன் இப்பிடி கதைக்கிறார் இவருக்கு ஏன் இப்பிடி புத்தி போகிது எண்:று நினைத்தவாறு. என்ரை சின்னம்மான்ரை மகன் தான் ஆனால் நாங்கள ஊரிலை சொந்த சகோதரம் மாதிரித்தான் பழகினனாங்கள். ஏன் நீங்களும் கதைச்சிருக்கிறீங்கள் தானே அவனோடை
சரி சரி வரட்டும ஆனால் நாள் கணக்கா அவன் இங்கை நிக்கிறேல்லை அதோடை எனக்கு புத்தி சொல்ல தொடங்கவும் கூடாது சொல்லிவை
அவனிற்கு நான் ஒண்டும் சொல்லேல்லை ஆனால் அவன் நிக்கேக்கை நீங்கள் கொஞ்சம் உந்த பத்திறதுகளை அவனுக்கு முன்னாலை பத்தாமல் விட்டீங்களண்டா நல்லது பிறகு அவன் ஊருக்கு .. ...
என்று முடிக்கமுதல் என்னடி தொடங்கிட்டியா புத்திமதி சொல்லஎன்று கத்திய ரவியின் கையிலிருந்த சிறிய பியர் போத்தல் சாந்தியை நோக்கி பறந்து வர தற்செயலாக அவளும் விலகி கொள்ள போத்தல் சிவரில் பட்டு தெறித்தது.
வீட்டு அழைப்பு மணிஅடிக்கும் ஓசை கேட்டு ரவி கதைவை திறந்தான் பக்கத்து வீட்டு வெள்ளை காரன் கோபமாக . திருவாளர் அவர்களே தினம் தினம் உங்கள் வீட்டில் சத்தம் எங்கள் வீட்டில் குழந்தைகள் நித்திரை செய்கிறார்கள் எங்கள் பொறுமைக்கும் எல்லையுண்டு இனி சத்தம் போட்டால் காவல் துறையை அழைக்கவேண்டி வரும் என்று எச்சரிக்கை விடுத்து விட்டு போய்விட்டான்.
அன்று சாந்தி பக்கத்து வீட்டு காரனால் தப்பி விட்டாள்.ஆனால் ரவியால் இனி என்ன நடக்கும் என்பது நிச்சயமில்லாத ஒரு பயந்த வாழ்க்கையே ஆனாலும் எது நடந்தாலும் தனது தாய் தந்தைக்கு தெரிய படுத்தி அவர்களையும் கவலைபட வைப்பதில்லை என்பதில் உறுதியாய் இருந்தாள்.
அவளது தம்பியும் அவளிற்கு ரவிக்கு என்று பல பரிசு பொருட்கள் முக்கியமாக சாந்திக்கு நிறைய சொக்லெற் வகைகள் என்பன வற்றுடன்லண்டனிலிருந்து வந்து விட்டான் .அன்றிரவு சாந்தி அவனுக்கு பிடித்த உணவுவகைகளை செய்து பரிமாறி கொண்டிருக்கையில்.
அக்கா ஞாபகம் இருக்கே நாங்கள ஊரிலை ஒரு துண்டு கண்டொஸ் சொக்லெற்றுக்கு அடிபடுறனாங்கள் அதாலைதான் உனக்கு நிறைய அள்ளி கொண்டு வந்தனான். ஆசை தீர சாப்பிடு ஆனால் கனக்க திண்டு மொத்தமா வந்திடாதை பிறகு அத்தான் என்னைதான் திட்டுவார் என்று கண்ணடித்தபடி அதுசரி அத்தான் எத்தினை மணிக்கு வேலையாலை வருவார் அவர் வந்தா பிறகு சாப்பிடுவும்.
அவர் றிங்ஸ் பாவிக்கிறவர்தானே அவருக்கும் ஒரு ஸ்பெசல் ஸ்கொச் போத்தல் ஒண்டு கொண்டு வந்தனான்.அதுசரி நீ முந்தி வழ வழ எண்டு கதைப்பாய் இப்ப என்ன நடந்தது வந்ததிலை இருந்து பாக்கிறன் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுறாய் ஏன் ஏதும் பிரச்சனையோ? என்று அவளது தம்பி இடைவிடாது கேள்விகளை கேட்டு கொண்டேயிருந்தான்.
ஒண்டுமில்லையடா நீ சாப்பிடு அவருக்கு வேலை சில நேரம் பிந்திதான் முடியும் அவரை பாக்காமல் நீ சாப்பிடு என்று சாப்பாட்டை பரிமாறி கொண்டிருக்கும் போதே ரவி உள்ளே நுளைந்தான்