Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சீதனம்
#21
ஒரு இலட்சம் வாங்கி விட்டு 5 இலட்சம் கொடுத்து கூப்பிடுவதென்பது அந்த ஆணின் தேவையை புலத்தில் பெண்களின் பற்றாக்குறையை ஒட்டியது. அத்தகைய இளைஞரை நானும் கண்டிருக்கிறேன். தொலைபேசியோடையே குட்டி போட்டு புூனை மாதிரி இருப்பார்கள். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink:

அடுத்து பெண்ணின் சகோதரிமாரை கூப்பிட்டு சீதணம் கொடுத்து திருமணம் செய்து வைக்கிறார்கள் என்பது விரலுக்கு மிகுந்த வீக்கம் இருப்பதால் தானே.

ஆனாலும் ஊர் போல் இங்கல்ல. கணவன் மனைவி இருவருமே வேலைக்குப்போனால் அந்த பெண்ணின் ஒரு வருட சம்பளம். இவை எல்லாம் புர்pந்துணர்வுக்கு அப்பாற்பட்ட மனித நேயம்.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#22
இங்கு சீதணம் வாங்கும் மனநிலை அழிந்ததா ஓங்கி வருகிறதா என்பதைதத்தான் நாம் பார்க்க வேண்டும். செலவுசெய்வது என்பது அவரவரது தேவையைப்பொறுத்தது. சீதணம் வாங்காது சிலர் திருமணம் செய்து கொண்டாலும் வளர்ந்து கொண்டும் வருகிறது அது தான் உண்மை. அதாவது புூச்சியங்களின் எண்ணிக்கை கூடி வருகிறது.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#23
nalayiny Wrote:இங்கு சீதணம் வாங்கும் மனநிலை அழிந்ததா ஓங்கி வருகிறதா என்பதைதத்தான் நாம் பார்க்க வேண்டும். செலவுசெய்வது என்பது அவரவரது தேவையைப்பொறுத்தது. சீதணம் வாங்காது சிலர் திருமணம் செய்து கொண்டாலும் வளர்ந்து கொண்டும் வருகிறது அது தான் உண்மை. அதாவது புூச்சியங்களின் எண்ணிக்கை கூடி வருகிறது.

உங்கள் கருத்துகளைத் தொடர்ந்து கவனித்தும், பார்த்தும், வருகிறேன்.இது எனக்கொரு புதிய ஒரு பகுதியாகவே ஆரம்பத்தில் தென்பட்டது.

நீங்கள் எழுதும் ஒவ்வொரு வரியும், பரீட்சைக்கு குறிப்புகள் கிடைப்பது போலவே இருந்தது.

இப்படியான ஒரு சமூகத்தில் பரீட்சயப் படாமல், அது பற்றிய கேள்வி ஞானத்தை வாசிப்பை மட்டும் வைத்துக் கொண்டு சீதனக் கொடுமையை அலசுவதென்பது மிக கடினமான ஒன்று என்றே தோனன்றுகிறது.

என் தந்தை யாழைப்பாணத்தையும், என் தாய் இந்தியாவின் காரைக்குடியையும் சார்ந்தவர்களாக இருந்ததாலும் அவர்கள் காதல் திருமணம் புரிந்து கொண்டவர்களாக இருந்ததாலும், அவர்களுக்குள் சாதி மற்றும் இந்திய-இலங்கை என்ற பிரச்சனை தலை துாக்கியிருந்திருக்கலாம் என்றுதான் ஆரம்பத்தில் எண்ணத் தோன்றியது.

இப்போது ஏன் இந்த சீதனப் பிரச்சனையும் இருந்திருக்கக் கூடாது என எண்ணத் தோன்றுகிறது.

அதனால்தானோ என்னவோ என் நினைவு தெரிந்த நாள் வரை என் தாயை என் தந்தையின் குடும்பத்தினர் கண்டு கொள்ளவேயில்லை.
அவளை அவர்கள் வீடுகளுக்கும் வர அனுமதிக்கவில்லை. எமக்கும் மூன்றாம் தர பார்வையே கிடைத்தது.

இந்தியா சென்ற போது என் தாய் வீட்டார் அங்கு மரியாதைக்குரிய இனமாக வாழ்வதோடு என் தந்தையை மணம் செய்து கொண்டு என் தாய் அவர்களுக்கும், அவர்களது குலத்துக்கும் இழுக்கு தேடித்தந்து விட்டதாக அவர்கள் சம்பந்துமே இல்லாத என் மேல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்கள்.

யாரோ செய்த பாவத்துக்கு நாங்கள்தான் பலியானோம்? அல்லது ஒதுக்கப் பட்டோம்?
அன்று எனக்கு கொஞ்சம் அதிகமாகவே வலித்தது.
அதனால்தான் நீ யார் ? என்று கேட்டால் முதலில் நான் ஒரு மனிதன் என்று சொல்லுமளவுக்கு என்னை மாற்றியது.

நல்ல வேளை இப் பிரச்சனையில் என் பெற்றோர் விலகி நின்று ,தம் வாழ்வை நெறிப்படுத்துவதிலேயே வாழ்வைக் கடத்திய புத்திசாலியாக மகிழ்வோடு வாழ்ந்தார்கள்.

இங்கே பிரச்சனைகள் யாருக்கு என்றால் குழந்தைகளுக்குத்தான். ஏனைய குழந்தைகள் தம் உறவினர் , தாத்தா - பாட்டி .......................இப்படி குதுாகல குடும்பமாக வாழும் போது இவர்களது குழந்தைகள், அந்த அன்பான அரவணைப்பையும் கூட்டுக் குடும்பம் போன்ற பாசப் பிடிப்பையும் பெற்றுக் கொள்ள முடியாமல் போய் தனித்து விடுகிறது.

நாங்கள் இழந்தவற்றை மீண்டும் பெறலாம் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

ஆனால் தற்போதைய சமூகத்தில் பெரிதான மாற்றமொன்று ஏற்படாவிடினும், ஏற்பட்டு வரும் சிறிய மாற்றங்களை உருவாக்கும் தார்மீக கடமை எழுத்துகளால் கோலமிடும் எழுத்தாளர்கள் வசம் உண்டு.

அவற்றை புலம் பெயர் நாடுகளில் உள்ள நீங்கள் செய்ய வேண்டும்.

நான் புலம் பெயர் நாடுகளில் கண்ட பல நிகழ்வுகளில் ஒரு சிலவற்றை மட்டும் தொட்டுச் செல்ல முனைகிறேன்.

1.ஒரு திருமண வைபவத்தில் மணமக்களுக்கு அறுவை அரிசி ஆசீவாதம் செய்வதற்கு முன் 50 ஆயிரம் (1000 swiss Frank தாள் நோட்டுகளை) பிராங்கை பெண்ணின் தகப்பன், மணமகனிடம் ஒரு தட்டில் அதுவும் வெத்திலைத் தட்டில் வெத்திலை பரப்பிக் கொடுப்பது போல் கொடுத்தார். ( அது வீடியோவில் வர வேண்டும் என்று அவர்கள் பட்ட பாடு கோமாளித்தனமானது.)

2. மற்றுமொரு திருமணத்தில் ஒரு புதிய காரை வாங்கி வந்து திருமண மண்டபத்துக்கு முன்னால் நிறுத்தி விட்டு கார் திறப்பை அன்பளிப்பு செய்யுமிடத்தில் வைத்துக் கொடுத்து ஓடிப்போய் காரையும் ஒரு முறை வீடியோவில் காட்டுங்கள் என்று ஒற்றைக் காலில் நின்றது, சிறு பிள்ளைத் தனமாக இருந்தது.

இப்படி எத்தனையோ???????????? இவை முற்றாக அழியும் நாள் எப்போது வரும்?



இதற்குமாறான நிகழ்ச்சிகளும் உண்டு.
என் நண்பனும் எனது குழுவில் ஒரு அங்கமுமான எனது குறும்பட கதாநாகர்களில் ஒருவருமான ஒருவர் கண்ணி வெடியால் ஒரு காலை இழந்து நின்ற ஒருவரை தனது பணத்திலே வரவழைத்து தன் மனைவியாக்கிக் கொண்டு இரு குழந்தைச் செல்வங்களாடு இனிதே வாழ்வதை காணும் போது .................. நெஞ்சம் கனக்கிறது.
வானம் மழையைக் கூட பொழிவது இப்படியானவர்களால் தானோ........................

இப்படியான இதயங்கள் எங்கிருந்தாலும் வளமோடு வாழட்டும்...................................

உங்கள்
AJeevan
Reply
#24
<b>சீதனம் என்பது அறியாமையிலிருந்து உருவாகியிருக்கின்ற சமூகக் கொடுமை
இப்படிச் சொல்கிறார் தமிழீழ மகளிர் அணிப் பொறுப்பாளர் தமிழினி அவர்கள்.

[b]அவரது மற்றைய கருத்துக்களையும் கேட்க விரும்பின்
ஐபிசி இணையத்தளத்தில் 5.9.03 இலும், 6.9.03 இலும் பதிவு செய்யப் பட்டிருக்கும்
கலாவின் அக்கினி நிகழ்ச்சியைக் கேட்டுப் பாருங்கள்.</b>

http://www.ibctamilradio.com/
Nadpudan
Chandravathanaa
Reply
#25
சீதனம் ஒரு பெண்ணுக்கு கொடுக்கப்படவேண்டிய ஒண்றே அதே போல சீதனத்தை தாயான ஒரு பெண் தாம்பாளத்தில் வாங்கவேண்டிய ஒண்றே?
Reply
#26
[size=18]சீதணம் கொடுப்பவருக்கும் பிரச்சனையில்லை.. சீதணம் வாங்குபவருக்கும் பிரச்சனையில்லை.. ஏங்குபவருக்குத்தான் பிரச்சனை..
திருமணமுடித்தபின் அவர்களை தனியாக இயங்க அனுமதிப்பார்களோ..
பெண்குடும்பமோ ஆண்குடும்பமோ அவர்களது பொருளாதாரத்தில் தங்கியிருக்காமல் அவர்களது பொருளாதாரத்திற்குத் தக்கதாக அவர்களை வாழ விடுவார்களோ..
தமது தமிழ்ச் சமுதாயத்தில் குடும்பங்களையுமல்லவா திருமணமுடிக்கிறார்கள்.. அதனாலத்தான் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை..
கொடுத்தாலென்ன.. வாங்கினாலென்ன.. அது கொடுப்பவர் வாங்குபவர் பிரச்சனை..

பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள் அதுசீதணம் என்றும் ஒரு விவாதம் நடந்தது.. பெண் வேலைக்குப்போய் கொண்டுவந்தால் அது சீதணம்.. ஆண் கொண்டுவந்தால்.. அது சீ.....தனம்

செல்வச் செழிப்புடன இருந்தகாலத்தில் சீதணம் பெரியவிடயமாகத் தெரியவில்லை.. கொடுத்தவனும் நல்லாயிருந்தான்.. வாங்கினவனும் நல்லாயிருந்தான்.. வீடுவாசல் காணிபூமியெண்டு ஏதொ இருந்தது..

தற்போது.. திருமணமுடித்தவுடன் இருப்பதற்கு இடம்வேண்டும்.. வசதிவேண்டும்..
வீட்டுவிலை 200-300 ஆயிரம். இருபகுதியும் ஏதாவது செய்தால் தவிர வாழமுடியாது.. இல்லையேல் வீடுமுழுவதும் வாடகைக்குவிட்டு ஒரு அறையில் முடங்கவேண்டும்.. எது விருப்பம்.. முடிவுசெய்யுங்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#27
சீதனம் என்பது அறியாமையிலிருந்து உருவாகியிருக்கின்ற சமூகக்கொடுமை என்றாலும், இன்றுள்ள.... தற்போதைய நிலையில் இந்த சமூகக்கொடுமை அறிந்துகொண்டுதான் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.

நட்புடன்,
தமிழ்செல்லம்.
Reply
#28
(சீ) தனம்
என்றால் தனம்;-செல்வம் சொத்து
அதை வேண்டாம் என்றுதான் அர்த்தம்.
நமது புழக்கத்தில் சீ என்றால் வேண்டாம் கூடாது என்பதற்குத்தான் உபயோகிப்போம். அப்படித்தானே நண்பர்களே
[b] ?
Reply
#29
ஒரு ஆண் 50000 முதலீடுசெய்தால் அது தேவை..அவசியம்.. பெண்ணிடம் 50000 முதலீடுசெய் என்றால் அது சீதணமாகிவிடுகிறது.. இருக்கப்போவதோ இருவடும்.. ஆனால்.. ஆண் உழைப்பது வீட்டுச் செலவுகளுக்கு.. பெண் உழைப்பது.. நகைக்கும் புடவைக்கும் மேக்கப்புக்கும்.. இது எப்படி நியாயமாகும்..?

அவர் உரை.. இவர் உரை.. எல்லாம்.. உண்மையை மழுங்கடிக்க உருவாக்கப்பட்ட தோற்றமே தவிர.. வேறெதுவுமில்லை.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#30
[quote]Mathivathanan[/color]
சிகரட், தண்ணி எல்லாவற்றையும் வீட்டுக் கணக்கிலேயே போட்டுவிடலாம் என்கிறீர்களா?
சரி..சரி..
Reply
#31
[quote=Mullai][quote]Mathivathanan[/color]
சிகரட், தண்ணி எல்லாவற்றையும் வீட்டுக் கணக்கிலேயே போட்டுவிடலாம் என்கிறீர்களா?
சரி..சரி..
சிகரட் தண்ணி குடிக்கிறவையிட்டை அதைப்பற்றிக் கேப்பம்.. தண்ணி குடிக்கிறவை மற்றப்பக்கம் கூடிக்கொண்டு வருகுது.. அவை என்ன சொல்லுறினமெண்டும் கேப்பம்.. குடிக்க சாட்டு உடம்பு அலுப்பாம்.. வேலைக்குப் போறவையாம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#32
இனிக் கதைச்சு பிரயோசனம் இல்லை .விதண்டா வாதங்கள் தான். வீணாக பக்கங்களின் எண்ணிக்கை கூடுவது தான் மிச்சம். நான் பிடிச்ச முயலுக்கு காலே இல்லை என்பவர்கள் தான் அதிகம் . நன்றி வணக்கம். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink:
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#33
nalayiny Wrote:இனிக் கதைச்சு பிரயோசனம் இல்லை .விதண்டா வாதங்கள் தான். வீணாக பக்கங்களின் எண்ணிக்கை கூடுவது தான் மிச்சம். நான் பிடிச்ச முயலுக்கு காலே இல்லை என்பவர்கள் தான் அதிகம் . நன்றி வணக்கம். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink:
நளாயினி.. என்ன எங்கை ஓடுறியள்.. நானும் எழுதாட்டில் ஏறிக் குந்தீடுவியளே தலைக்குமேலை..
சுப்பமாக்கற் ட்றிங்ஸ் ஐலுக்குள்ளை பாருங்கோ யார் நிக்கிறதெண்டு. ஆம்பிளையள் குறைவு. சிகரட் கவுண்டறிலையும் கேக் ஐலுக்கிள்ளையும் பெரிய கியூ. யாரெண்டு நினைக்கிறியள்.. எல்லாம் பொண்டுகள்தான். நல்லகாலம் உவளவை அதுக்கிள்ளை நிக்கிறதாலை எனக்குச் சுவம் போறதும் தூக்கிறதும் வாறதுமா கெதியா வரக்கூடியதாயிருக்கு. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#34
கணவனிடம் காசை கொடுத்துவிட்டா பெரிய செலவாகிவிடுமே. என நினைத்து அவர்களாய் போய் கடையில் வாங்கி வந்து கணவனிற்கு கொடுக்கிறார்களோ என்னவோ? யார் கண்டது. இதிலை சிக்கனப்படுத்தி அலங்காரப்பொருள்களை வாங்கி குவிக்கட்டுமன். அப்ப எங்கை பாத்தாலும் கொள்ளை என சொல்ல வாறியள். சரி சரி. நான் அப்படி சொன்னா இப்படி எழுதுவியள் இப்படி சொன்னா அப்படி எழுதுவியள் என தெரிந்ததால் நானே நீங்கள் என்ன பதில் எழுதுவியள் என ஊகிச்சு முதலே எழுதி இருக்கிறன். அது தான் கொள்ளை.

தனிய குடிச்சா என்ன சேந்து குடிச்சா என்ன.இல்லை குடிச்சிட்டு றோட்டிலை இருந்தா என்ன அவரவருக்கென சுய புத்தி என்பது இருக்கு தானே. ஐயோ ஐயோ இப்ப பிரச்சனை சீதணமப்பு.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#35
nalayiny Wrote:கணவனிடம் காசை கொடுத்துவிட்டா பெரிய செலவாகிவிடுமே. என நினைத்து அவர்களாய் போய் கடையில் வாங்கி வந்து கணவனிற்கு கொடுக்கிறார்களோ என்னவோ? யார் கண்டது. இதிலை சிக்கனப்படுத்தி அலங்காரப்பொருள்களை வாங்கி குவிக்கட்டுமன். அப்ப எங்கை பாத்தாலும் கொள்ளை என சொல்ல வாறியள். சரி சரி. நான் அப்படி சொன்னா இப்படி எழுதுவியள் இப்படி சொன்னா அப்படி எழுதுவியள் என தெரிந்ததால் நானே நீங்கள் என்ன பதில் எழுதுவியள் என ஊகிச்சு முதலே எழுதி இருக்கிறன். அது தான் கொள்ளை.

தனிய குடிச்சா என்ன சேந்து குடிச்சா என்ன.இல்லை குடிச்சிட்டு றோட்டிலை இருந்தா என்ன அவரவருக்கென சுய புத்தி என்பது இருக்கு தானே. ஐயோ ஐயோ இப்ப பிரச்சனை சீதணமப்பு.
சீதணம்தான் தெரியும்.. ஏதொ நான் புகை..குடி கொண்டுவந்தமாதிரித்தான் உங்கள் கதை. நகைவேண்டி பாங்கிலை வைக்கிறவையும் சாறி வேண்டி வோட்றோப் நிரப்பிறவையும் ஒரு தொகை. வேலைக்கு போடுற உடுப்பு தேவை.. ஆனால் ஒருக்கா உடுக்க ஒரு 75-100 பவுண் குடுத்து சாறி வாங்கிறவை கொண்டுவந்து கொட்டிற சீதணத்திலையே வாங்கிறவை..? பந்தாகாட்ட புதுக்கார் தேவை வாங்கப்பண்ணுறது உவை.. பேரெடுக்கிறது யார்..? சீதணமா கார் ஒருத்தரும் இப்ப கேக்கிறேல்லை.. அப்படிக் கேட்டாலும் பொம்பிளைதான் தனக்கு சொகுசாப்போக கேள் எண்டு கேட்பிச்சு வாங்கியிருக்கும். அதுக்கும் குடுக்கிறது பேக்கிளாந்தி அண்ணனாத்தான் இருக்கும்.

சின்னப் பெடியளை மிரட்டி கதையெழுதப் பாக்கிறீங்கள். அனுபவப்பட்ட கிழடுகளிட்டைக் கேட்டாத்தான் உந்தப் பெண்டுகளின்ரை அடாவடித்தனமும் வெளியாலை வரும். உந்தப் பிள்ளையளைச்சாட்டி மடக்கிறவிதம் உவளவைக்கு கைவந்த கலை. உது படிக்கிறதுக்கு எவ்வளவும் வேண்டலாம். ஏனெண்டால் கடைசியிலை குடுக்கிதும் பிள்ளையளுக்குத்தானே. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#36
ஐயோ பாவமே நல்லாத்தான் நொய்ந்து தொய்து சொல்லுறியள். சரி சரி. முதியவர்களிடமிருந்து தெரிந்து கொள்ள நிறைய இருக்குபோல உள்ளதே. அப்பு கூறடி.நாங்களும் தெரிஞ்சு கொள்ளுவம். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink: :wink: :wink:
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#37
இப்ப தானே கிலிட்டில் நிறைய இருக்குது. பவுணா வாங்கி லொக்கறிலை அதுகும் காசு கொடுத்து வைக்க வேணுமே.நல்ல கதை நீங்கள் சொல்லுங்கோ மதி. சீலை நாதன் கடை ரவி கடை தோத்துப்போம். அலுமாரியை பாத்தா அது தானே விடாதேங்கோ மதி. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#38
சீதனம் அவர் கேட்கிறார்.... கொடுக்க முடியாவிட்டால் அடுத்த மாப்பிள்ளையைப் பார்க்கவேண்டியதுதானே....நீங்கள் கொடுக்கிறியளோ இல்லையோ பக்கத்துவீட்டார் கூடக் கொடுத்து மாப்பிள்ளையை அமுக்கிப்போடுவினம்.... சீதனம் மாப்பிள்ளைக்கே அவற்ற உத்தியோகத்துக்குத்தானே!!
முதல் நீங்கள் பெண் பகுதி எல்லோரும் சீதனம் தரமாட்டோம் என்று சொல்ல வேண்டும்...உங்களுக்குள் ஒற்றுமை இல்லை பிறகு???
கொடுக்கிறவை கொடுக்கு மட்டும் வாங்குறவை வாங்குவினம்.
Reply
#39
nalayiny Wrote:இப்ப தானே கிலிட்டில் நிறைய இருக்குது. பவுணா வாங்கி லொக்கறிலை அதுகும் காசு கொடுத்து வைக்க வேணுமே.நல்ல கதை நீங்கள் சொல்லுங்கோ மதி. சீலை நாதன் கடை ரவி கடை தோத்துப்போம். அலுமாரியை பாத்தா அது தானே விடாதேங்கோ மதி.
அப்ப உந்த நகைச் சீட்டு.. தவணைக்கு கட்டி உவை வாங்கிறதெல்லாம் என்ன கிலுற்று நகையோ..? இவ்வளவ காசுகுடுத்து உவை வேண்டிப் போடுறது கிலுற்று நகையெண்டு சொல்லுறியளோ..? அல்லது எங்களுக்கு றீல் விட்டிட்டு.. களவா அங்காலை அனுப்புறாளவையோ..? இருக்கும் இருக்கும் நடிப்புக்கு உவையைக்கேட்டுத்தான். எங்களுக்கு விறிசுவிட்டு காசை அங்கை அனுப்பிப்போட்டு கிலுற்றை கொண்டுபோய் லொக்கறிலை வச்சிட்டு சுத்துறாளவையெண்டு சொல்லுறியளோ.. உதுக்கு இன்னும் டபிளா வேண்ணவேணும்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#40
கிலிட்டை ஆரும் லொக்கறிலை வைக்க சம்மதிக்கிறார்களா?.சும்மா கதை கட்டிறதுக்கும் ஒரு அளவு கணக்கு வேண்டாமே.. நீங்கள் பேக் கில்லாடி கதை கட்டி மெட்டுப்போட்டு கருத்தெழுதிறதிலை வாழ்க வாழ்க.
[b]Nalayiny Thamaraichselvan
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)