Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கிரிக்கெட் - ஆசியக் கோப்பை 2004
#21
<span style='font-size:30pt;line-height:100%'><b>இலங்கை ஆசியக்கோப்பையை வென்றது</b></span>

<span style='font-size:25pt;line-height:100%'>இன்று நடை பெற்ற ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணி 26 ஓட்ட வித்தியாசத்தில் இந்தியாவை வென்று ஆசியக்கோப்பை கைப்பற்றியது.

முதலில் துடுப்பெடுத்து ஆடிய இலங்கை அணி 229 ஓட்டங்களை பெற்றது. அதனை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கற்றுகளை இழந்து 203 ஓட்டங்களையே பெறமுடிந்தது.</span>
[b][size=18]
Reply
#22
<img src='http://shop.indiainfo.com/stores/Shubham-Creation/yellow_red.jpg' border='0' alt='user posted image'>

[size=14]<b>சிறீலங்கா கிரிக்கெட் அணிக்கு எமது வாழ்த்துக்கள்...!</b>

(கிரமமாய் செய்திகள் தொகுத்துத் தந்த கவிதனுக்குப் பாராட்டுகளும் நன்றிகளும்...!)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#23
Quote:அதுசரி... இந்த விளையாட்டால் தாங்கள் கண்ட தீமைகளைக் கொஞ்சம் சொல்லுறீங்களா...????!
____________

அது பற்றி ஒன்டும் தெரியாது அது தான் கேட்டேன்... ஒரு பந்துக்கு அடித்துப்போட்டு ஒடிவினம்... அதை மற்றவை பாப்பினம்..அப்படி தானே..?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#24
kuruvikal Wrote:(கிரமமாய் செய்திகள் தொகுத்துத் தந்த கவிதனுக்குப் பாராட்டுகளும் நன்றிகளும்...!)



உங்கள் பாரட்டுக்களுக்கு நன்றிகள் அண்ணா
[b][size=18]
Reply
#25
tamilini Wrote:
Quote:அதுசரி... இந்த விளையாட்டால் தாங்கள் கண்ட தீமைகளைக் கொஞ்சம் சொல்லுறீங்களா...????!
____________

அது பற்றி ஒன்டும் தெரியாது அது தான் கேட்டேன்... ஒரு பந்துக்கு அடித்துப்போட்டு ஒடிவினம்... அதை மற்றவை பாப்பினம்..அப்படி தானே..?

இதுதான் சொல்லுறது அதை அதை கொஞ்சமாவது தெரிஞ்சு கொண்டு பாக்கோணும் எண்டு....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#26
Quote:இதுதான் சொல்லுறது அதை அதை கொஞ்சமாவது தெரிஞ்சு கொண்டு பாக்கோணும் எண்டு....!

எப்படி அடிக்கிறது றன்ஸ் எடுக்கிறது என்டு தெரியும்... சில நேரம் பொமுது போகாவிட்டால் பாக்கிறது.... ஆனால் நன்மை தீமை பற்றி நாம் கேட்டோம்.. ஒரு நன்மை பொழுது போகாட்ட பாக்கலாம்..!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#27
விளயாட்டு பொழுது போக்கம்சம் தானே.... அதுதான் நன்மையே... விளையாடுறவங்களுக்கு உடற்பயிற்சி.... கூட்டுறவு....அவ்வளவும் தான்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#28
<span style='font-size:30pt;line-height:100%'><b>கொழும்பு, ஆக. 2: ஆசியக் கோப்பையை இலங்கை மூன்றாவது முறையாகக் கைப்பற்றியது. </b></span>

<img src='http://www.dinamani.com/Images/Aug04/02spt6.jpg' border='0' alt='user posted image'>

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவைத் தோற்கடித்தது இலங்கை.

229 ரன்களைச் சேர்த்தால் வெற்றி எனும் எளிதான இலக்குடன் ஆடிய இந்தியா, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களையே சேர்க்க முடிந்தது.

அணியிலேயே அதிகபட்சமாக சச்சின் டெண்டுல்கர் 74 ரன்களைக் குவித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

முன்னதாக, இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன்களைச் சேர்த்தது.

பிரேமதாஸô ஸ்டேடியத்தில் பிற்பகலில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் "டாஸ்' வென்ற இலங்கை முதலில் பேட் செய்வதாக அறிவித்தது.

எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் முன்னிலை வீச்சாளர்கள் எல்லாம் சோடை போகவே, சச்சினும், சேவாக்கும் இலங்கை பேட்ஸ்மேன்களை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

சச்சின் 10 ஓவர்கள் பந்து வீசி 40 ரன்களைக் கொடுத்து ஜயவர்தனே, தில்ஷான் ஆகியோரது விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்தியாவுக்கு சிறப்பு சேர்த்தார்.

பதான் 33 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சேவாக் ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினாலும் 10 ஓவர்கள் முழுமையாக வீசி 32 ரன்களை மட்டும் கொடுத்து இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு சோதனை அளித்தார்.

ஜயசூர்யா 15: முன்னதாக, அணியின் தொடக்க வீரர்கள் (குணவர்தனே, ஜயசூர்யா) இருவரும் 31 ரன்களுக்குள் சுருண்டனர்.

குறிப்பாக, இதற்கு முந்தைய ஆட்டங்களில் சதம் அடித்து சிறப்புப் பெற்ற ஜயசூர்யா 15 ரன்களைச் சேர்த்திருந்த போது பதான் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறியது இந்திய ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்தது.

அட்டப்பட்டு, ஜயவர்தனே அரை சதம்: அதன் பின்னர் உள்ளேவந்த காப்டன் அட்டப்பட்டு, சங்கக்கார ஜோடி அபாரமாக ஆடி, தொடக்கச் சரிவை ஈடுகட்டியது.

இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 116 ரன்களைக் குவித்து இந்தியப் பந்துவீச்சாளர்களை சோதித்தது.

அட்டப்பட்டு 65 ரன்களைக் குவித்திருந்தபோது எதிர்பாராவிதமாக ரன் அவுட் ஆனார்.

அதுவரையிலான ஆட்டத்துக்கு அவர் ஆட்டமிழந்தது திருப்பமாக அமைந்தது. 87 பந்துகளை எதிர்கொண்ட அவர் 8 பந்துகளை எல்லைக் கோட்டுக்கு விரட்டினார்.

அவருடன் இணைந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்திய சங்கக்கார 6 பவுண்டரி உள்பட 53 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். சேவாக் வீசிய பந்தில் கிளீன் போல்டு ஆனார் அவர்.




ஸ்கோர் போர்டு


இலங்கை
குணவர்தனே (சி) கங்குலி (பி) நெஹ்ரா 8
ஜயசூர்யா எல்பிடபிள்யூ (பி) பதான் 15
அட்டப்பட்டு ரன் அவுட் 65
சங்கக்கரா (பி) சேவாக் 53
ஜயவர்தனே (சி) யுவ்ராஜ் (பி) சச்சின் 0
தில்ஷான் (ஸ்டம்புடு) திராவிட்
(பி) சச்சின் 22
சந்தனா எல்பிடபிள்யூ (பி) ஹர்பஜன் 8
மஹ்ரூப் ரன் அவுட் 9
வாஸ் (சி) யுவ்ராஜ் (பி) பதான் 6
ஜோய்ஸô நாட் அவுட் 6
முரளீதரன் நாட் அவுட் 4
உபரி 32

மொத்தம் (50 ஓவர்களில்
9 விக்கெட் இழப்புக்கு) 228

விக்கெட் வீழ்ச்சி: 1-28, 2-31, 3-147,
4-150, 5-174, 6-194, 7-202,
8-213, 9-219.

பந்துவீச்சு:

பதான் 7-0-33-2
நெஹ்ரா 6-0-22-1
ஜாகீர் 7-0-35-0
ஹர்பஜன் 10-0-48-1
சேவாக் 10-2-32-1
சச்சின் 10-0-40-2

நன்றி
தினமணி
[b][size=18]
Reply
#29
Quote:விளயாட்டு பொழுது போக்கம்சம் தானே.... அதுதான் நன்மையே... விளையாடுறவங்களுக்கு உடற்பயிற்சி.... கூட்டுறவு....அவ்வளவும் தான்....!
_________________

வேறை ஒன்றும் இல்லை <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#30
அதுசரி...ஏன் சிறீலங்கா அணிக்கு வாழ்த்துச் சொல்லவில்லை.... சிறீலங்கா பிடிக்காதா....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#31
இந்த அணி பிடிக்கும் அந்த அணி படிக்கும் என்டில்ல.... நல்லாய் ஆடுற அணிக்கு எமது பாராட்டுக்கள்......

சிறிலாங்கா அணிக்கு வாழ்த்துக்கள்..... மறந்து போனன் அவ்வளவு தான்...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#32
கிரிக்கெட்: இலங்கை வீரர்களுக்கு அபராதம்

<img src='http://www.thatstamil.com/images23/sachin270.jpg' border='0' alt='user posted image'>

ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை இந்தியாவைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் போட்டியில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிமுறைகளை மீறியதற்காக இலங்கை அணியின் சங்கக்கரா, தில்ஸான் மற்றும் உபல் சந்தனா ஆகியோருக்கு ஐசிசி நடுவர் அபராதம் விதித்தார்.

டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. பதான், சச்சின், சேவாக் ஆகியோர் தங்களது பந்து வீச்சால் இலங்கை பேட்ஸ்மேன்களை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

சச்சின் 10 ஓவர்கள் வீசி 40 ரன்களைக் கொடுத்து ஜெயவர்தனே, தில்ஷான் ஆகியோரது விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பதான் 33 ரன்களைக் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சேவாக் ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினாலும் 10 ஓவர்களில் 32 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் குணவர்தனே, ஜெயசூர்யா இருவரும் 31 ரன்களுக்குள் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த அட்டப்பட்டு, சங்கக்கரா ஜோடி 3வது விக்கெட்டுக்கு 116 ரன்களைக் குவித்தது.

அட்டப்பட்டு 65 ரன்களை எடுத்திருந்தபோது எதிர்பாராவிதமாக ரன் அவுட் ஆனார். 53 ரன்களை எடுத்திருந்த சங்கக்கரா சேவாக் வீசிய பந்தில் கிளீன் போல்டு ஆனார். பின்னர் வந்தவர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது.

229 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களையே எடுக்க முடிந்தது. அணியின் நட்சத்திர வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து ஆட்டமிழக்க, சச்சின் டெண்டுல்கர் மட்டும் நிலைத்து நின்று 74 ரன்களைக் குவித்தார்.

இறுதியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவைத் தோற்கடித்து இலங்கை கோப்பையை வென்றது.

போட்டியின்போது இந்திய வீரர்களைக் கிண்டலடிக்கும் வகையில் சைகை காட்டிய சங்கக்கரா, தில்ஸான் மற்றும் உபல் சந்தனாவுக்கு ஐசிசி நடுவர் மைக் பிராக்டர் அபராதம் விதித்தார். சங்கக்கராவுக்கு ஒரு நாள் ஊதியத்தையும், தில்ஸான் மற்றும் சந்தனாவுக்கு சம்பளத்தில் பாதியையும் அபராதமாக கட்ட உத்தரவிட்டார்.

தோல்வி குறித்து இந்தியக் கேப்டன் கங்குலி கூறியதாவது:

229 ரன்கள் என்பது எளிதான இலக்குதான். ஆனால் பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடாததால் வெற்றி பெற முடியவில்லை. இந்த தொடரில் வீரர்கள் அனைவரும் முழுத் திறமையை வெளிப்படுத்தவில்லை. இத் தோல்வியால் தளர்ந்து விட மாட்டோம். ஹாலந்தில் நடை பெறும் 3 நாட்கள் போட்டியில் சிறப்பாக ஆடுவோம் என்றார்.

thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#33
வெற்றியும் தோல்வியும் வீரர்களுக்கு அழகு தான், ஆனாலும் இது மாதிரி தோற்றால் இந்திய அணிக்கு அழகு இல்லை. மன தைரியமின்றி ஆடியதாக டால்மியா அவர்கள் கூறியது உண்மை தான்.

வெற்றிப் பெற்ற இலங்கை அணியினருக்கு என் வாழ்த்துகள்.
<b>
</b>
Reply
#34
<img src='http://www.webulagam.com/cricket/2004/08_odi_hollandcup/images/images/top-stripe.gif' border='0' alt='user posted image'>

<b>வீடியோகான் கோப்பை : பாக்.கிடம் இந்தியா படுதோல்வி!</b>

சனி, 21 ஆகஸ்ட் 2004
ஷோயிப் மாலிக்கின் அருமையான ஆட்டமும், இறுதிக் கட்டத்தில் அப்துல் ரசாக்கும், மொய்ன் கானும் ஆடிய அதிரடி ஆட்டமும், அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்து வீச்சும் பாகிஸ்தான் அணிக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது!

ஹாலந்தில் உள்ள ஆம்ஸ்டெல்வீன் நகரில் இன்று நடந்த வீடியோகான் கோப்பை மூன்று நாடுகள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடித்தது.

மழையால் பாதிக்கப்பட்டதால் தலா 33 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக குறைக்கப்பட்ட இப்போட்டியில், இந்திய அணித் தலைவர் சௌரவ் கங்குலியால் முதலில் களமிறக்கப்பட்ட பாகிஸ்தான் அணி, 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்களை குவித்தது.

ஆட்டத்தின் முதல் 12 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து வெறும் 52 ரன்களை மட்டுமே எடுத்திருந்த பாகிஸ்தான் அணியை, இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் பாலாஜி, கங்குலி, கும்ளே ஆகியோர் சிறப்பாக பந்து வீசிக் கட்டுப்படுத்தினர். 30வது ஓவரின் முடிவில் பாகிஸ்தான் அணி 150 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அதன் பிறகு அகார்கரையும், பத்தானையும் அடி அடியென்று அடித்து 3 ஓவர்களில் 42 ரன்களைக் குவித்தனர் ரசாக்கும், மொய்ன் கானும்.

ரசாக் 27 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 35 ரன்களும், மொய்ன் கான் 20 பந்துகளில் 3 பௌண்டரிகளுடன் 27 ரன்களும் எடுத்தனர்.

முன்னதாக அந்த அணியை ஷோயிப் மாலிக் அபாரமாக ஆடி 68 ரன்கள் எடுத்து ஸ்திரப்படுத்தினார். அருமையான ஆட்டம் அது.

193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 30 ரன்கள் எடுத்திருந்த போது வீரேந்திர சேவாக்கை இழந்தது. ஆனால் அதன் பிறகு கங்குலியும், லக்ஷ்மணும் இணைந்து சீராக ஆடி முதல் 10 ஓவர்களிலேயே 65 ரன்களை எட்டினர். அதன் பிறகு பந்து வீச அழைக்கப்பட்ட ரசாக்கின் பந்தை தூக்கியடிக்க முயன்று 25 ரன்களுக்கு கங்குலி ஆட்டமிழந்தார்.

கங்குலிக்குப் பிறகு ஆட வந்த ராகுல் திராவிட் எதிர்பாராத விதமாக ரன் அவுட்டானார். அவ்வளவுதான் இந்திய அணி நெருக்கடியில் விழுந்தது. அடுத்த 11 ஓவர்களில் மேலும் 2 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்களை மட்டுமே இந்திய அணி எடுத்தது. லக்ஷ்மண் 37 ரன்களுக்கும், யுவராஜ் 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்த பிறகு இந்திய அணியின் மற்ற விக்கெட்டுகள் மளமளவென்று சரிய 27 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பாகிஸ்தான் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றையப் போட்டியின் ஆட்ட நாயகனாக 67 பந்துகளில் 7 பௌண்டரிகளுடன் 68 ரன்களை எடுத்தது மட்டுமின்றி மிகச் சிறப்பாக பந்து வீசி 18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷோயிப் மாலிக் தேர்வு செய்யப்பட்டார்.



நன்றி
வெப் உலகம்
[b][size=18]
Reply
#35
<b>இந்தியா-ஆஸி. போட்டி மழையால் கைவிடப்பட்டது!</b>

திங்கள், 23 ஆகஸ்ட் 2004
ஹாலந்தில் நடைபெற்று வந்த வீடியோகான் மூன்று நாடுகள் கிரிக்கெட் போட்டியில் மழையால் ஆடும் வாய்ப்பை இழந்த இந்திய அணி, போட்டியிலிருந்து வெளியேறிவிட்டது!

இன்று காலை முதல் பெய்த மழையால் ஆட்டத்தின் துவக்கம் பாதிக்கப்பட்டு பிற்பகல் 3 மணியளவில் துவங்கியபோது, பூவா-தலையா வென்று முதலில் ஆடிய ஆஸ்ட்ரேலிய அணி, இந்திய அணியின் அருமையான பந்து வீச்சை எதிர்கொண்டு வேகமாக ரன்களை குவிக்க திணறினாலும், மைக்கேல் கிளார்க்கின் அபார ஆட்டத்தின் உதவியால் 31.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை எடுத்தது.

அப்பொழுது மீண்டும் மழை பெய்யத் துவங்கியது. அரை மணிநேரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை பெய்ததால் மீண்டும் போட்டியை நடத்துவது சாத்தியமில்லை என்பதை சுட்டிக்காட்டிய நடுவர்கள் போட்டி கைவிடப்படுவதாக அறிவித்தனர்.

இதன் மூலம் இரு அணிகளுக்கும் 3 புள்ளிகள் வழங்கப்பட்டது. 2 போட்டிகளில் 3 புள்ளிகளை மட்டுமே பெற்ற இந்திய அணி இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. ஆஸ்ட்ரேலியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியிலும் சந்திக்கும் நிலை உறுதியாகிவிட்டது.

தலா 32 ஓவர்களாக குறைக்கப்பட்ட இப்போட்டியில் அதிரடியாக ஆட வேண்டும் என்கின்ற முடிவுடன் களமிறங்கிய ஆஸ்ட்ரேலிய துவக்க ஆட்டக்காரர்களுக்கு பத்தான், நெஹ்ரா ஆகியோரின் பந்து வீச்சு சவாலாக இருந்தது. எதிர்பார்த்த வேகத்தில் ரன்களைக் குவிக்கத் திணறினர். நெஹ்ராவின் பந்து வீச்சில் 4வது ஓவரில் துவக்க ஆட்டக்காரர் ஹாடின் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த பாண்டிங் அதிரடியாக அடித்தாடி ரன் எண்ணிக்கையை உயர்த்தினார். ஹெய்டனும் சிறப்பாக ஆடினார்.

10வது ஓவர் முடிவில் ஆஸ்ட்ரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 54 ரன்களை எடுத்திருந்தது. பாலாஜி பந்து வீச அழைக்கப்பட்டார். ஆட்டத்தின் போக்கு மாறியது. வேகத்தை மாற்றி மிக அருமையாக பந்து வீசிய பாலாஜி முதல் 2 ஓவர்களில் ரன் குவிப்பை கட்டுப்படுத்தியது மட்டுமின்றி, தனது 3வது ஓவரில் ஹெய்டனையும், பாண்டிங்கையும் அடுத்தடுத்து வீழ்த்தினார்.

அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்ந்ததனால் பின்னுக்குத் தள்ளப்பட்ட ஆஸ்ட்ரேலிய அணியை சேவாக்கும், கும்ளேயும் அருமையாகப் பந்து வீசி கட்டுப்படுத்தினர். கும்ளே தனது முதல் ஓவரிலேயே அதிரடியாக ஆடத் துவங்கிய சைமண்ட்ஸை வீழ்த்தினார். சேவாக் மார்ட்டினை க்ளீன்போல்ட் செய்து 12 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார்.

அதன் பிறகு ஆட வந்த மைக்கேல் கிளார்க் முதல் பந்திலிருந்து தான் ஆட்டமிழக்கும் வரை ஆடிய ஆட்டம் அபாரமானது. 28 பந்துகளில் 42 ரன்கள் குவித்த கிளார்க்கின் அபார ஆட்டத்தினால் அந்த அணி 31வது ஓவரில் 150 ரன்களைக் கடந்தது.

5 ஓவர்களில் 42 ரன்களை குவிக்க உதவினார் கிளார்க். மீண்டும் பந்து வீச வந்த பாலாஜியின் பந்தை கிளார்க் தூக்கியடிக்க அந்தப் பந்து சிக்ஸர் தான் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்க, லாங் ஆனில் நின்றுக் கொண்டிருந்த வீரேந்திர சேவாக் மிக அருமையாகக் கணித்து எம்பி பிடித்தார். அபாரமான கேட்ச்.

பாலாஜி 6 ஓவர்கள் அபாரமாக வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கும்ளே, சேவாக், நெஹ்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

கடைசி ஓவரில் ஆஸ்ட்ரேலியா 4 பந்துகளை மட்டுமே ஆடியிருந்த நிலையில் மழைக் கொட்டத் துவங்கியது. அத்தோடு இந்தப் போட்டியில் இந்தியாவின் விதியும் முடிவுக்கு வந்தது.








நன்றி
வெப் உலகம்
[b][size=18]
Reply
#36
<b>3 நாடுகள் கிரிக்கெட்
ஆஸ்திரேலìயா- பாகிஸ்தான் இன்று மோதல் </b>


ஆம்ஸ்டர்டாம், ஆக. 25-

3 நாடுகள் இடையேயான கிரிக்கெட் போட்டியில் இன்று (புதன்கிழமை) நடக் கும் ஆட்டத்தில் ஆஸ்தி ரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

3 நாடுகள் கிரிக்கெட்

இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய 3 நாடுகள் இடையேயான கிரிக்கெட் போட்டி ஆலந்தில் நடைபெற்று வருகிறது.

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் பலப் பரீட்சை நடத்தும்.

இதுவரை இரண்டு ஆட்டங் கள் முடிந்து உள்ளன. முதல் ஆட்டத்தில் இந்தியா பாகிஸ் தான் அணியிடம் மோசமாக தோற்றது. இந்தியா-ஆஸ்திரே லியா இடையேயான 2-வது ஆட்டம் மழையால் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் வெற்றிப்புள்ளி இரு அணிக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான்

இந்த நிலையில் கடைசி `லீக்' ஆட்டம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதில் ஆஸ்திரே லியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

பாகிஸ்தானை பொறுத்தவரை யில் இந்தியாவை தோற்கடித் ததன் மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்தியா-ஆஸ்திரேலியா அணி கள் தலா 3 புள்ளிகள் பெற் றுள்ளன.

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையேயான இன்றைய ஆட் டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றாலோ, மழையால் ஆட் டம் ரத்து செய்யப்பட்டாலோ இந்தியா இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இëழக்க நேரிடும். மாறாக அதிக ரன் வித்தியாசத் தில் பாகிஸ்தான் வெற்றி பெற் றால் மட்டுமே இந்திய அணிக்கு இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு கிடைக்கும்.


நன்றி
தினத்தந்தி
[b][size=18]
Reply
#37
<span style='font-size:30pt;line-height:100%'><b>இலங்கை & தென்னாபிரிக்கா</b></span>

<span style='font-size:25pt;line-height:100%'>தற்போது நடை பெற்று கொண்டிருக்கும் தெனாபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டியில்... முதலில் துடுப்பெடுத்து ஆடிய தென்னாபிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கற்களையும் இழந்து 191 ஓட்டங்களை பெற்று இலங்கை அணிக்கு 192 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.</span>
[b][size=18]
Reply
#38
<span style='font-size:30pt;line-height:100%'><b>இலங்கை வெற்றி</b></span>


<span style='font-size:25pt;line-height:100%'>தற்போது முடிவடைந்த இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி 4 விக்கற் வித்தியாசத்தில் 47.4 ஓவர்களில் 192 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது. ஆட்டனாயகனாக 97 ஓட்டங்களை பெற்ற அத்தப்பத்து தெரிவுசெய்ய பட்டுள்ளார்.</span>


அடுத்த போட்டி 28ம் திகதி
[b][size=18]
Reply
#39
<span style='font-size:30pt;line-height:100%'><b>பாகிஸ்தான்-ஆஸ்ட்ரேலியா போட்டி ரத்து!</b></span>

<span style='font-size:25pt;line-height:100%'>புதன், 25 ஆகஸ்ட் 2004
ஹாலந்து ஆம்ஸ்டெல்வீனில் நடைபெற்று வரும் வீடியோகான் கோப்பை முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற வேண்டிய 3வது லீக் போட்டியான பாகிஸ்தான்-ஆஸ்ட்ரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி மைதானம் மழையால் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளதால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்தானது.

இதனால் மீண்டும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில் ஆஸ்ட்ரேலியா (6), பாகிஸ்தான் (9) அணியை 28ம் தேதி இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறது.

ஆனால் இறுதிப் போட்டியும் மழையால் பாதிப்படையும் சூழ்நிலை நிலவி வருகிறது.

வீடியோகான் கோப்பை துவங்குவதற்கு ஏறத்தாழ ஒரு வாரத்திற்கு முன்பே இத்தகைய தட்ப வெப்ப நிலை நிலவும் என்பது அமைப்பாளர்களுக்கு தெரிந்த ஒன்று தான். இருப்பினும் போட்டியை வேறு தேதிகளுக்கு மாற்றி அமைக்க முடியாத சூழ்நிலை என்னவென்று இதுவரை ஆம்ஸ்டர்டாம் கிரிக்கெட் கழகம் விளக்கவில்லை.</span>




நன்றி
வெப் உலகம்
[b][size=18]
Reply
#40
<img src='http://eur.news1.yimg.com/eur.yimg.com/ng/sp/ap_photo/20040828/all/l1210352.jpg' border='0' alt='user posted image'>




<span style='font-size:25pt;line-height:100%'>இலங்கை & தென்னாபிரிக்காவுக்கு இடையில் தற்போது நடந்து முடிந்த 4வது ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி 46.1 ஓவர்களில் 7 விக்கட் வித்தியாசத்தில் 236 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது. ஆட்டநாயகனாக் ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களை பெற்ற குமார் சங்ககார தெரிவு செய்யப்பட்டார்.

முதலில் துடுப்பெடுத்து ஆடிய தென்னாபிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கற்களை இழந்து 235 ஓட்டங்களை பெற்று கொண்டது.</span>
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)