Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம்.
kurukaalapoovan Wrote:இளையதம்பி முதல் நீர் யாருடைய எடுபிடியா இஞ்ச வந்து நஞ்சு விதைக்கிறீர் எண்டு எழுதும்.நீர் ஒருவருடைய எடுபிடியும் இல்லாட்டி எமது சமூகத்திற்கும் போராட்டத்திற்கும் விரோதமான பிற்போக்குவாதியாகத்தான் கருத்து எழுதுறீர்.

முன்பு மாணவர்களாக இருந்தவர்கள் 30 வயது வந்தபின்னரும் மாணவர் அமைப்பு இளையோர் அமைப்பு என்று இருக்க முடியாது. அவர்களுடைய தனிப்பட்ட குடும்ப பொறுப்புக்களுக்கு அப்பால் தேசியத்திற்கு உழைக்க விரும்பும் பொழுது அவர்களுடை பங்களிப்பு வேறுநிலையில் இருக்குமே அன்றி இன்னமும் மாணவர் அமைப்பு இளையோர் அமைப்பு என்ற நிலையில் அல்ல.

புதியசந்ததி தேசிய ஆதரவாளர்களை வழர்த்தெடுக்க இளையோர் அமைப்பு போன்றவை அவசியம். அங்கு தான் ஆரம்ப நிலை இளைய தலமுறை ஆதரவாளர்கள் தமது கடமைகளை உணரவும் தமது காலத்திற்கு ஏற்ப அவற்றை முன்னெடுக்கவும் தயார்பண்ணிக் கொள்ளவும் உதவுகிறது.

இளையவர்கள் முன்னைய சந்ததியை விட ஜாலியாக இருப்பதில் எந்த தவறும் இல்லை. தமது கடமைகளை உணர்ந்து பங்களிப்பு செய்கிறார்களா என்பது தான் முக்கியம். அவர்களிடம் உள்ள திறமைகள் புதிய சிந்தனைகள், காலத்தோடும், புலம்பெயர்ந்து வாழும் சமூகத்தோடும் ஒத்த கலாச்சாரங்கள் எமது போராட்டத்தை வெற்றியோடு முடித்து வைக்க அத்தியாவசியமானது.

சர்வதேச நிலையில் கொள்கை பரப்பு ஆதரவு திரட்டல், தொழில்நுட்ப பங்களிப்பு என்பவற்றை பொறுத்தவரையில் இளையவர்களின் கையில் தான் பெரும் பங்கு உண்டு.




<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
தவறுகளை சுட்டிக்காட்டுகின்ற என்னை தாக்குவதை விட்டுவிட்டு, திருந்துவதற்கும் திருத்துவதற்கும் வழியைப் பாருங்கள். குறுக்காலபோவான் போன்றவர்களால்தான் தமிழர்களுக்கு எல்லா இடங்களிலும் தடை. நான் செய்வது சுயவிமர்சனம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

பல திறமையான படித்த மாணவர்களைக் கொண்ட இளையோர் அமைப்பு சரியான வழிகாட்டல் இருந்தால் நிறைய சாதிக்கலாம். ஆனால் பழையவர்கள் தாங்கள் போன வழியிலேயே அவர்களையும் அழைத்து செல்கிறார்கள். புதிய மொந்தையில் பழைய கள். இதனால் யாருக்கு என்ன பயன்?
Reply
<span style='font-size:25pt;line-height:100%'>உலக தமிழ் ஊடகவியலாளர்களே ஊடகங்களே ஒரு நிமிடம்</span>

24.04 .06 அன்று சிறீலங்காதலைநகர் கொழும்பில் பிற்பகல் 1.35 மணிக்கு ஒஐ குண்டுவெடிப்பு நடந்து அதில் சிறீலங்கா இராணுவத்தை சேர்ந்த எட்டுபேர் கொல்லப்பட சிறீலங்கா ராணுவத்தின் தளபதியாகிய சரத் பொன்சேகா உட்பட இருபத்தியேளு பேர் படுகாயமடைந்தனர்.

இது நடந்த சம்பவம் புலம் பெயர் தமிழர்கள் உட்பட உலக மக்கள் அனைவருமே அறிந்த செய்தி.இந்த சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே சிறீலங்காவின் அரச சார்பு மற்றும் சிங்கள ஆங்கில ஊடகங்களில் இச்செய்தி சரத் பொன்சேகாவை குறிவைத்து தற்கொலை குண்டு தாக்குதல் என்று பரபரப்பாக செய்திகள் வெளிவர தொடங்கின அதனையே சில வெளிநாட்டு ஊடகங்களும் செய்தியாக அறிவித்திருந்தது.இதிலென்ன பிரச்சனை நடந்தவைதானே செய்தியாக வந்தது என்று நாங்கள் யோசிக்கலாம் .ஆனால் அந்த செய்தியையே பல தமிழ் ஊடகங்களும் சரத் பொன்சேகாவை குறிவைத்து தற்கொலை குண்டு தாக்குதல் தலைப்பு செய்தியாக போட்டிருந்தன அதுதான் இங்கு கவலை கொள்ளவேண்டிய விடயம்.

குண்டு வெடிப்பு ஒரு சம்பவம் அது எப்படி நடந்தது என்று சிறீலங்கா காவல் துறையோ அல்லது புலனாய்வு துறையோ சரியான முறையில்விசாரனைகளை மெற்கொண்டு அதன் அறிக்கையை சமர்ப்பிக்க முதலே ஏன் விசாரணைகள் மேற்கொள்ள முதலேயே அது தற்கொலை குண்டுதாக்குதல் என்று செய்தியும் போதாததற்கு அது ஒரு பெண்தான் கர்பிணி பெண்போல வந்து குண்டை வெடிக்கவைத்தார் என்றும் பின்னர் அடுத்தடுத்த செய்திகளும் வெளியாகின .அதுவும் ஒரு இராணுவத்தினன் காலை அந்தபெண் நடமாடியதை கண்டதாகவும் அந்த பெண் தான் குண்டுதாரியாக இருக்கும் என்ற சந்தேகம் பின்னர் அப்படியே உண்மை செய்தியாக மாறி விட்டது.இதுவும் எந்த தடவியல் ஆதாரங்களோ அல்லது பகுப்பாய்வு நடத்தி முடித்த அறிக்கைகளுடாகவே உறுதி படுத்தாமல் இறந்த ஒரு வரின்உடல் பாகத்தின் பகுதியை மட்டும் படத்தில் போட்டு சிறீலங்கா பத்திரிகைகளின் வழைமையான புலிகளின் மீது குற்றம் சுமத்தவென்றே தயாரிக்கபட்ட வானவேடிக்கை செய்திகள்.அவர்கள் அரசுதலைவர் காலில் கல்லடி பட்டால்கூட புலிகளின் சதி என்று செய்தி எழுதி பழக்கபட்டு விட்டவர்கள் அப்படித்தான் எழுதுவார்கள்

.இதனையே பின்னர் பெரும்பான்மையான தமிழ் ஊடகங்களும் வழிமொழிந்திருந்தது தான் வேடிக்கை.அதனை படித்தவர்களும் அதுதான் உண்மையென்று நம்பி விட்டனர். இதுவே சிறீலங்கா அரசிற்கும் அதன் ஊடகங்களிற்கும் கிடைத்த மிக பெரும் வெற்றியாகும்.இனி அவர்கள் இந்த குண்டு வெடிப்பை புலிகள்தான் செய்தார்கள் என்று வெளியுலைகை நம்பவைக்க வேறு உதாரணங்கள் தேடி போக வேண்டிய அவசியம் இல்லை இந்த தமிழ் ஊடககங்களில் வந்த செய்தியே போதுமானது.

காரணம் செய்திகளில் தற்கொலை குண்டு என்கிற பதம் தான் காரணம் . சிறீலங்காவில் இலங்கை இராணுவத்தை தவிர வேறு பல இராணுவக்குழுக்கள் இருப்பது கண்காணிப்பு குழுவும் உறுதிசெய்த நிலையில் வேறு நாடுகளிற்கும் அந்த விடயங்கள் தெரியும்.இந்த ஆயுதகுளுக்களாலேயே இலங்கையில் அமைதியை குலைக்க பல படுகொலைகள் நடத்தபட்டதும் உறுதி படுத்தபட்டிருக்கன்றது.

உதாரணமாக இந்த குண்டு வெடிப்பின் பின்னர் கண்காணிப்பு குழு அறிக்கையை பலரும் படித்திருப்பீர்கள் அந்த அறிக்கையில் கூறபட்டிருப்பதாவது சிறீ லங்காவில் என்னபிரச்சனை நடந்தாலும் ஆதாரமின்றிசுலபமாக புலிகள் மீது குற்றம் சுமத்தி விடுகிறார்கள்.கதிர்காமர் கொலையிலும் அப்படித்தான் குற்றம் சுமத்த பட்டது ஆனால் நாங்கள் பலமுறை கேட்டும் அதற்கான ஆதாரங்களை சிறீ லங்கா அரசு தரவில்லை .என்று கூறுகிறது அந்த அறிக்கை .

இங்கு கவனிக்கபடவேண்டிய விடயம் யாதெனில் கதிர்காமல் கொலையில் கதிர்காமர் மட்டுமே சினைப்பர் தாக்குதலில் கொல்லபட்தால் புலிகளின் மீது சுமத்திய குற்றசாட்டு வலுவில்லாமல் போனது .ஆகவே அடுத்த நிகழ்வை ஒரு முக்கிய தளபதியை குறிவைத்து குண்டு தாக்குதலாக நடத்தினால் அதுவும் பலர் கூடி நிற்கும் இடத்தில்நடத்தி விட்டால்அதில் இறந்து போன ஒருவரின் பாகங்களை வைத்து தற்கொலை குண்டு தாக்குதல் என்று சொல்லி புலிகளின் மீது பழியை போட்டு உலக நாடுகளை நம்பவைக்கலாம் என்று சிறீலங்கா புலனாய்வு துறையின்மற்றும் ஒட்டு குளுக்களின் திட்டமாக ஏன் இருக்ககூடாது??காரணம் மற்றைய துணைக்குளுக்கள் இதுவரை தற்கொலை தாக்குதல் நடத்தியதும் இல்லை உயிரை ஆயுதமாக்கும் அளவுக்கு அவர்களிற்கு துணிவோ ஆத்மபலமோ அற்கான சரியான கொள்கைகளோ இல்லைஅவர்கள் கூலிக்கு மாரடிக்கின்ற கூட்டங்கள் என்று உலகிற்கே தெரியும்.

தற்கொலை குண்டு தாக்கதல் என்றாலே புலிகள் தான் செய்வார்கள் என்கிற ஒரு வலுவான ஒரு அடிப்படை காரணத்தை வைத்தே உடனடியாக நடந்த குண்டு வெடிப்பை உலக நாடுகளிற்கும் உள்ளுரிலும் தற்கொலை தாக்குதல் என்று செய்தியை வெளியிட்டார்கள்.அதை அப்பிடியே எம்மவர் ஊடகங்களும் வெட்டி ஒட்டிவிட்டு வேறு வேலை பார்க்க போய்விட்டார்கள்.இந்த செய்தியால் எதிர் காலத்தில் எமது போராட்டத்திற்கு என்ன பாதக விழைவுகள் வரபோகின்றது என்றோ சிறீலங்கா அரசு தான் போட்ட திட்டம் நிறைவேற நாங்களே வழி வகுத்து விட்டேமே என்று ஒரு நிமிடம் யோசித்திருப்பார்களேயானால் அப்படி அலுப்பில் செய்தியை வெட்டி ஒட்டாமல. ?இருந்திருப்பார்கள் சுயமாக ஒரு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது போல கொழும்பில் குண்டு வெடிப்பு என்று நடந்ததை மட்டும் போடடிருப்பார்கள். ஒரு ஊடகவியலாளன் வெறுமனே பார்கிற கேக்கிற செய்திகளை அப்படியே வெட்டி ஒட்டுபவனாக இல்லாமல் ஒரு புலனாய்வாளன் போலவும் செயற்பட்டால் தான் உண்மையான செய்திகளை மக்களிற்கு வெளி கொண்டுவர முடியும் எனவேஇனிமேலாவது இந்த ஊடகள்கங் சிறீலங்கா அரசின் திட்டமிட பரப்புரை செய்திகளிற்கு தாங்களும் பலியாகாமல்பொறுப்புடன் நடந்து கொள்ளுமென எதிர் பார்:ப்போம்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)