06-21-2003, 09:44 AM
இப்போது
என்னால் ஊர்தி நகர்வுகளை
உணர முடிகின்றது.
உறைந்து போனதெல்லாம்
மீண்டும் உடுக்கெடுத்து ஆடுவதாக
அந்த உடுக்கொலிகள்
உரத்துவென் செவிப்பறைக்கு
உணர்வுூட்டுகின்றன.
நான் எட்டிப் பாh க்கிறேன்.
ஏற்ற, இறக்கங்களைத் தவிர
எதுவுமே தெரியவில்லை.
மீண்டும் யாழ் வரவுக்கான
கொட்டெழுத்துடன்
இந்த அரைவட்டப் பலகைகள்
ஆரவாரிக்கின்றன.
அவலக் குரல்களுக்கெல்லாம்
அடைக்கல மளித்தபடி யாரோ தொலைவில்
அழைத்து வரப்படுகின்றனர்.
அடைக்கப்பட்ட பாதைகளெல்லாம்
அலகு விரித்துச் சிரிக்க
என் அக்கா மகள் ஊர்தியிலே
ஆனந்தமாய்ப் போகின்றாள்.
அவள் மட்டுமா போகின்றாள்.
பக்கத்து வீட்டார்,
படித்த சுற்றம், இன்னும் எத்தனை எத்தனை
உறவுகளெல்லாம்
ஏறியிறங்கிப் போகையில்
நான்.?
இப்போதும்
தோண்டப் படுகிறேன்.
படுவேன்,
பட்டேன்.
மனிதங்களே!
ஒன்றை உணரவும், புரியவும்
கற்றுக் கொள்ளுங்கள்
என்னை ஒரு முறை திறவுங்கள்
நான் அவர்களிடம்
சொல்ல வேண்டும்
எதை ?
'எனக்கு நடந்தவைகளை'
'காலங் கடந்து விட்டதேலு}'
கடந்தாலென்ன
காரணங்களும் பறந்தாபோய்விடும்
நா.கானகன்
என்னால் ஊர்தி நகர்வுகளை
உணர முடிகின்றது.
உறைந்து போனதெல்லாம்
மீண்டும் உடுக்கெடுத்து ஆடுவதாக
அந்த உடுக்கொலிகள்
உரத்துவென் செவிப்பறைக்கு
உணர்வுூட்டுகின்றன.
நான் எட்டிப் பாh க்கிறேன்.
ஏற்ற, இறக்கங்களைத் தவிர
எதுவுமே தெரியவில்லை.
மீண்டும் யாழ் வரவுக்கான
கொட்டெழுத்துடன்
இந்த அரைவட்டப் பலகைகள்
ஆரவாரிக்கின்றன.
அவலக் குரல்களுக்கெல்லாம்
அடைக்கல மளித்தபடி யாரோ தொலைவில்
அழைத்து வரப்படுகின்றனர்.
அடைக்கப்பட்ட பாதைகளெல்லாம்
அலகு விரித்துச் சிரிக்க
என் அக்கா மகள் ஊர்தியிலே
ஆனந்தமாய்ப் போகின்றாள்.
அவள் மட்டுமா போகின்றாள்.
பக்கத்து வீட்டார்,
படித்த சுற்றம், இன்னும் எத்தனை எத்தனை
உறவுகளெல்லாம்
ஏறியிறங்கிப் போகையில்
நான்.?
இப்போதும்
தோண்டப் படுகிறேன்.
படுவேன்,
பட்டேன்.
மனிதங்களே!
ஒன்றை உணரவும், புரியவும்
கற்றுக் கொள்ளுங்கள்
என்னை ஒரு முறை திறவுங்கள்
நான் அவர்களிடம்
சொல்ல வேண்டும்
எதை ?
'எனக்கு நடந்தவைகளை'
'காலங் கடந்து விட்டதேலு}'
கடந்தாலென்ன
காரணங்களும் பறந்தாபோய்விடும்
நா.கானகன்

