06-21-2003, 09:43 AM
மனிதப் புதையல்கள்.
அகழ்ந்தெடுக்கப்பட்டதாய்
செய்திகள் வரும்.
இவள் என்றும் போலவே
கதறிப் புலம்புவாள்.
ஒட்டிய வயிறுகொண்ட
குழந்தைகள் தடுமாறும்.
நகர்க்கிணற்றில்
தெருப்புதரில்,
மலக்குழியிலென
மனிதக் கூடுகள்
மீளும் போதெல்லாம்
இவள் ஓடுவாள்.
அடையாளம் இருக்காது.
அவளவன் தானென
இனங்காட்ட
எதைக் காண்பிப்பாள்
நாளையும்
இதயத்தில் இடியிறங்க
செய்திகள் வரும்.
அதிலும் இவள் துணைவன்
இல்லாதிருக்கலாம்.
க.வாமகாந்
அகழ்ந்தெடுக்கப்பட்டதாய்
செய்திகள் வரும்.
இவள் என்றும் போலவே
கதறிப் புலம்புவாள்.
ஒட்டிய வயிறுகொண்ட
குழந்தைகள் தடுமாறும்.
நகர்க்கிணற்றில்
தெருப்புதரில்,
மலக்குழியிலென
மனிதக் கூடுகள்
மீளும் போதெல்லாம்
இவள் ஓடுவாள்.
அடையாளம் இருக்காது.
அவளவன் தானென
இனங்காட்ட
எதைக் காண்பிப்பாள்
நாளையும்
இதயத்தில் இடியிறங்க
செய்திகள் வரும்.
அதிலும் இவள் துணைவன்
இல்லாதிருக்கலாம்.
க.வாமகாந்

