06-21-2003, 09:42 AM
வாருங்கள்
அவர்களின் மீது கற்களை எறிவோம்.
ஒரு பலஸ்தீனக் குழந்தையின்
புரட்சி முகத்தை பயங்கரவாதம் என்கிறார்கள்
என்றும்
இரும்பு விலங்குகள்
வலிமையானவையென்று
அவனுக்குத் தெரியும் எனினும்
கற்களையேனவன் கையில்
எடுத்தான்?
துயரம் வந்து- அவன் தொண்டையை அடைத்த போது.
தாயை எதிரிகள் இழுத்துப் போயினர்
தந்தையின் உயிரை
அவர்கள் பறிக்கையில்
புதரின் மறைவில்
திகைத்தபடியிருந்தான்.
அப்போதவன்
கண்களில் கண்ணீரை விடவும்
பயமே அதிகமாய் உருகி வழிந்தது- உனது இழப்பின்
துயரம்
"மலைகளுக்கும் கூன
விழவைக்கும் துயரம்"
எனது ஈழத்தெருக்களில்
சாவு வந்தபோது
குண்டுகளால் தேவாலயங்கள்
சரிந்த போது, சல்லடை
யிடப்பட்ட பிணங்கள்
கடலில் மிதந்த போது-
தெருக்களில் வைத்து
இழுத்துச் சென்ற போது-
யுத்தம் ஊர்களுக்குள் வந்த
போது, பிணவாடையும், இரத்த
நெடியுமாக எமது வாழ்வு
கழிந்த போது-எம்
குழந்தைகளின் அழுகை
வானைக்குடைந்ததுலு}லு}
சிறைச் சுவர்களும் நடுங்க கொடுக்குகளினால் நகங்கள்
பிடுங்கிய போது
பெற்றோல் நிரப்பிய
பொலித்தீன் பைகளுக்குள்-
எம்
மூச்சு முட்டியபோது,
தலைகீழாய் தொங்கிய
உடலில்- உயிரசைய
மின்சாரம் பாய்ச்சிய போது
விழி குத்திய அதேபுள்ளியில்
மரணங்கள் வந்த போது-
நாங்கள்
அடைந்த துயரம் போல
உனது துயரம் - ஓ
உனது வாழ்வு மலையைச்
சரித்து
அதனின்று ஒரு கல்லை
நீ எடுத்தாய்லு}..
துப்பாக்கி கிடைக்காதபோது
கற்களை எடுக்கலாம்- என
அறிவுறுத்திய குழந்தையே-
உனது
பலஸ்தீன மண்ணில் வைத்து
-நீ
சுடப்பட்டாய்லு}லு}
புரட்சி புூக்கின்ற போது
இரும்புக்கரங்களால்
சூரியனை
மறைக்க அவர்கள்
நினைத்தனர்- ஆதலால்
உன்னை அவர்கள்- உனது
மண்ணில் வைத்தே சுட்டுக்
கொன்றனர்
ஈழமண்ணில் நாங்கள்
சுடப்படுவது போல
உன்னை அவர்கள் சுட்டுக் கொன்றனர்- எனினும்
உனது கனவை- ஒரு போதும்
சாவு எடுத்துச் செல்லாது
மரணத்தின் போது உனது
கடைசிப்புன்னகையில்
அவர்கள் தோற்றனர்-நீ
புரட்சி புூத்த மண்ணின்
குறியீடாய்
நிலவுக்கடுத்தாற் போல
தெரியும்
புரட்சியின் குழந்தை
மண்ணின் குழந்தை
முல்லைக் கமல்
அவர்களின் மீது கற்களை எறிவோம்.
ஒரு பலஸ்தீனக் குழந்தையின்
புரட்சி முகத்தை பயங்கரவாதம் என்கிறார்கள்
என்றும்
இரும்பு விலங்குகள்
வலிமையானவையென்று
அவனுக்குத் தெரியும் எனினும்
கற்களையேனவன் கையில்
எடுத்தான்?
துயரம் வந்து- அவன் தொண்டையை அடைத்த போது.
தாயை எதிரிகள் இழுத்துப் போயினர்
தந்தையின் உயிரை
அவர்கள் பறிக்கையில்
புதரின் மறைவில்
திகைத்தபடியிருந்தான்.
அப்போதவன்
கண்களில் கண்ணீரை விடவும்
பயமே அதிகமாய் உருகி வழிந்தது- உனது இழப்பின்
துயரம்
"மலைகளுக்கும் கூன
விழவைக்கும் துயரம்"
எனது ஈழத்தெருக்களில்
சாவு வந்தபோது
குண்டுகளால் தேவாலயங்கள்
சரிந்த போது, சல்லடை
யிடப்பட்ட பிணங்கள்
கடலில் மிதந்த போது-
தெருக்களில் வைத்து
இழுத்துச் சென்ற போது-
யுத்தம் ஊர்களுக்குள் வந்த
போது, பிணவாடையும், இரத்த
நெடியுமாக எமது வாழ்வு
கழிந்த போது-எம்
குழந்தைகளின் அழுகை
வானைக்குடைந்ததுலு}லு}
சிறைச் சுவர்களும் நடுங்க கொடுக்குகளினால் நகங்கள்
பிடுங்கிய போது
பெற்றோல் நிரப்பிய
பொலித்தீன் பைகளுக்குள்-
எம்
மூச்சு முட்டியபோது,
தலைகீழாய் தொங்கிய
உடலில்- உயிரசைய
மின்சாரம் பாய்ச்சிய போது
விழி குத்திய அதேபுள்ளியில்
மரணங்கள் வந்த போது-
நாங்கள்
அடைந்த துயரம் போல
உனது துயரம் - ஓ
உனது வாழ்வு மலையைச்
சரித்து
அதனின்று ஒரு கல்லை
நீ எடுத்தாய்லு}..
துப்பாக்கி கிடைக்காதபோது
கற்களை எடுக்கலாம்- என
அறிவுறுத்திய குழந்தையே-
உனது
பலஸ்தீன மண்ணில் வைத்து
-நீ
சுடப்பட்டாய்லு}லு}
புரட்சி புூக்கின்ற போது
இரும்புக்கரங்களால்
சூரியனை
மறைக்க அவர்கள்
நினைத்தனர்- ஆதலால்
உன்னை அவர்கள்- உனது
மண்ணில் வைத்தே சுட்டுக்
கொன்றனர்
ஈழமண்ணில் நாங்கள்
சுடப்படுவது போல
உன்னை அவர்கள் சுட்டுக் கொன்றனர்- எனினும்
உனது கனவை- ஒரு போதும்
சாவு எடுத்துச் செல்லாது
மரணத்தின் போது உனது
கடைசிப்புன்னகையில்
அவர்கள் தோற்றனர்-நீ
புரட்சி புூத்த மண்ணின்
குறியீடாய்
நிலவுக்கடுத்தாற் போல
தெரியும்
புரட்சியின் குழந்தை
மண்ணின் குழந்தை
முல்லைக் கமல்

