06-21-2003, 09:42 AM
ஓ.
இப்பொழுதெல்லாம்
வானை உரசுமளவிற்கு
வெண் பட்சிகளின் சிறகசைப்பு..
வெகு வெகு தொலைவிலே
எப்போதும் உலாவும் காற்றோடு
இணைந்து,
வெண்முகில் பொதி அசைந்து வருகின்றது
சொரியும் மலர்களோடு...
கந்தக மழை பொழிந்து
சேறாய்ப் போன பெருவீதிகளும்
பச்சை உதிர்ந்த விருட்சங்கள்
மூடுண்ட தெருக்கள் வெளித் தெரியத் தொடங்கின.
மண்ணின் ஒவ வொரு துகள்களின்
உயிர்ப்புக்குள்ளும்
எத்தனை எத்தனை கனவுகள்.
ஆசைகள்லு}.. எதிர்பார்க்கைகள்.
வெள்ளியென உடைந்து தெறிக்கும் பட்சிகள்;
எங்கள் கைகளில் சேருமா?
பட்சிகள் கீதம் கேட்குமா?
அந்த-
ஆடி விழுகின்ற புூக்கள் வாசமுள்ளவைதானா? அன்றேல்
வெறும் காகிதப் புூக்கள்தானா?
மிதந்து வரும் மேகம்
இருளென வந்து தகன வெளியிலேயே
கலைந்து போயிடுமா?
அந்தக் 'கலங்கரைவிளக்கு' களுக்கு
நெய் ஊற்றிக் கொள்வோம்
எப்போதும் போலவே
வெள்ளை ரோஜா செடிகளுக்கும் நீர் ஊற்றுவோம்
இனிவரும் சூரியப் பொழுதுகளில்
எங்கள் வீட்டு வாசல்கள் தோறும்
சந்தோசப் புூக்களின் வாசம் வியாபிக்கட்டும்
மாவிலை தோரணங்களோடு.
இத்தாவில்
க.சிவராஜா.
இப்பொழுதெல்லாம்
வானை உரசுமளவிற்கு
வெண் பட்சிகளின் சிறகசைப்பு..
வெகு வெகு தொலைவிலே
எப்போதும் உலாவும் காற்றோடு
இணைந்து,
வெண்முகில் பொதி அசைந்து வருகின்றது
சொரியும் மலர்களோடு...
கந்தக மழை பொழிந்து
சேறாய்ப் போன பெருவீதிகளும்
பச்சை உதிர்ந்த விருட்சங்கள்
மூடுண்ட தெருக்கள் வெளித் தெரியத் தொடங்கின.
மண்ணின் ஒவ வொரு துகள்களின்
உயிர்ப்புக்குள்ளும்
எத்தனை எத்தனை கனவுகள்.
ஆசைகள்லு}.. எதிர்பார்க்கைகள்.
வெள்ளியென உடைந்து தெறிக்கும் பட்சிகள்;
எங்கள் கைகளில் சேருமா?
பட்சிகள் கீதம் கேட்குமா?
அந்த-
ஆடி விழுகின்ற புூக்கள் வாசமுள்ளவைதானா? அன்றேல்
வெறும் காகிதப் புூக்கள்தானா?
மிதந்து வரும் மேகம்
இருளென வந்து தகன வெளியிலேயே
கலைந்து போயிடுமா?
அந்தக் 'கலங்கரைவிளக்கு' களுக்கு
நெய் ஊற்றிக் கொள்வோம்
எப்போதும் போலவே
வெள்ளை ரோஜா செடிகளுக்கும் நீர் ஊற்றுவோம்
இனிவரும் சூரியப் பொழுதுகளில்
எங்கள் வீட்டு வாசல்கள் தோறும்
சந்தோசப் புூக்களின் வாசம் வியாபிக்கட்டும்
மாவிலை தோரணங்களோடு.
இத்தாவில்
க.சிவராஜா.

