07-31-2005, 11:51 PM
Thala Wrote:இப்போ நிங்கள் சொன்னதிலேயே இருக்கிறது பதில் இராணுவம் இல்லாத ஒருவர் கொலை செய்யப்பட்டால் கொலைகாறன் கண்டு பிடிக்கப்பட வேண்டும் அதோடு குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர்களை எல்லா நாட்டுச்சட்டத்தின் படி குற்றம் சாட்டப்பட்டவர் எண்றுதான் அழைக்க வேண்டும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனவே நீங்களும் எந்த அடிப்படையில் தமிழீழத்தை அல்லது புலிகளைக் குற்றம் சாட்டுகிறீர்கள் அவர்கள் தான் கொலை செய்ததென்று. ..
இங்கே எழுதிய எல்லோரும் விடுதலைப்புலிகள் மேல் உள்ள பாசத்தால் அவர்களை தாம் பாதுகாக்கிறோம் என்று எண்ணிக்கொண்டு இந்த கொலையை நியாயப்படுத்தும் வாதத்தை முன் வைத்தார்கள். அவர்களது வாதம் நிக்ஸன் துரோகி ஆகவே கொல்லப்பட வேண்டும் என்பது தான்.
எனது கருத்தோ அவன் துரோகியாக இருந்தால் அது தமிழீழ சட்டப்படி கையாளப்பட்டிருக்க வேண்டும் காரணம் யாழ்ப்பாணம் தமிழீழ பிரதேசம் என்பதாகும். இங்கே விடுதலைப்புலிகள் தான் இந்த கொலையை செய்ததாக நான் எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால் எல்லோருமே அவன் துரோகி ஆக கொல்லப்பட்டது நியாயம் என்று வாதிட்டதன் மூலம் விடுதலைப்புலிகளை பொறுப்பாக்கினர்.
நான் ஏன் தமிழீழ சட்டப்படி நிக்ஸனின் கொலை கையாளப்பட வேண்டும் என்று கேட்கிறேன்? தமிழீழம் தனிநாடாக அங்கீகாரம் கோரி நிற்கிறது. அதற்காகவே நாட்டுக்கு தேவையான நீதித்துறையை உருவாக்கி செயற்படுத்துகின்றது. போலிஸ் துறையை உருவாக்கியிருக்கிறது. இப்படி எல்லாம் செய்து வைத்துக் கொண்டு சிறிலங்காவில் பொலிஸ் ஊழல், சித்திரவதை, கொலைகளுக்கோ பஞ்சம் இல்லை, பொலிஸ் கண்டும் காணாமல் கொலைகளை பார்த்துக்கொண்டிருக்கிறது, நீதிமன்றில் நீதி கிடைக்கவில்லை, சிறிலங்காவில் சட்டம் நடைமுறையில் இல்லை, மேலும் அவர்கள் சட்டம் எமக்கு பாதகமானது, என்று சொல்லி "எமது நாட்டை அங்கிகரியுங்கள், நாம் சிறப்பான ஆட்சி செய்கிறோம்" என்று தமிழீழ நிருவாகம் கேட்கிறது.
இந்த நிலையில் தமிழீழ பிரதேசத்தில் கொலைகள் தொடருகின்றன. நீதி கேட்டு இறந்தவரின் சவப்பெட்டியுடன் உறவினர்கள் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி முன் போராட்டம் நடத்துகிறார்கள்.
உலகம் இங்கே எதைக்காணுகிறது? தமிழீழம் இன்னுமொரு சிறிலங்காவா? என்று மற்ற நாடுகள் கேட்க மாட்டாவா?
இதை ஏன் நான் கேட்கிறேன்? நானும் வாயை மூடிக்கொண்டு சிவனே என்று இருக்கலாமே?
நான் கேட்பது, விடுதலைப்புலிகள் தமது நீதி நிருவாகத்தை மேலும் பலப்படுத்துவதன் மூலம் தமிழீழத்தை சிறிலங்காவிலும் பார்க்க சிறந்த நாடு என்று காட்டவேண்டும் என்பதற்காக.
இப்படி செய்வது தமிழீழத்தின் அங்கிகாரத்துக்கு அவசியமான ஒன்று. இதை அவர்கள் சிந்திக்காமல் இருந்திருக்கலாம். நாம் அவர்களுக்கு எமது கருத்தை சொல்வதன் மூலம் அவர்கள் இப்படியும் சிந்திக்க துண்டுகிறோம். இதனால் தமிழீழத்தின் ஆட்சி வலுப்பேறும்.
கொலைகாரரை அமெரிக்கா மின்சார கதிரையில் வைத்து கொல்கிறது. சிங்கப்புூர் போதைப்போருள் கடத்தியவார்களை நஞ்சேற்றி கொல்கிறது. எல்லாம் சட்டப்படி நடக்கிறது. ஆகவே உலகம் ஏற்று கொள்கிறது. தமிழீழம் ஏன் இப்படி சட்டம் ஆளும் நாடாக மாறக்கூடாது? சிறிலங்காவை போல இருந்து கொண்டு உலக அங்கீகாரம் கேட்டால் கிடைக்குமா?

