07-31-2005, 10:33 PM
selvanNL Wrote:அதை உங்களால் நிருபிக்க முடியுமா?? ஈழ நாதம் பத்திரிகை வித்துகொண்டு இருந்தபொழுது கொல்லப்பட்ட நாட்டுப்பற்றாளரை கொண்டதற்கு சிறிலாங்க அரசாங்கம் என்ன செய்தது,, குமார் பொன்னம்பலத்தை கொண்டவருக்கு இலங்கை நீதிமன்றம் தண்டனைகுடுத்ததா?? அல்லது பிந்துனுவல படுகொலை செய்யப்பட்ட 28 தமிழ் இளைஞர்களை கோரமாக கொலைசெய்த காட்டுமிராண்டிகளை நீதிமன்றம் தண்டிச்சதா? யூட் உங்கட அகராதியிலும் ஏனைய மாற்றுகருத்துக்கொண்டவர்களின் அகரதியிலும் "தமிழினனை வேற்று இனத்தவன் கொண்டால் அது தப்பில்லையா"
அப்ப இலங்கை அரசாங்கம் அப்படி செய்யும்பொழுது இலங்கை அரசாங்கத்துடன் இனைந்து செயபடுவர்களை நாட்டுப்பற்றாளர்கள் என்று பட்டம் கொடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க சொல்லுறீங்களா?? :evil: :evil:
தமிழீழம் இலங்கை போன்ற ஒரு நாடாகத்தான் இருக்க வேண்டும் என்றால், எதற்கு தமிழீழம்? ஐ.நா.வும் மற்ற நாடகளும் சொல்வது போல நாம் இலங்கையிலேயே வாழ்ந்து விடலாமே?
நான் அறிந்த தமிழீழ பொலிஸ் கறைகள் அற்றது. சித்திரவதை செய்யாது. ஊழல் கனவிலும் இடம்பெற முடியாத ஒன்று.
நான் அறிந்த தமிழீழ நீதிமன்றுகள் வேகமாக வழக்குகளை தீர்ப்பன. தீர்ப்புகள் நியாயம் தவறாதவை.
இவற்றை இலங்கையுடன் ஒப்பிட்டு தமிழீழம் இலங்கையை போல கொலைகள் மலிந்து இருப்பதில் என்ன பிழை என்று கேட்க உங்களுக்கே வெட்கமாக இல்லையா? ஏன் இப்படி தமிழீழத்தின் மானத்தை வாங்குகிறீர்கள்?
எனது கேள்வி எல்லாம் தமிழீழ நீதித்துறை நிக்ஸனின் கொலை போன்ற சம்பவங்களையும் சட்டத்திற்குட்பட்டு இடம்பெற பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது தான். தமிழீழ சட்டத்தில் தேசத்துரோகம் பற்றிய பகுதியும் மேன்நீதிமன்றுக்கான இதுபற்றிய சிறப்புரிமைகளும் இருக்கின்றன. தமிழீழம் சட்டம் ஆளும் நாடாக இருக்க வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழப்பகுதியான யாழ்ப்பாணம் தமிழீழ சட்டத்திற்குட்பட்ட பகுதி. தமிழீழம் இலங்கை போல கொலைகள் நிறைந்திருப்பதில் என்ன தவறு என்று கேட்டு தமிழீழத்தை அவமதிக்காதீர்கள்.

