07-31-2005, 10:18 PM
selvanNL Wrote:யூட் இந்த யாழ்களத்திலிருந்து ஒன்றை விளங்கிகொள்ளுங்கள் இங்கே வருகிறவர்கள் ஒவ்வொருவரும் புனைப்பெயர்களில் வருகிறார்கள்.. அவர்களால் பொய்யாகவோ அன்றி தேவையற்ற விதத்தில் கருத்துக்களை முன்வைக்க முடியும்.. ஆனால் களத்தில் ஒரு சிலர் சூரியகுமார், நீர், போன்றவர்கள் வைக்கும் கருத்துக்கு எவரின் அதரவுமில்லை மாறாக அதற்க்கு விளக்கம் சொல்லி தங்களது எதிர்புகளை காண்பிக்கிறார்கள்.. கிட்டத்தட்ட 99%வீகிதத்தினர் தமிழீழத்துக்கு அதரவாக தங்களின் இனத்துக்கு அதரவாக கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.. இவர்கள் நினைத்திருந்தால் உங்களுக்கு அதரவாக ஏன் கதைக்கமுடியாது?? அவர்களுக்கு என்னபயமா?? அவர்களும் தாயகத்திலிருந்து புலத்துக்கு வந்தவர்கள் தான்.. :!:
நான் என்ன தேர்தலில் நிற்கிறேனா ஆதரவு கேட்பதற்கு?
நான் எழுதுவதெல்லாம் இங்கே சிலர் எழுதும் நேர்மையற்ற கருத்துக்களை எடுத்து காட்டுவதற்கு தான். முதலில் ஒருவர் எழுதினார், நிக்ஸன் லட்சக்கணக்கில் தினமுரசு விற்ற பணத்தை கொள்ளையடித்ததால் ஈ.பி.டி.பி சுட்டு கொன்றது என்று. அது நம்பும்படியாக இல்லை என்று நான் எடுத்து காட்டியதும் ஒருவரும் அதற்கு ஆதரவாக எழுதவில்லை.
அடுத்த விடயம் தமிழீழ சட்டம், நீதித்துறை பற்றியது. நீதித்துறை என்ற ஒன்றும், தமிழீழ சட்டமும் இருக்கும் போது யாரையும் யாரும் அடையாளம் காட்டாமல் கொல்லலாமா? இப்படி கொல்லலாம் என்றால் ஏன் நீதி நிருவாகம்? ஏன் சட்டங்கள்? துரோகிகள், தேசத்துரோகம் பற்றி தமிழீழ சட்டக்கோவையில் சட்டங்கள் இருக்கின்றன. தமிழீழ மேன்நீதிமன்றங்கள் இவற்றை சிறப்பாக ஆராய இருக்கின்றன. இன்னமும் ஏன் சட்டத்திற்கு அப்பாற்பட்ட கொலைகள்? இப்படி நடக்குமானால் இது சட்டத்துறைக்கு அவமானம் அல்லவா?
மூன்றாவது அம்சம், சிறுவயதில் கடத்தப்பட்டு, கட்டாயப்படுத்தப்பட்டு துரோகியாக்கப்பட்டவர்களுக்கு விடுதலை, வீதியில் சூடு, என்றால் அவன் ஏன் தனது துரோக வேலையை கைவிடப்போகிறான்? இன்னமும் எத்தனை பேர் இப்படி சுடப்பட போகிறார்கள்? பிறகு அதற்கு வஞ்சம் தீர்க்க இன்னமும் எத்தனை சகோதரர்கள், பிள்ளைகள், கணவன், மனைவியர் எதிரியிடம் மண்டியிடப் போகிறார்கள்? தமிழீழ நீதித்துறை இதற்கு என்ன தீர்வு வைத்திருக்கிறது?

