06-21-2003, 09:42 AM
எனக்கு ஆத்திரமோ கவலையோ பீறிடவில்லை.
எம் உயிரிலே புதைந்துள்ள
எம் "செல்வங்களின் துயிலிடத்தை"
நாம் பிரிந்தபோதே
அதை மனதிலே தாங்கி வந்தேன்.
அவை உம் கையினில் வீழும் போதினில் எதுவுமே நடக்கலாம்
அதில் ஆச்சரியம் கிடையாது.
உங்கள் வரலாறே கூறும்
நீவிர் யாரென்று.
அதைவிடவும் பல தடவை
புரிய வைத்துள்ளீர் அவ வப்போது.
அதனாலெனக்கிப்போ ஆத்திரமெழவில்லை.
அவற்றை நான் என்
மனதிற் தாங்கியுள்ளேன்.
உம்மால் சிதைக்க முடிந்தது
அந்த வளாகங்களை மட்டுமே.
மற்றப்படிக்கு
அவர்களதும் எங்களதும் உணர்வுகள் பிணைந்தேயுள்ளன.
இன்னும் வீச்சாக..
பு. சிந்துஜன்
எம் உயிரிலே புதைந்துள்ள
எம் "செல்வங்களின் துயிலிடத்தை"
நாம் பிரிந்தபோதே
அதை மனதிலே தாங்கி வந்தேன்.
அவை உம் கையினில் வீழும் போதினில் எதுவுமே நடக்கலாம்
அதில் ஆச்சரியம் கிடையாது.
உங்கள் வரலாறே கூறும்
நீவிர் யாரென்று.
அதைவிடவும் பல தடவை
புரிய வைத்துள்ளீர் அவ வப்போது.
அதனாலெனக்கிப்போ ஆத்திரமெழவில்லை.
அவற்றை நான் என்
மனதிற் தாங்கியுள்ளேன்.
உம்மால் சிதைக்க முடிந்தது
அந்த வளாகங்களை மட்டுமே.
மற்றப்படிக்கு
அவர்களதும் எங்களதும் உணர்வுகள் பிணைந்தேயுள்ளன.
இன்னும் வீச்சாக..
பு. சிந்துஜன்

