06-21-2003, 09:41 AM
காற்றிலுலவி அலைகிறது
ஒரு பறவை
கூடிழந்து தனித்திருத்தல் எத்தனை நாளைக்கு
வசந்தப் பொழுதுகளில்
கூடிமகிழ்ந்திருந்து சுகித்திருந்த நாட்களையும்
என் கிராமத்து பால்ய நினைவுகளையும்
எத்தனை காலத்திற்கு மன இடுக்கில்
நிறுத்தி வைத்திட முடியும்?
அந்த அத்தியாயங்களை புரட்டிப் பார்க்க
மனம் அவாவுகின்றது.
புூபாளங்களோடு துயில் கலைந்த
என் வாழ்வில்
இப்போதெல்லாம் பரிபுூரண மௌனமே
எனக்குத் திருப்தியைத் தருகிறது.
நான் சுவாசிக்கும் ஒவ வொரு கணத்திலும்
ஏதோ ஒரு ஆறுதல் வார்த்தைக்காக
மனம் ஏங்கி குமைகிறது.
உறவுகள் தூரங்களானதால் எனதாவியும்
என்னுள் பொருமியழிகின்றது
மலரும் சுடுவதெங்ஙனம்?
நிலவும் தகிப்பதெதனால்?
காற்றிலெழுதிப் போகிறேன் கதையை!
காற்றே! எடுத்துச் செல்
என் ஜீவ உணர்வின் கனதிகளை;
கீற்று முகில்களே!
என் எண்ணங்களின் வீச்சினை எழுதிச்செல்லுங்கள்
தனிமர தனிக்கிளையொன்றில்
ஒற்றைக் குரலோசையோடு வாழ்ந்திட
முற்படும் நிதமும்
கட்டற்ற ஒரு மகிழ்ச்சிப் பறப்பிற்கான,
சிறகினைத் தேடி;
காற்றிலுலவி அலைகிறது, ஒரு பறவை
-இத்தாவில் க.சிவராசா
ஒரு பறவை
கூடிழந்து தனித்திருத்தல் எத்தனை நாளைக்கு
வசந்தப் பொழுதுகளில்
கூடிமகிழ்ந்திருந்து சுகித்திருந்த நாட்களையும்
என் கிராமத்து பால்ய நினைவுகளையும்
எத்தனை காலத்திற்கு மன இடுக்கில்
நிறுத்தி வைத்திட முடியும்?
அந்த அத்தியாயங்களை புரட்டிப் பார்க்க
மனம் அவாவுகின்றது.
புூபாளங்களோடு துயில் கலைந்த
என் வாழ்வில்
இப்போதெல்லாம் பரிபுூரண மௌனமே
எனக்குத் திருப்தியைத் தருகிறது.
நான் சுவாசிக்கும் ஒவ வொரு கணத்திலும்
ஏதோ ஒரு ஆறுதல் வார்த்தைக்காக
மனம் ஏங்கி குமைகிறது.
உறவுகள் தூரங்களானதால் எனதாவியும்
என்னுள் பொருமியழிகின்றது
மலரும் சுடுவதெங்ஙனம்?
நிலவும் தகிப்பதெதனால்?
காற்றிலெழுதிப் போகிறேன் கதையை!
காற்றே! எடுத்துச் செல்
என் ஜீவ உணர்வின் கனதிகளை;
கீற்று முகில்களே!
என் எண்ணங்களின் வீச்சினை எழுதிச்செல்லுங்கள்
தனிமர தனிக்கிளையொன்றில்
ஒற்றைக் குரலோசையோடு வாழ்ந்திட
முற்படும் நிதமும்
கட்டற்ற ஒரு மகிழ்ச்சிப் பறப்பிற்கான,
சிறகினைத் தேடி;
காற்றிலுலவி அலைகிறது, ஒரு பறவை
-இத்தாவில் க.சிவராசா

