06-21-2003, 09:41 AM
இந்த மனிதா கள்
மீண்டும் வருகிறாh கள்
இருள் மண்டிய
பதுங்கு குழிகளிலிருந்து
துயரமும் நிராசையும் நிறைந்த
அகதிவாழ்வின் முடிவிலிருந்து
தாய் மடியாய் விரிந்திருந்த
வனத்திலிருந்து
வருகிறார்கள்!
நகரின் மீது
மகா மூர்க்கன் படையெடுத்த போது
துயரமும் வலியும்
நிறைந்த இதயத்தைக் காவியபடி
எனது மக்கள் வெளியேறினர்
கோபம்
கொழுந்து விட்டெரிந்தது
நிராசையாய்
நெஞ்சு துடித்தது
ஆயினும் பின்வாங்க நேரிட்டது
மகாமூர்க்கர்களும் துன்மார்க்கர்களும்
எப்போதும் மக்களைக் குறிவைத்தே போரைத்
தொடுக்கிறார்கள்
நியாயவான்கள் கிளர்ந்தெழுந்து
துன்மார்க்கரை எதிர்க்கையில்
துன்மார்க்கர்கள் மூர்க்கத்தனமான
படையெடுப்புக்களை
மக்களின் மீதே நிகழ்த்தி விடுகின்றனர்
மக்கள் எதிர்த்துப் போரிடுகிறார்கள்
முடியாத போது பின்வாங்குகிறார்கள்
பின்வாங்கும் மக்கள் அநேகமாக வனத்தில்தான்
தஞ்சமடைகிறார்கள்
அங்கிருந்து தம்மைத் தயார்ப்படுத்தி
மீண்டும் போரிடுகிறார்கள்
போரிட்டு, வெற்றி வீரர்களாக
மறுபடியும் தமது இடங்களுக்கும்
வாழ்வுக்கும் திரும்புகிறார்கள்
சரித்திரம் இப்படித்தான் எப்பொழுதும்
தன்னை எழுதிச் செல்கின்றது
வனம்
இவர்களை
வரவேற்றது
போஸித்தது
பாதுகாத்தது
இப்போது விடை தருகிறது.
நகர நிர்மாணங்கள்
நிகழ்ந்தே யிருக்கும்.
இனியும்
அந்நியர் படைகள்
பொற் கொள்ளையிடா
எல்லைக் காவலொடு
ஊர்களை ஆக்கிடுவோம்
என்றும் இனி
வீழ்தல் இல்லை
என்ற வொரு சத்திய வொலி
எங்கணு மொலிக்க
போர்ப்பறை, முரசம், முழவு
சங்கொடு
வீரக் கதைகளுடனும்
வீரர் நினைவொடும்
போர்க்கலை பயின்று
ஊர்களிருக்கும்.
என் மனிதர்கள்
நகர் மீள்கிறார்கள்.
-கருணாகரன்
மீண்டும் வருகிறாh கள்
இருள் மண்டிய
பதுங்கு குழிகளிலிருந்து
துயரமும் நிராசையும் நிறைந்த
அகதிவாழ்வின் முடிவிலிருந்து
தாய் மடியாய் விரிந்திருந்த
வனத்திலிருந்து
வருகிறார்கள்!
நகரின் மீது
மகா மூர்க்கன் படையெடுத்த போது
துயரமும் வலியும்
நிறைந்த இதயத்தைக் காவியபடி
எனது மக்கள் வெளியேறினர்
கோபம்
கொழுந்து விட்டெரிந்தது
நிராசையாய்
நெஞ்சு துடித்தது
ஆயினும் பின்வாங்க நேரிட்டது
மகாமூர்க்கர்களும் துன்மார்க்கர்களும்
எப்போதும் மக்களைக் குறிவைத்தே போரைத்
தொடுக்கிறார்கள்
நியாயவான்கள் கிளர்ந்தெழுந்து
துன்மார்க்கரை எதிர்க்கையில்
துன்மார்க்கர்கள் மூர்க்கத்தனமான
படையெடுப்புக்களை
மக்களின் மீதே நிகழ்த்தி விடுகின்றனர்
மக்கள் எதிர்த்துப் போரிடுகிறார்கள்
முடியாத போது பின்வாங்குகிறார்கள்
பின்வாங்கும் மக்கள் அநேகமாக வனத்தில்தான்
தஞ்சமடைகிறார்கள்
அங்கிருந்து தம்மைத் தயார்ப்படுத்தி
மீண்டும் போரிடுகிறார்கள்
போரிட்டு, வெற்றி வீரர்களாக
மறுபடியும் தமது இடங்களுக்கும்
வாழ்வுக்கும் திரும்புகிறார்கள்
சரித்திரம் இப்படித்தான் எப்பொழுதும்
தன்னை எழுதிச் செல்கின்றது
வனம்
இவர்களை
வரவேற்றது
போஸித்தது
பாதுகாத்தது
இப்போது விடை தருகிறது.
நகர நிர்மாணங்கள்
நிகழ்ந்தே யிருக்கும்.
இனியும்
அந்நியர் படைகள்
பொற் கொள்ளையிடா
எல்லைக் காவலொடு
ஊர்களை ஆக்கிடுவோம்
என்றும் இனி
வீழ்தல் இல்லை
என்ற வொரு சத்திய வொலி
எங்கணு மொலிக்க
போர்ப்பறை, முரசம், முழவு
சங்கொடு
வீரக் கதைகளுடனும்
வீரர் நினைவொடும்
போர்க்கலை பயின்று
ஊர்களிருக்கும்.
என் மனிதர்கள்
நகர் மீள்கிறார்கள்.
-கருணாகரன்

