Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
«È¢×Á¾¢Â¢ý ''«Ïò¾¢Á¢÷ «¼ìÌ"
#2
அணுத்திமிர் அடக்கு
கவிஞர் அறிவுமதி கவிதைகள்.

1)வார்த்தையுள்
இறங்கு

அர்த்தத்தில்
மூழ்கு

போ
போ
ஆழமாய்ப்
போ

வசப்படும்
தரையில்
வாழ்க்கை
தேடி அள்ளு
கை
நிறைய

வா
வா
புூமி பாhர்த்து
மூச்சு விடு
திருப்தியாய்.


2)வானத்தைத்
தின்னு

கிரகங்களை
கொறி

காற்றைக்
குடி

அசைபோடு
புூமியில்.

இயல்பு
கற

கொடு
கொடு

நிகழுக்கு.

3)அர்த்தம்
இல்லை
சொல்லில்.

அர்த்தம்
இல்லை
யாப்பில்.

அர்த்தம்
இல்லை
இல்லை
கவிதையிலும்.

கண்டு
தெளி
கொச்சையுள்.

4)தனிமையில்
கோடி
மக்களில்
உலவு.

குகையினுள்
ஆயிரம்
ஞாயிறு
விரும்பு.

ஒற்றை
வயிற்றுள்
உலகை
நுழை.
நுழை .

5)உதை
எலும்பு
நொறுங்க.

வெட்டு
கைகள்
உதிர

சுடு
இதயம்
சிதற

ஆயதத்திடம்
கேள்
அகிம்சை
புரியும்.


6)ஆலைகள்
பெருக்கு
கனி
வளம்
உருக்கு

தொழில்
நிலை
உயர்த்து

அனைத்தும்
சரிதான்

இயற்கையை
மகிழ்ச்சி
செய்.
[b]Nalayiny Thamaraichselvan
Reply


Messages In This Thread
[No subject] - by nalayiny - 10-13-2003, 03:11 PM
[No subject] - by sOliyAn - 10-13-2003, 03:54 PM
[No subject] - by Paranee - 10-14-2003, 05:28 AM
[No subject] - by þ.þº¡ì - 10-14-2003, 09:48 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)