06-21-2003, 09:40 AM
உரமேறிய கால்கள் பலமற்றுப் போயின
வலுவேறிய கைகள் உணர்வற்றுத் தொய்ந்தன
இளமைத்துடிப்பில் அன்று திளைத்தது
முதுமைச்சுமையில் இன்று களைத்தது.
கண்கள் வெளிறி ஒளியை இழந்தன
சீண்டாத புண்கள் புரையோடிப்போயின.
ஒட்டிப்பிடித்த சொந்தங்கள் இன்று
ஓட்டம்பிடித்தன அவா நிலைகண்டு.
அன்புடன் தழுவிய நட்புகள் கூட
அகன்றன அவரது வெறுங்கை பார்த்து.
தோள்மீது தூக்கி வளர்த்திட்ட பிள்ளையும்
தொல்லையென விரட்டி அடிக்கிறான் வெளியே.
வயதான காலத்தில் சத்தங்கள் போடாதே
தேவாரம் படிப்பதாய் கத்தித் தொலையாதே
பசிகாதை யடைத்தாலும் வாய்விட்டுக் கேட்காதே
என்னவளிடம் இங்கிதமில்லாமல் நடவாதே
போர்ப்புழுதி சூழ்ந்தது.
வெண்தணலில் நித்தமும் வேகின்ற மனமும்
மௌனமாய்க் கதறியழும் தவிப்புடனே தினமும்.
ஏன் மனிதா இப்படிப் பாதகம் உன்னுள்?
இளமையும் முதுமை நாடியே செல்லும்
கருணையும் அன்புமே பாரினில் வெல்லும்
உரிமையும் உணர்வுமே ஓர்பெருஞ செல்வம், உணர்.
-வி.அகல்யா
வலுவேறிய கைகள் உணர்வற்றுத் தொய்ந்தன
இளமைத்துடிப்பில் அன்று திளைத்தது
முதுமைச்சுமையில் இன்று களைத்தது.
கண்கள் வெளிறி ஒளியை இழந்தன
சீண்டாத புண்கள் புரையோடிப்போயின.
ஒட்டிப்பிடித்த சொந்தங்கள் இன்று
ஓட்டம்பிடித்தன அவா நிலைகண்டு.
அன்புடன் தழுவிய நட்புகள் கூட
அகன்றன அவரது வெறுங்கை பார்த்து.
தோள்மீது தூக்கி வளர்த்திட்ட பிள்ளையும்
தொல்லையென விரட்டி அடிக்கிறான் வெளியே.
வயதான காலத்தில் சத்தங்கள் போடாதே
தேவாரம் படிப்பதாய் கத்தித் தொலையாதே
பசிகாதை யடைத்தாலும் வாய்விட்டுக் கேட்காதே
என்னவளிடம் இங்கிதமில்லாமல் நடவாதே
போர்ப்புழுதி சூழ்ந்தது.
வெண்தணலில் நித்தமும் வேகின்ற மனமும்
மௌனமாய்க் கதறியழும் தவிப்புடனே தினமும்.
ஏன் மனிதா இப்படிப் பாதகம் உன்னுள்?
இளமையும் முதுமை நாடியே செல்லும்
கருணையும் அன்புமே பாரினில் வெல்லும்
உரிமையும் உணர்வுமே ஓர்பெருஞ செல்வம், உணர்.
-வி.அகல்யா

