06-21-2003, 09:38 AM
வாள் கொண்டு
என் மேனியை
மானிடர் அறுத்திடும்போதில்
வருத்தத்தால் துடிதுடித்தேன்.
எத்தனை சோகம் என்னுள்
மரமாய் பிறப்பது
மகாபாவம் என
மனதுள் எண்ணிக்கொண்டேன்.
அழுதேன்.
அந்தக் கண்ணீரை
யார்தான் அறிந்தார்கள்.
இப்போது எத்தனை மாற்றங்கள்
மரமாய் பிறந்ததற்கு
மகாதவம் செய்து விட்டேனோ.
மாவீரன் அவனுக்கு
பேழை உருவாக்கும்போது
எந்தனுக்குத்தானே
இப்போது முதலிடம்.
அவனைத் தாங்கிடும்
அந்தப் பாக்கியம்
எந்தனுக்கு கிடைத்தது.
மரமாய் பிறந்தது
மகிழ்ச்சிக்குரியதென
இப்போது எனக்குள்
எண்ணிக் கொள்கிறேன்.
யோ.புரட்சி
என் மேனியை
மானிடர் அறுத்திடும்போதில்
வருத்தத்தால் துடிதுடித்தேன்.
எத்தனை சோகம் என்னுள்
மரமாய் பிறப்பது
மகாபாவம் என
மனதுள் எண்ணிக்கொண்டேன்.
அழுதேன்.
அந்தக் கண்ணீரை
யார்தான் அறிந்தார்கள்.
இப்போது எத்தனை மாற்றங்கள்
மரமாய் பிறந்ததற்கு
மகாதவம் செய்து விட்டேனோ.
மாவீரன் அவனுக்கு
பேழை உருவாக்கும்போது
எந்தனுக்குத்தானே
இப்போது முதலிடம்.
அவனைத் தாங்கிடும்
அந்தப் பாக்கியம்
எந்தனுக்கு கிடைத்தது.
மரமாய் பிறந்தது
மகிழ்ச்சிக்குரியதென
இப்போது எனக்குள்
எண்ணிக் கொள்கிறேன்.
யோ.புரட்சி

