06-21-2003, 09:37 AM
அறுந்து தொங்கும் நு}லிழையில்
ஓர் ஆத்மா ஊசலாடுகிறது
வலியடைந்து வலியடைந்து
கணமெல்லாம் வருந்துகிறது
எந்தக் கலப்புமில்லா வார்த்தைகளுக்காக
ஏங்கி நிற்கிறது
முகமூடியற்ற மனித முகம் தேடி
அலைந்து திரிகிறது..
பிரபஞ்ச வெளியெங்கணும் துயரச்லு}
சுமை சுமந்து பறக்கிறது.
கறையில்லா இரண்டு
கரங்களின் கலப்பிற்காக
போலியற்ற புன்முறுவலுக்காக
புரிந்துணர்வுள்ள ஒரு மென்னிதயத்துக்காக
தவம் செய்கிறது
புழுக்கள் நெளியும் புன்னகைகளையும்
பொய்களை உற்பவிக்கும் மனங்களையும்
விஸம் கலந்த சிரிப்புகளையும்
வெறுக்கிறது.
ஒட்டுண்ணி வேர்களற்ற உயிர்
உறவுகளைத் தேடிநிற்கிறது
ஆதிலட்சுமி சிவகுமார்
ஓர் ஆத்மா ஊசலாடுகிறது
வலியடைந்து வலியடைந்து
கணமெல்லாம் வருந்துகிறது
எந்தக் கலப்புமில்லா வார்த்தைகளுக்காக
ஏங்கி நிற்கிறது
முகமூடியற்ற மனித முகம் தேடி
அலைந்து திரிகிறது..
பிரபஞ்ச வெளியெங்கணும் துயரச்லு}
சுமை சுமந்து பறக்கிறது.
கறையில்லா இரண்டு
கரங்களின் கலப்பிற்காக
போலியற்ற புன்முறுவலுக்காக
புரிந்துணர்வுள்ள ஒரு மென்னிதயத்துக்காக
தவம் செய்கிறது
புழுக்கள் நெளியும் புன்னகைகளையும்
பொய்களை உற்பவிக்கும் மனங்களையும்
விஸம் கலந்த சிரிப்புகளையும்
வெறுக்கிறது.
ஒட்டுண்ணி வேர்களற்ற உயிர்
உறவுகளைத் தேடிநிற்கிறது
ஆதிலட்சுமி சிவகுமார்

