07-25-2005, 09:46 PM
Vasampu Wrote:டண்ணுக்கு கொஞ்சுமாவது அரசியல் தெரியுமென்று நினைத்திருந்தேன். எல்லாம் வெறும் வெத்துவேட்டு அறிக்கைதான். உமது தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு (பெற்றோலியம்) அடுத்த வீட்டுக்காரன்; விலைநிர்ணயம் கட்டுப்பாடுகள் போன்றவற்றை விதித்தால் நீர் சும்மா கைகட்டி சேவகமா செய்வீர் (அதுவும் உமக்கு பழக்கப்பட்ட ஒன்றுதானே).
உண்மையில் அல்-ஹைடாஇ ஹமாஸ் போன்ற அமைப்புக்களை தங்கள் சுயநலங்களுக்காக வளரத்துவிட்டது அமெரிக்காவும் பிரித்தானியாவுமே. இன்று இஸ்லாமிய தீவிரவாதம் அதிகரித்திருக்கின்றது என்றால் அதன் அடிப்படையை நாம் ஆராயவேண்டும். நாம் ஐரோப்பாவில் வாழும் நாடுகள் என்பதற்காக உண்மைக்கு புறிம்பாக வக்காலத்து வாங்குவதில் எந்த நியாயமும் இல்லை. இன்று ஈராக்கில் நடைபெறும் அநியாயங்களுக்கு யார் காரணம்.
ஜோவ் வசம்பு எனக்கு (டக்கிளஸுக்கு) ஒரு அரசியலும் தெரியாதப்பு அடங்காத சங்கரி மாதிரி ஊளையிட தெரியும்.. ஆனாலும் இந்திய றோக்காரரின் ஆபர முயற்சியினால் அவர்கள் எழுதித்தரும் அறிக்கைகளை விடுவதுடன் சிங்களமக்கள் கலந்துகொள்ளூம் கூட்டங்களில் நான் ஒரு காக்கா சீ சிங்கம் என்று காட்டி உடம்பை வளர்த்துக்கொண்டு இருக்கிற என்னை வம்புக்கு இழுப்பது சரியில்லை.. நானும் ஒரு அமைச்சன் எண்ட வகையில் எனக்கு ஒரு கிழிஞ்ச வாய் இருக்கு எண்ட வகையில் எதவதை எனது ஓட்டைவாயினால் சொன்னால் தான் நான் உயிரோடு இருக்கிறேனோ இல்லையோ என்பதை உலகத்துக்கும் முக்கியமா இந்தியாவுக்கும் தெரியவரும்..
இருந்தாலும் அப்பு வசம்பு இராக்கிலையும் ஆப்கானிஸ்தானிலும் நடந்தவை என்ன?? அப்கானிஸ்தானில் நிலைகொண்டு இருந்த தலிபான் அந்த நாட்டு போராளிக்குழுகளா அல்லது அந்த நாட்டு இராணுவமா?? எதற்க்காக அவர்கள் அங்கே நிலைகொண்டு இருந்தார்கள்... ஆப்கான் மக்கள் எத்தனை வருடகாலமாக நாமவது அரை நூற்றாண்டுகள்தான் ஆனால் அவர்கள் குறைந்தது 75 ஆண்டுகளுக்கு மேல் தங்கள் நாட்டில் இன்னல் அனுபவித்துவருகிறார்கள்.. ஒரு சினிமா படம் பார்க்கமுடியாது, மேடையில் பெண்கள் கதைக்க தடை நாடகம் நடத்த தடை,, இப்ப பாருங்கள் ஆப்கானிஸ்தானை.. அமெரிக்க இராணுவம் தனது சுயநலத்துக்குகாக சென்றாலும் அதிலும் ஆப்கானிஸ்த்தான் மக்களில் முதல் இருந்ததை விட சுதந்திரமாக வாழ்கிறார்கள் பாகிஸ்த்தானில் அகதிகளாக இருந்தவர்கள் நிறைய பேர் தங்கள் நாடு திரும்பிவிட்டார்கள்..
அதேமாதிரி ஈராக்.. சதாம் உசேன் தனது நாட்டு மக்களை கவனித்தார அல்லது தனது குடும்பத்தை கவனித்தார?? அவருக்கு எத்தனை பங்காள இருக்கு?? அவரை விட அவரின் காலம் சென்ற புதல்வர்களின் அட்டகாசங்கள் என்ன என்பதை சொல்லுவதற்கே எத்தனையோ பக்கங்கள் தேவை ஆனால் அவற்றில் முக்கியமான சிலதை சொல்கிறேன்.. உதாரணத்துக்கு உதய் (மகன்) காரில் வீதியில் செல்லும்பொழுது ஒரு அழகான பெண்ணைக்கண்டால் அவரின் கார் அந்த இடத்திலே நிற்க்கும் நிண்டு அந்த பெண்ணோடு கதைப்பார்.. உடனடியாக அல்லது ஒருகிழமைக்குள் அவர் குடுக்கும் முகவரிக்கு அந்த பெண் செல்லவேண்டும் அப்படி தவறினால் அவரின் (பெண்ணின்) குடும்பம் சதாமின் சித்திரவதை கூடத்தில் இருப்பார்கள்.. எத்தனையோ ஆயிரம் பெண்களின் வாழ்க்கையை (நம்மட தோஸ்த் அடங்காத சங்கரிமாதிரி) அழித்திருக்கிறார்காள்.. அதைவிட அவர்களுக்கு எத்தனைபங்களாக்கள் எத்தனை கார், சகல வசதிகளையும் மக்களின் வரிபணத்திலிருந்து தனது குடும்பத்துக்கு செலவு பண்ணுபவன் ஆட்சியில் இருந்தாலென்ன இல்லாட்டில் என்ன..
சரி வசம்பு நீங்க சொன்னது போல அமெரிக்க படைகள் அந்த நாட்டுக்கு எண்ணெய் களவெடுக்கத்தான் போனார்கள் எண்டு வைச்சுகொள்வமே இதனால் மக்கள் அந்த கொடுங்கோல் சதாமின் குடும்பத்தின் பிடியில் இருந்து தப்பிவிட்டார்கள்.. ஆனாலும் தற்பொழுது நடைபெறும் தற்கொலைத்தாக்குதல்கள் தலிபான், மற்றும் ஏனைய உதிரி தீவிரவாத குழுக்கலால் நடத்தப்படுகின்றன.. இதற்க்கு அமெரிக்க காரணமாக இருக்கமுடியாது காரணம் அவர்களுக்குள்ளேயே 2,3 பிரிவுகள் அதுக்குள்ளேயே வெட்டுப்பாடு கொலை கொள்ளை,,, அவர்கள் நினைத்தால் (ஈராக் மதத்தலைவர்கள்) தற்பொழுது நிகழ்ந்து கொண்டு இருக்கும் தற்கொலைத்தாக்குதல்களை நிறுத்தமுடியும்.. ஆனால் இந்தியன் மாதிரி பக்கத்துவீட்டுக்காரன் எங்க தன்னை மிஞ்சிவிடுவானோ எண்டு என்னி தீவிரவாத அமைப்புக்களோடு கூட்டனி வைத்து தங்களின் இனத்தையே அழிக்க முற்பட்டுவிட்டார்கள்.. இதற்கு அந்த அல்லா வந்து தான் பதில் சொல்லவேண்டும்..
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

