06-21-2003, 09:36 AM
எமக்கென்றொரு வீடு
எத்தின தடவை மேஞ்சாச்சு;
ஒழுங்கில்லாத இடம் ஒண்டுமேயில்லை.
தலைவாசலும் அப்படி.
தலைவைச்சு படுக்கிற இடமும் அப்படி.
நடு அறைக்குள்ள இன்னமும் கறையானும் புத்தும்.
அடி விறாந்தையிலதான் கொஞ்சம் ஆறுதல்.
அதுக்கும் பிரச்சனையாத்தானிருக்கு.
ஒழுக்கில்லாத இடம் ஒண்டுமில்லை.
காத்து கச்சானாய் வந்து கலைச்சுது.
கொண்டாலாய் வந்து கூரையைப் பிரிச்சுது.
சோழகம் எண்டும் வந்துது.
பந்தல் புரட்டி பனங்காயுறுட்டி விசாகமெண்டு
மாறி மாறிப் புரட்டி எடுத்து,
புயலெண்டு வந்து ஒரு பக்கத்தைப்புடுங்கி
மாரி மழையாய் சில காலம்
பேயறைஞ சு பேசி
போன முறையுமொருக்காக் கூரையொழுகினது.
போட்டுத்தாறதெண்டு.
கூரைக்கு கோபுரம் வச்சவை.
அரசமர நிழலில நிண்டு கொண்டு
அனுதாபப் பட்ட மாதிரியழுது
இருந்த வீட்ற்கும், எட்ட நின்று கல்லெறிஞ சவை.
இருந்ததும் இல்லாமல் போய்
படுக்க நிக்க ஏலாம பதறி, பரிதவிச்சு
எத்தினதரம் மேயுறதும் பிரிக்கிறதும்,
பிரிக்கிறதும் மேயுறதும்.
உடைக்கிறதும் கட்டுறதும்.
கட்டினதை உடைக்கிறதும்.
எங்கட வீட்டிலதானே நாங்கள் இருக்கிறம்,
ஏன் ஒண்டுக்கும் பிடிக்கேல்ல.
நிலையமே பிழையாம்.
பேயங்கள்
நாங்களெடுத்த ந}லையமே?
பாட்டனும் புூட்டனும் எடுத்த நிலையம்.
நிலையம் சரி.
அதில மாற்றமில்லை.
பழைய வீடெண்டாலும்
உடைபட்டுப் போனதெண்டாலும்
இது எங்கட வீடு.
எத்தனையக் கண்டுட்டம் இதுக்குள்ள.
எத்தனை இழப்பு
எத்தனை இழவு, அலைவு.
அழுகையும் பற்கடிப்பும் அடுத்தடுத்து.
இனிமேலும் ஒழுங்குக்குள்ள இருக்ககேலாது.
மேச்சல சரியா மேயோணும்
கூரைக்கும் அமுக்கம் போடோணும்.
எந்தக் காத்தும் புடுங்காதமாதிரி.
உடம்பை வெறுத்து.
உயிரை வ}த்து
கல்லறுத்து சூளை வச்சிருக்கு.
களியோட இந்த முறை சுண்ணாம்பும் சேர்க்கோணும்.
கறையான் கூடு வராமல்.
தம பியன் தான் எங்கட மேசன்.
கட்டுறதுக்கு ப}ளான் சொல்ல கனபேர் வருவினம்.
எங்களுக்கும் பிளானிருக்கு;
இருக்கப் போறது நாங்கள்.
எத்தின தடவை மேஞ்சாச்சு;
ஒழுங்கில்லாத இடம் ஒண்டுமேயில்லை.
தலைவாசலும் அப்படி.
தலைவைச்சு படுக்கிற இடமும் அப்படி.
நடு அறைக்குள்ள இன்னமும் கறையானும் புத்தும்.
அடி விறாந்தையிலதான் கொஞ்சம் ஆறுதல்.
அதுக்கும் பிரச்சனையாத்தானிருக்கு.
ஒழுக்கில்லாத இடம் ஒண்டுமில்லை.
காத்து கச்சானாய் வந்து கலைச்சுது.
கொண்டாலாய் வந்து கூரையைப் பிரிச்சுது.
சோழகம் எண்டும் வந்துது.
பந்தல் புரட்டி பனங்காயுறுட்டி விசாகமெண்டு
மாறி மாறிப் புரட்டி எடுத்து,
புயலெண்டு வந்து ஒரு பக்கத்தைப்புடுங்கி
மாரி மழையாய் சில காலம்
பேயறைஞ சு பேசி
போன முறையுமொருக்காக் கூரையொழுகினது.
போட்டுத்தாறதெண்டு.
கூரைக்கு கோபுரம் வச்சவை.
அரசமர நிழலில நிண்டு கொண்டு
அனுதாபப் பட்ட மாதிரியழுது
இருந்த வீட்ற்கும், எட்ட நின்று கல்லெறிஞ சவை.
இருந்ததும் இல்லாமல் போய்
படுக்க நிக்க ஏலாம பதறி, பரிதவிச்சு
எத்தினதரம் மேயுறதும் பிரிக்கிறதும்,
பிரிக்கிறதும் மேயுறதும்.
உடைக்கிறதும் கட்டுறதும்.
கட்டினதை உடைக்கிறதும்.
எங்கட வீட்டிலதானே நாங்கள் இருக்கிறம்,
ஏன் ஒண்டுக்கும் பிடிக்கேல்ல.
நிலையமே பிழையாம்.
பேயங்கள்
நாங்களெடுத்த ந}லையமே?
பாட்டனும் புூட்டனும் எடுத்த நிலையம்.
நிலையம் சரி.
அதில மாற்றமில்லை.
பழைய வீடெண்டாலும்
உடைபட்டுப் போனதெண்டாலும்
இது எங்கட வீடு.
எத்தனையக் கண்டுட்டம் இதுக்குள்ள.
எத்தனை இழப்பு
எத்தனை இழவு, அலைவு.
அழுகையும் பற்கடிப்பும் அடுத்தடுத்து.
இனிமேலும் ஒழுங்குக்குள்ள இருக்ககேலாது.
மேச்சல சரியா மேயோணும்
கூரைக்கும் அமுக்கம் போடோணும்.
எந்தக் காத்தும் புடுங்காதமாதிரி.
உடம்பை வெறுத்து.
உயிரை வ}த்து
கல்லறுத்து சூளை வச்சிருக்கு.
களியோட இந்த முறை சுண்ணாம்பும் சேர்க்கோணும்.
கறையான் கூடு வராமல்.
தம பியன் தான் எங்கட மேசன்.
கட்டுறதுக்கு ப}ளான் சொல்ல கனபேர் வருவினம்.
எங்களுக்கும் பிளானிருக்கு;
இருக்கப் போறது நாங்கள்.

