06-21-2003, 09:33 AM
வெண்புறாவே
மீண்டும் வரவின்
இன்ப ஒலிகள் காதில் கேட்கிறது.
இருபுறத்தின் வேட்டொலிகளும்
மெல்லத் தணிந்து நிசப்தம் ஆகிவிட்டது.
வண்ண முழு நிலவை கடற்கரை மணலில்
இளம் உள்ளங்கள் இரசிக்கத் தொடங்கியுள்ளார்கள்.
மனித சஞ்சாரமற்ற
உறங்கிப் போயிருந்த பல
தெருக்களில் அச்சத்துடன் சிலர் உலாவருகின்றார்கள்.
இன்னும் பச்சை உடைகளும்
வீதித் தடைகளும் அகற்றப்பட வில்லை.
குடிசைகளுள் உறங்கிக் கொண்டிருக்கும்
உயிருள்ள எலும்புக் கூடுகள்
கண்களில் சிறு பிரகாசம்.
உணவு வண்டிகள் பல வரும் என்ற
மகிழ்ச்சிப் பிரகாசம்.
பல வீதிகளுக்கு கூட சிறு கனவு:
தங்கள் மீது
இனியாவது,
புழுதியடங்குமா?
என்றுதான
அம்பாப் பாடல்களின்
இன்னொலிகள் கேட்குமென்று.
முகில்களின் சந்தோசப் பிரகாசிப்பில்
பறவையினங்கள் ஆனந்தக் கூத்தாடுகின்றன.
காற்றினை அடைக்கும்
கொடூர ஒலியினை எழுப்பும்
போர்ப் பறவைகள் இனி
உலாவராது என்ற எதிர்பார்ப்பில்
எல்லா மகிழ்வும்
வெண்புறாவின் சுதந்திரப் பறப்பிலேயே உள்ளது.
மீண்டும் வரவின்
இன்ப ஒலிகள் காதில் கேட்கிறது.
இருபுறத்தின் வேட்டொலிகளும்
மெல்லத் தணிந்து நிசப்தம் ஆகிவிட்டது.
வண்ண முழு நிலவை கடற்கரை மணலில்
இளம் உள்ளங்கள் இரசிக்கத் தொடங்கியுள்ளார்கள்.
மனித சஞ்சாரமற்ற
உறங்கிப் போயிருந்த பல
தெருக்களில் அச்சத்துடன் சிலர் உலாவருகின்றார்கள்.
இன்னும் பச்சை உடைகளும்
வீதித் தடைகளும் அகற்றப்பட வில்லை.
குடிசைகளுள் உறங்கிக் கொண்டிருக்கும்
உயிருள்ள எலும்புக் கூடுகள்
கண்களில் சிறு பிரகாசம்.
உணவு வண்டிகள் பல வரும் என்ற
மகிழ்ச்சிப் பிரகாசம்.
பல வீதிகளுக்கு கூட சிறு கனவு:
தங்கள் மீது
இனியாவது,
புழுதியடங்குமா?
என்றுதான
அம்பாப் பாடல்களின்
இன்னொலிகள் கேட்குமென்று.
முகில்களின் சந்தோசப் பிரகாசிப்பில்
பறவையினங்கள் ஆனந்தக் கூத்தாடுகின்றன.
காற்றினை அடைக்கும்
கொடூர ஒலியினை எழுப்பும்
போர்ப் பறவைகள் இனி
உலாவராது என்ற எதிர்பார்ப்பில்
எல்லா மகிழ்வும்
வெண்புறாவின் சுதந்திரப் பறப்பிலேயே உள்ளது.

