06-21-2003, 09:33 AM
வெள்ளெருக்கை மேவும்
மல்லிகையின் வளர்வாக
இந்த மண்ணேன் இப்போது மகிழ்கிறது?
தாயற்று வெம்பும் குழந்தையின் மனதோடும்
தாகங்கள் தீராத முகங்களோடும்
தவிப்பு மேலிட அலைவுற்ற காலங்களின் முடிவாய்
நீங்களற்ற
எமது நகரம் சுமந்த வதைகளும்
வலிந்த புன்னகைகளும் சிதையேறும் கணங்களாக
உங்களின் வரவு நிகழ்கிறது.
சாட்சுவதமான வாழ்வின் மிளிர்வை
உங்கள் காலடிகளில் இருந்து ஏற்றுவோம்.
உயிரணுக்கள் நோக
எம்மில் மோதிய கொடூர விழிகளின் தகிப்பு
தணிந்தோயாப் பொழுதிலும்
உங்கள் நிழல்கண்டு குளிர்வுறுவோம்.
தொன்மங்களாகிப் போகும்.
ஒரு விடுதலையின் படிமங்கள் துலங்க
சித்திரங்கள் நிலையென வரையலாகும் பொழுதுகள்
விழியுருக்குமெனிலும்
ஆத்மாவின் நிறைவு
அதில் உண்டல்லவா?
மல்லிகையின் வளர்வாக
இந்த மண்ணேன் இப்போது மகிழ்கிறது?
தாயற்று வெம்பும் குழந்தையின் மனதோடும்
தாகங்கள் தீராத முகங்களோடும்
தவிப்பு மேலிட அலைவுற்ற காலங்களின் முடிவாய்
நீங்களற்ற
எமது நகரம் சுமந்த வதைகளும்
வலிந்த புன்னகைகளும் சிதையேறும் கணங்களாக
உங்களின் வரவு நிகழ்கிறது.
சாட்சுவதமான வாழ்வின் மிளிர்வை
உங்கள் காலடிகளில் இருந்து ஏற்றுவோம்.
உயிரணுக்கள் நோக
எம்மில் மோதிய கொடூர விழிகளின் தகிப்பு
தணிந்தோயாப் பொழுதிலும்
உங்கள் நிழல்கண்டு குளிர்வுறுவோம்.
தொன்மங்களாகிப் போகும்.
ஒரு விடுதலையின் படிமங்கள் துலங்க
சித்திரங்கள் நிலையென வரையலாகும் பொழுதுகள்
விழியுருக்குமெனிலும்
ஆத்மாவின் நிறைவு
அதில் உண்டல்லவா?

