06-21-2003, 09:32 AM
யாருமற்ற ஊருக்குள்
ஓவென்று இரைகிறதே காற்று.
என்ன நடந்தது இங்கு
எல்லோரும் எங்கு போய்விட்டனர்?
தெருவில் புழுதியளையும் சிறுவரெங்கே?
அல்லிப் புூவாட்டம்
ஆற்றில் குளித்தெழும் பெண்களைக் காணோமே.
உலாவரும் கொம்பன் மாடுகளும் தொலைந்தனவா?
பாடும் குயில்களும் கிளிகளும் பறந்தனவா?
சலசலத்தோடும் இரணைமடு வாய்க்காலின்
சந்தன நீரை உறுஞ்சியவன் எவன்?
நெற்றியிலிட்ட ஒட்டுப் பொட்டாய்
நிலவுவருமே
எவன் களவெடுத்துப் போனான் அதை.
காடதிரக் கேட்குமே காத்தான் கூத்துப்பாட்டு
அண்ணாவியின் வாயை அடைத்தவன் யார்?
அழுத நாளிற் கூட கலகலவென்றிருந்த ஊருக்கு
எவரிட்ட சாபமிது?
கண்பட்டுப் போனதோ கற்பகவிருட்சம்?
கட்டிய கச்சையை அவிழ்த்து ஏன் மேலாக்குப் பிடிக்கிறனர் எல்லோரும்.
சிறையிருந்த போதே சிரித்தவன்
ஒப்பந்தம் என்றதும் உருகிப் போனார்களா?
ஓமந்தைக்கு அப்பாலான உலகில்
தங்கமழை பொழிவதாக யார் சொன்னது?
மூச்சுவிடக் காற்றைத் தவிர
எல்லாவற்றுக்கும் தடையிருந்தது நேற்று.
எவரும் அழவில்லையே அப்போது
வரும்பகையெதிர்க்கும் வல்லமையுடன்.
வீதி திறந்தும் ஏனிந்த விபாPதம்.
இடிதாங்கி விட்டு இருக்கிறது மாங்குளம்
தேகமெங்கும் குண்டுபட்டும்
போகப் புறப்படவில்லையே புளியங்குளம்
இவர்களுக்கு மட்டுமேன் இத்தனை அவசரம்?
மாலிகா
ஓவென்று இரைகிறதே காற்று.
என்ன நடந்தது இங்கு
எல்லோரும் எங்கு போய்விட்டனர்?
தெருவில் புழுதியளையும் சிறுவரெங்கே?
அல்லிப் புூவாட்டம்
ஆற்றில் குளித்தெழும் பெண்களைக் காணோமே.
உலாவரும் கொம்பன் மாடுகளும் தொலைந்தனவா?
பாடும் குயில்களும் கிளிகளும் பறந்தனவா?
சலசலத்தோடும் இரணைமடு வாய்க்காலின்
சந்தன நீரை உறுஞ்சியவன் எவன்?
நெற்றியிலிட்ட ஒட்டுப் பொட்டாய்
நிலவுவருமே
எவன் களவெடுத்துப் போனான் அதை.
காடதிரக் கேட்குமே காத்தான் கூத்துப்பாட்டு
அண்ணாவியின் வாயை அடைத்தவன் யார்?
அழுத நாளிற் கூட கலகலவென்றிருந்த ஊருக்கு
எவரிட்ட சாபமிது?
கண்பட்டுப் போனதோ கற்பகவிருட்சம்?
கட்டிய கச்சையை அவிழ்த்து ஏன் மேலாக்குப் பிடிக்கிறனர் எல்லோரும்.
சிறையிருந்த போதே சிரித்தவன்
ஒப்பந்தம் என்றதும் உருகிப் போனார்களா?
ஓமந்தைக்கு அப்பாலான உலகில்
தங்கமழை பொழிவதாக யார் சொன்னது?
மூச்சுவிடக் காற்றைத் தவிர
எல்லாவற்றுக்கும் தடையிருந்தது நேற்று.
எவரும் அழவில்லையே அப்போது
வரும்பகையெதிர்க்கும் வல்லமையுடன்.
வீதி திறந்தும் ஏனிந்த விபாPதம்.
இடிதாங்கி விட்டு இருக்கிறது மாங்குளம்
தேகமெங்கும் குண்டுபட்டும்
போகப் புறப்படவில்லையே புளியங்குளம்
இவர்களுக்கு மட்டுமேன் இத்தனை அவசரம்?
மாலிகா

