Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தயவு செய்து உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்!
#6
தனிமனித இலட்சியத்தை அடைய குடும்பம்.. சமூகம் தடை என்பது இயலாமையின் வெளிப்பாடு...! ஒரு தனி மனிதனை... சமூகத்தை ஆக்குவது.. குடும்பம் என்ற அலகுதான்....அந்த அலகின் அடிப்படையாக இருப்பவர்கள்... கணவனும் மனைவியும்...!

பிரகாஷ் ராஜ் போன்ற பாத்திரத்தின் தனி மனித இலட்சியம் என்பது எதை நோக்கியது...சுயநலம் நோக்கியதா...குடும்பம் நோக்கியதா...சமுதாயம் நோக்கியதா...அது யாழி உங்கள் கருத்தால் தெளிவுறுத்தப்படவில்லை...!

ஒரு தனிமனிதனின் இலட்சியத்தின் தன்மை அறியாது அவனுள் எழும் தற்கால உணர்வுகளுக்கு ஏற்ப ஒரு பெண்ணோ ஆணோ சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பை ஏன் குலைக்க வேண்டும்... அதனால் எழும் பாதிப்புக்களை மேலதிக சுமையாக்க வேண்டும்...!

கணவன் என்றாலும் சரி மனைவி என்றாலும் சரி தனி மனிதனின் இலட்சியத்தின் தன்மைக்கு ஏற்ப குடும்பம் என்ற கட்டமைப்பின் வழி அவ்விலச்சியத்தை அடைய இணைந்து செயற்படலாம் அல்லது தன்னாலான பக்களிப்பை வழங்கலாம்...! இதன் மூலம் மனித முயற்சிகள் பலப்படவும் வெற்றிகள் பெறப்படவும் துணை புரியலாம்...அதன் மூலம் அந்தக் குடும்ப தனி நபர்கள் மட்டுமன்றி முழுச் சமூகமும் நன்மை பெறும்...! அதற்காக அவர்கள் தங்களளவில் எதையும் இழக்க வேண்டும் என்பதில்லையே......!

அடிப்படையில் கணவன் மனைவியிடம் நல்ல புரிந்துணர்வு இருக்குமாயின்...கருத்துப் பிறழ்வுகளாலான குடும்பப் பிரிவினைகளும் சமூகப் பலவீனங்களும் ஏற்படுவது தடுக்கப்படலாம்...! ஒரு பெண்ணோ ஆணோ தனித்து வாழ்வது என்பது சாதனைக்குரிய விடயம் அல்ல...உண்மையில் அது பலவீனத்தின் வெளிப்பாடு....சமூக வாழ்வியலுக்குள் தனது பங்களிப்பை வழங்க முடியாத சமூக வாழ்வியலில் இருந்து ஒதுங்கி வாழும் சுயநலத் தன்மையின் வெளிப்பாடு...அது மனித இனத்தினதும் மனிதாபிமானத்தினதும் விருத்திக்கு உதவாது...!

இப்படியான பாத்திரப் படைப்புக்கள் மூலம் ஆண்களோ பெண்களோ ஒருவர் மற்றவருக்கு உதவாது தனித்து உலகில் வாழும் திறன் படைத்தவர்கள்...என்ற தவறான சமநிலை வாதம் கற்பிக்க முற்படின்... அது...மனிதனின் சமூக வாழ்வியலின் பால் எழுந்த தவறான பார்வையால் பிறந்ததாகவே கருத்தப்பட முடியும்...!

ஆண் பெண் சமூகவியல் சமத்துவம் என்பது ஆண் - பெண் பிரிந்து போட்டி போட்டு வாழ்தலிலல்ல...புரிந்துணர்வோடு உரிமைகளை சம அளவில் பங்கிட்டு வாழுதல்...அதற்காக மனிதனை வாழ்வியலில் நெறிப்படுத்தக் கூடிய நல்ல கலாசார சமூகப் பண்புகளை இழக்க வேண்டும் என்பதல்ல...!

உண்மையில் ஆண் - பெண் சமூகவியல் சமத்துவம் என்பது உள்ளத்தில் ஏற்படும் புரிந்துணர்வின் பால் பரஸ்பர அன்பின் பால் எழ வேண்டுமே தவிர...போட்டியின் பால்... விரோதத்தின் பால்... சகிப்புத்தன்மையின்மையின் பால்...புரிந்துணர்வுக்கு வாய்ப்பளிக்காத தன்மையின் பால் அல்ல...! அப்படி நிகழின் அது சமூகத்தில் பல புதிய பிரச்சனைகளுக்கும் மனித சமூகப் பலவீனத்துக்குமே இடமளிக்கும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by yalie - 07-19-2005, 03:49 PM
[No subject] - by narathar - 07-19-2005, 04:16 PM
[No subject] - by Vasampu - 07-19-2005, 05:27 PM
[No subject] - by stalin - 07-19-2005, 05:30 PM
[No subject] - by kuruvikal - 07-19-2005, 10:59 PM
[No subject] - by yalie - 07-21-2005, 03:56 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)