07-19-2005, 05:27 PM
வணக்கம் யாழி. உங்கள் கேள்விக்கு நேரடியாக இல்லாமல் பொதுவானதாக பதில் சொல்ல விரும்புகின்றேன். ஏற்றுக் கொள்வீர்களென நம்புகின்றேன். முதலில் சமுதாயமென நாம் சொல்லும்போது நாமும் சேர்ந்தது. நாம் நன்றாகவிருக்கும்போது சமுதாயம் பற்றிய சிந்தனை எமக்கு ஏற்படாது. ஆனால் எம் வாழ்க்கையில் பாதிப்புகள் ஏற்படும்போது இலகுவாக சமுதாயத்தில் பழியைப் போட்டுவிடுகின்றோம். நாம் எமது வாழ்வில் மற்றவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படாது எடுக்கும் முடிவுகள் பற்றி மற்றவர்களுக்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை. அதேபோல் திரைப்படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் வாழ்க்கையிலும் பொருந்துமெனவும் எண்ணிவிடமுடியாது.

