Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொதுக்கட்டமைப்பிற்கு தடை!!!
#1
<b>பொதுக்கட்டமைப்பிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!!! </b>

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா அரசிற்குமிடையே கைச்சாதிடப்பட்ட பொதுக்கட்டமைப்பு உடன்படிக்கைக்கு சிறீலங்காவின் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சிங்கள இனவெறி அமைப்புக்களான ஜேவிபி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகியவற்றால் பொதுக்கட்டமைப்பு உடன்படிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்தநிலையில் இவ்வழக்கு பிரதம நீதியரசர் சரத் என். சில்வா, நீதியரசர்கள் காமினி அமரதுங்க மற்றும் ராஜா பெர்னான்டோ முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது பொதுக்கட்டமைப்பிற்கு எதிரான இடைக்காலத் தடையுத்தரவு நீதிபதிகளால் பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றின் இறுதித் தீர்ப்புவரும்வரை இந்த தடையுத்தரவு நீடிக்குமென நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

நிதிக்கையாள்கை, பிராந்திய குழுவின் தலைமையகம் கிளிநொச்சியில் அமைக்கப்படுவது மற்றும் திட்டங்களுக்கு பிராந்தியக்குழு ஒப்புதல் அளிப்பது தொடர்பிலேயே இதற்கு தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
sankathi
www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
பொதுக்கட்டமைப்பிற்கு தடை!!! - by தமிழரசன் - 07-16-2005, 04:12 AM
[No subject] - by AJeevan - 07-16-2005, 07:42 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)