Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழ செய்திகள்..
#1
விடுதலைப் புலிகளின் பிஸ்ரல் குழுவைச் சேர்ந்த 22 பேர் வவுனியாவுக்கு ஊருடுவியிருப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்து சிங்களப் படையினரின் பாதுகாப்புடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டு வந்த புளொட், ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எஃப் (வரதர் அணி)போன்றவற்றின் முக்கிய உறுப்பினர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகத் தெரிகிறது.


இந்தக் கட்சிகளின் முக்கிய உறுப்பினர்கள் வவுனியாவிலிருந்து கொழும்புக்கு தப்பிச் சென்றுள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளுக்கெதிராகச் செயற்படும் இவர்களுக்கெதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலேயே முல்லைத்தீவிலிருந்து பிஸ்ரல் குழுவினர் வவுனியா வந்துள்ளதாக அரச புலனாய்வுத்துறைக்குத் தகவல் கிடைத்ததையடுத்து சிங்களப் படையினர் வவுனியாவில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

வாகனங்களில் பயணம் செய்வோரில் சந்தேகத்திற்கிடமானவர்களை சோதனையிட்டும் வருகின்றனர்.

வவுனியாவில் கோவில்குளம், சின்னக்குளம், குருமன்காடு ஆகிய பிரதேசங்களில் விடுதலைப் புலிகளின் பிஸ்ரல் குழுவினர் நடமாடுவதாக சிறிலங்கா படையினருக்கு தகவல் கிடைத்திருப்பதாகக் கூறப்பட்டாலும் இதுவரை படையினரால் நடத்தப்பட்ட சோதனையில் பிஸ்ரல் குழுவைச் சேர்ந்த எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் படை வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
புளொட், ஈபிடிபி, ஈபிஆர்எல்எஃப்(வரதர்) தப்பியோட்டம்! - by வினித் - 07-14-2005, 10:18 AM
[No subject] - by வினித் - 08-18-2005, 05:37 PM
[No subject] - by simran2005 - 08-19-2005, 04:33 PM
[No subject] - by வினித் - 08-20-2005, 04:08 PM
[No subject] - by Birundan - 08-22-2005, 05:28 PM
[No subject] - by ஊமை - 08-24-2005, 04:34 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)