06-21-2003, 09:24 AM
குறும்பன்
தறித்து வீழ்த்திய
தென்னை மரத்தின்
குற்றியில் இருந்தபடி
அவன் தன் நண்பர்களோடு கூடிச் சிரித்தான்
எத்துனை அற்புதமான ஓவியங்களை
மனதில் நிழலாட விட்டபடி
சூரியனை மேற்கில் கொண்டுபோய்
சாய்த்துவிட்டு
நிலவின் ஒளிக் கற்றைகளோடு
வீடு திரும்புவான்
புழுதிப் புூச்சேற்றிய
ஒப்பனைக்குள் மறைந்தபடி
முனிதவம் கலைந்து போனது போலப்
புறப்பட்டு வருகிற
அப்பாவின் கோபக் கனல்களையே
அவன் ஏவுகிற அஸ்த்திரங்கள்
ஒவ வொன்றாய் வீழ்த்தும்.
எந்தப் பாடங்களும்
அவனுக்கு சரிவராது போகையிலும்
புவி அளப்பது மட்டும்
அவனுக்கு மிக நன்றாக வழிப்போகும்
மனக் கணக்குகளை
பிழைபடச் சொல்லுகையிலும்
அப்பா
அவனுக்காக வழக்காடுவார்
அவன் தான்
பின்னாளில்
புூமிக்காக வழக்காடும்
ஒரு போரிலும் நின்றான்
வாழ்வையும் சாவையும் வென்று.
தறித்து வீழ்த்திய
தென்னை மரத்தின்
குற்றியில் இருந்தபடி
அவன் தன் நண்பர்களோடு கூடிச் சிரித்தான்
எத்துனை அற்புதமான ஓவியங்களை
மனதில் நிழலாட விட்டபடி
சூரியனை மேற்கில் கொண்டுபோய்
சாய்த்துவிட்டு
நிலவின் ஒளிக் கற்றைகளோடு
வீடு திரும்புவான்
புழுதிப் புூச்சேற்றிய
ஒப்பனைக்குள் மறைந்தபடி
முனிதவம் கலைந்து போனது போலப்
புறப்பட்டு வருகிற
அப்பாவின் கோபக் கனல்களையே
அவன் ஏவுகிற அஸ்த்திரங்கள்
ஒவ வொன்றாய் வீழ்த்தும்.
எந்தப் பாடங்களும்
அவனுக்கு சரிவராது போகையிலும்
புவி அளப்பது மட்டும்
அவனுக்கு மிக நன்றாக வழிப்போகும்
மனக் கணக்குகளை
பிழைபடச் சொல்லுகையிலும்
அப்பா
அவனுக்காக வழக்காடுவார்
அவன் தான்
பின்னாளில்
புூமிக்காக வழக்காடும்
ஒரு போரிலும் நின்றான்
வாழ்வையும் சாவையும் வென்று.

