06-21-2003, 09:23 AM
மாவீரனின் நினைவாக
தந்தையார்
அவர்
மகனைத் தேடுகின்றார்
விடுவிக்கப்பட்ட கிராமங்களுக்கு
போய்க் கொண்டிருக்கிற
மக்களின் முகங்களிலும்
எல்லாப் பிள்ளைகளும்
இனிதிருக்க எரிந்தொளிர்ந்தான்
என்பது தெரிந்தும்
அவர் மனமோ
வாலறுந்த பட்டமெனக்
கிடந்தலைதலுற்றது
அலைகள் அடங்கா இருளில்
அவனு}ர்ந்த தோணியும்
சிலுவையாய் மாறியது
இராவணன் மீசை ணீ
அவன் தலையில் முள்முடியெனத் தரித்தது
கரையேறக் கரையேற
ஏரோதுவின் கொடும் சகாக்களாக
ஆக்கிரமிப்பாளர் மாறுகையில்
"தந்தையே ஏன் என்னைக் கைவிட்டாய்"
என்றொரு குரல் அநாதரவாய் காலமெல்லாம் அலைந்தது.
மீட்பலைகளின்
வருகை தீராத தீவொன்றின் கரையில்
எழுதிய புதிய காவியமென அவன்
ஒளியின் சொரிக் கதிர் தடவி
விடுதலை வயல் வரம்பில்
புது நடையோடு போனான்
புழுதிமண் சொரியும் தெருவில் போகும் மக்கள் மனங்களில்
அவன் ஆன்மா
குருதியில் குளித்த
விடுதலைச் சிலையெனச் சொரூபிக்கிறது.
தந்தையார்
அவர்
மகனைத் தேடுகின்றார்
விடுவிக்கப்பட்ட கிராமங்களுக்கு
போய்க் கொண்டிருக்கிற
மக்களின் முகங்களிலும்
எல்லாப் பிள்ளைகளும்
இனிதிருக்க எரிந்தொளிர்ந்தான்
என்பது தெரிந்தும்
அவர் மனமோ
வாலறுந்த பட்டமெனக்
கிடந்தலைதலுற்றது
அலைகள் அடங்கா இருளில்
அவனு}ர்ந்த தோணியும்
சிலுவையாய் மாறியது
இராவணன் மீசை ணீ
அவன் தலையில் முள்முடியெனத் தரித்தது
கரையேறக் கரையேற
ஏரோதுவின் கொடும் சகாக்களாக
ஆக்கிரமிப்பாளர் மாறுகையில்
"தந்தையே ஏன் என்னைக் கைவிட்டாய்"
என்றொரு குரல் அநாதரவாய் காலமெல்லாம் அலைந்தது.
மீட்பலைகளின்
வருகை தீராத தீவொன்றின் கரையில்
எழுதிய புதிய காவியமென அவன்
ஒளியின் சொரிக் கதிர் தடவி
விடுதலை வயல் வரம்பில்
புது நடையோடு போனான்
புழுதிமண் சொரியும் தெருவில் போகும் மக்கள் மனங்களில்
அவன் ஆன்மா
குருதியில் குளித்த
விடுதலைச் சிலையெனச் சொரூபிக்கிறது.

