06-21-2003, 09:22 AM
நேற்றுவரை நீங்கள் நேரிருந்தீர்
கண்களிலே?..
புூத்ததுபோல் புூத்துப் புன்னகைத்தீர் போய்விட்டீர்
எங்களுடன்
பேசிக் களித்தீர் போய்விட்டீர்
தாயகத்தில்
வீசிவரும் காற்றில் விரித்த சிறகெடுத்துத்
தூரப் பறந்துவிட்ட துணிவுப் பறவைகளே!
ஈரவிழியிங்கு எமக்கிங்கு காயங்வில்லை.
ஊரறியோம் உங்கள் உறவறியோம்
தந்தையிட்ட பேரறியோம் ஆனாலும்
புகழறிந்து நிற்கின்றோம்
நெஞ்சினிலே உங்கள் நினைவுக்கு
மாலையிட்டு
நஞ்சணிந்தோம்
நீங்கள் நடந்தவழி நடக்கின்றோம்.
தம்பியென்றும்
அண்ணன் தங்கையென்றும்
எங்களுக்கோர்
வம்சவழி தோன்ற வாழ்ந்தோமே
கல்லறைக்குள் நீங்கள் கண்மூடித்
தூங்குவதாய்
சொல்லுகிறார்
உங்கள் தேகம் தூங்காதே
மொட்டுவிழும் புூவினிலே முகம் தெரியும்
கல்லறைக்குக்
கிட்டவர உங்கள் கண்தெரியும்
வீசுகின்ற
காற்றினிலும் மூச்சுக் கலந்து
எம்மை உயிர்ப்பிக்கும்
கூற்றெனவே வரும் பகையைக்
குடிப்போம்
வென்றிடுவோம்.
புதுவை இரத்தினதுரை
கண்களிலே?..
புூத்ததுபோல் புூத்துப் புன்னகைத்தீர் போய்விட்டீர்
எங்களுடன்
பேசிக் களித்தீர் போய்விட்டீர்
தாயகத்தில்
வீசிவரும் காற்றில் விரித்த சிறகெடுத்துத்
தூரப் பறந்துவிட்ட துணிவுப் பறவைகளே!
ஈரவிழியிங்கு எமக்கிங்கு காயங்வில்லை.
ஊரறியோம் உங்கள் உறவறியோம்
தந்தையிட்ட பேரறியோம் ஆனாலும்
புகழறிந்து நிற்கின்றோம்
நெஞ்சினிலே உங்கள் நினைவுக்கு
மாலையிட்டு
நஞ்சணிந்தோம்
நீங்கள் நடந்தவழி நடக்கின்றோம்.
தம்பியென்றும்
அண்ணன் தங்கையென்றும்
எங்களுக்கோர்
வம்சவழி தோன்ற வாழ்ந்தோமே
கல்லறைக்குள் நீங்கள் கண்மூடித்
தூங்குவதாய்
சொல்லுகிறார்
உங்கள் தேகம் தூங்காதே
மொட்டுவிழும் புூவினிலே முகம் தெரியும்
கல்லறைக்குக்
கிட்டவர உங்கள் கண்தெரியும்
வீசுகின்ற
காற்றினிலும் மூச்சுக் கலந்து
எம்மை உயிர்ப்பிக்கும்
கூற்றெனவே வரும் பகையைக்
குடிப்போம்
வென்றிடுவோம்.
புதுவை இரத்தினதுரை

