06-21-2003, 09:21 AM
யாழ்பாணத் தரிசனம்
1
மீளவும் உயிர்த்திருக்கிறது பசுமை
தமிழரின் நிமிர்வின் குறியீடாய்
இயக்கச்சியைத் தின்றிருந்த
'அயன் சைற்' றின் நிழலில் அறுத்தெறியப்பட்ட
தாலங்களின் "அடிக்கட்டைத் தோப்பில்"
மீளவும் உயிர்க்கின்றது பசுமை
'உடையவன் கண்டால் தற்கொலைதான் செய்வான்'
என்றவிந்த நெஞ்சுகள் குளிர்ந்தன..
வயிறெரிந்து சாபமிடல், கழிவிரக்கம்
என்பதல்ல எங்கள் வாழ்வியல்
'மீண்டும் தொடங்கும் மிடுக்கு' எங்கள் வழி!
வாழ்க தோப்புடையோனே,
நீங்கள் எங்கள் வாழ்வின் துளிர்.
2
பளை தாண்டிப் போகிறது வண்டி
வட்டற்ற தென்னைகள் பனைகள்.
எறிகணைச் சிதறல்களைத் தாங்கி
பலப்பல கோலங்களில் மரங்கள்.
குறுக்கறுத்த புலிகளைச் சூழ்ந்து
அறுபதாயிரம் படையினர் புரிந்த சாதனை!
பதைக்கிறது மனது,
இதனுள் நின்றவர் எப்பாடுபட்டிருப்பர்!
விரிகின்றன விழிகள்.
உயிரிழந்து பல்லிளித்து நிற்கிறது
துருப்புக்காவி ஒன்று அப்பாலே ஒரு ட்ரக்.
இதனுள்ளிருந்தா கேட்டாய் எம் தளபதியைச் சரணடைய
காப்போமவற்றை.
எம்பிள்ளைகளின் வீரத்தின் சின்னமாய்.
3
வாய்விட்டுச் சிரித்தேன்
மறுகணம் இறுகிக் கொண்டது மனம்
முட்கம்பியும் காவலரணும் சுவர்க்கரையொன்று
"ளுசடையமெயn யுசஅல ஐள டீநளவ" என்கிறது.
திரும்பிப் பார்த்தேன்
யாழ் வளைவும் செம்மணி வெளியும்
தெளிவாய்த் தெரிந்தன.
4
எட்டாவது ஆண்டில் உன்னைத்
தரிசிக்க வந்தேன் உன் துயிலிடத்தில்
நள்ளிரவில் சுடரேற்றி நாமழுது உரமேற்ற
நாட்கள் எழுந்தன மனதில்
இப்போதும் மஞ்சள் மாலையில்
ஆயிரங்களாய்க் கூடினோம்
'சந்திகளில் நின்றோர்' முகமும் மனமும் அதிர
மீண்டும் உயிர்த்த உன் துயிலிடத்தில்
ஏற்றுகிறேன் சுடர்கள்
சுடர்கிறது ஒளியென் மனதில்.
பு.சிந்துஜன
1
மீளவும் உயிர்த்திருக்கிறது பசுமை
தமிழரின் நிமிர்வின் குறியீடாய்
இயக்கச்சியைத் தின்றிருந்த
'அயன் சைற்' றின் நிழலில் அறுத்தெறியப்பட்ட
தாலங்களின் "அடிக்கட்டைத் தோப்பில்"
மீளவும் உயிர்க்கின்றது பசுமை
'உடையவன் கண்டால் தற்கொலைதான் செய்வான்'
என்றவிந்த நெஞ்சுகள் குளிர்ந்தன..
வயிறெரிந்து சாபமிடல், கழிவிரக்கம்
என்பதல்ல எங்கள் வாழ்வியல்
'மீண்டும் தொடங்கும் மிடுக்கு' எங்கள் வழி!
வாழ்க தோப்புடையோனே,
நீங்கள் எங்கள் வாழ்வின் துளிர்.
2
பளை தாண்டிப் போகிறது வண்டி
வட்டற்ற தென்னைகள் பனைகள்.
எறிகணைச் சிதறல்களைத் தாங்கி
பலப்பல கோலங்களில் மரங்கள்.
குறுக்கறுத்த புலிகளைச் சூழ்ந்து
அறுபதாயிரம் படையினர் புரிந்த சாதனை!
பதைக்கிறது மனது,
இதனுள் நின்றவர் எப்பாடுபட்டிருப்பர்!
விரிகின்றன விழிகள்.
உயிரிழந்து பல்லிளித்து நிற்கிறது
துருப்புக்காவி ஒன்று அப்பாலே ஒரு ட்ரக்.
இதனுள்ளிருந்தா கேட்டாய் எம் தளபதியைச் சரணடைய
காப்போமவற்றை.
எம்பிள்ளைகளின் வீரத்தின் சின்னமாய்.
3
வாய்விட்டுச் சிரித்தேன்
மறுகணம் இறுகிக் கொண்டது மனம்
முட்கம்பியும் காவலரணும் சுவர்க்கரையொன்று
"ளுசடையமெயn யுசஅல ஐள டீநளவ" என்கிறது.
திரும்பிப் பார்த்தேன்
யாழ் வளைவும் செம்மணி வெளியும்
தெளிவாய்த் தெரிந்தன.
4
எட்டாவது ஆண்டில் உன்னைத்
தரிசிக்க வந்தேன் உன் துயிலிடத்தில்
நள்ளிரவில் சுடரேற்றி நாமழுது உரமேற்ற
நாட்கள் எழுந்தன மனதில்
இப்போதும் மஞ்சள் மாலையில்
ஆயிரங்களாய்க் கூடினோம்
'சந்திகளில் நின்றோர்' முகமும் மனமும் அதிர
மீண்டும் உயிர்த்த உன் துயிலிடத்தில்
ஏற்றுகிறேன் சுடர்கள்
சுடர்கிறது ஒளியென் மனதில்.
பு.சிந்துஜன

