Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்தியா-அமெரிக்கா ராணுவ ஒப்பந்தம்
#2
அமெரிக்காவுடன் இந்தியா செய்துள்ள ஒப்பந்தத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கைகள்@ இந்து சமுத்திர பகுதியில் வான், கடல், தரை மார்க்கமான வியாபாரத்தினைப் பாதுகாத்தல் என்பவைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பது, இந்தியாவானது இந்து சமுத்திரத்தில், இலங்கையைச் சுற்றியுள்ள பகுதிகளில், கடற்படை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமெரிக்கா பச்சைக் கொடி காட்டியிருப்பது போல் தெரிகிறது.

சுதந்திர இலங்கையில் இந்தியா இராணுவ நடவடிக்கையினை மேற்கொள்வதாயின், அது இலங்கை அரசின் சம்மமதத்துடன்தான் மேற்கொள்ள முடியும். இந்தநிலையில் இந்திய - இலங்கைப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று விரைவில் கைச்சாத்திடப்பட சாத்தியங்கள் உண்டு.

இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டால், இந்தியப் படையானது பயங்கரவாதத்தினை ஒழிப்பது என்ற போர்வையில இலங்கையுள் நுழைந்து, இராணுவ நடவடிக்கையினை மேற்கொள்ளமுடியும்.

எவ்வாறாயினும், பொதுக் கட்டமைப்பு ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், போரானது தமிழ்த் தேசத்தால் ஆரம்பிக்கப்படுவதே, இந்தியா, சிறீ லங்கா அரசுகளுக்கு சாதக வாய்ப்புக்களை அதிகரிக்கும்.

இந்நிலையில் தமிழ்த் தேசமானது புத்திசாதுரியமாக காய் நகர்த்துவது அவசியம்.
Reply


Messages In This Thread
[No subject] - by ஈழத்துளி - 07-07-2005, 02:19 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)