07-03-2005, 08:23 PM
கிரகங்கள் உருவானதை கண்டறிய முயற்சி: வால்நட்சத்திரத்தைப் பிளக்கும் விண்கலம் புறப்பட்டுச் சென்றது
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41257000/jpg/_41257297_deepimp_nasa_203.jpg' border='0' alt='user posted image'><img src='http://newsimg.bbc.co.uk/media/images/40630000/jpg/_40630465_di_nasa_203.jpg' border='0' alt='user posted image'>
பாஸதீனா, ஜூலை 4: விண்வெளியில் பயணம் செய்துகொண்டிருக்கும் "டெம்பெல்~1' என்னும் வால்நட்சத்திரத்தின் மீது மோதிப் பிளக்கவுள்ள விண்கலத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ""நாஸô'' ஞாயிற்றுக்கிழமை விண்ணில் செலுத்தியது.
வால்நட்சத்திரத்தின் மையப் பகுதி எவ்வகைப் பொருளால் ஆனது என்பதை ஆராய்வதே இதன் நோக்கம். அதன் மூலம், சூரியனும் சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்களும் எவ்வாறு தோன்றின என்பதற்கான விடையைக் கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
ஏனென்றால், சூரியக் குடும்பம் தோன்றுவதற்கு ஆதாரமாக இருந்த பொருள்கள், வால்நட்சத்திரத்தின் மையப் பகுதியில் உறைந்து கிடக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வால்நட்சத்திரத்தின் மையப் பகுதியைப் பிளந்து ஆராய்வதற்காக விண்கலத்தை அனுப்பி மோதுவது இதுவே முதல் முறையாகும். ரூ.1500 கோடி செலவில் இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பாஸதீனாவிலிருந்து இந்திய நேரப்படி பகல் 11.37-க்குப் புறப்பட்ட அவ் விண்கலம், 24 மணி நேரத்தில் அந்த வால்நட்சத்திரத்தின் மீது மோதும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்னும் ஒரு சில மணி நேரத்தில் அந்த மோதல் நடைபெறும் என விஞ்ஞானிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
பீப்பாய் அளவுக்குள்ள அந்த விண்கலத்தின் பெயர் ""இம்பேக்டர்''. அதை ""டீப் இம்பேக்ட்'' என்னும் ராக்கெட் விண்ணில் செலுத்தியது. பூமியிலிருந்து 13 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் சென்றுகொண்டிருக்கும் ""டெம்பெல்~1'' வால்நட்சத்திரம், மும்பை நகரைவிட கொஞ்சம் பெரிதாக இருக்கும். அதன் மீது 372 கிலோ எடையுள்ள அவ் விண்கலம் மோதும்போது, ஒரு பெரிய விளையாட்டு மைதானம் அளவுக்கு ஓட்டை ஏற்படும்.
அந்த மோதலின் வேகம், 5000 கிலோ டிஎன்டி வெடிமருந்தை வெடிக்கச் செய்வதற்கு இணையான சக்தியை வெளிப்படுத்தும்.
அந்த மோதலை பூமியிலிருந்து வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
13 கோடி கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் அந்த மோதல் நிகழ்வதால் பூமிக்குப் பாதிப்பு ஏதும் ஏற்படாது; வால்நட்சத்திரத்தின் பாதையிலும் பெரிதாக மாற்றம் ஏதும் நடக்காது என்றும் அவர்கள் கூறினர்.
செய்தி நன்றி - தினமணி
படம் நன்றி - பிபிசி இணையம்
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41257000/jpg/_41257297_deepimp_nasa_203.jpg' border='0' alt='user posted image'><img src='http://newsimg.bbc.co.uk/media/images/40630000/jpg/_40630465_di_nasa_203.jpg' border='0' alt='user posted image'>
பாஸதீனா, ஜூலை 4: விண்வெளியில் பயணம் செய்துகொண்டிருக்கும் "டெம்பெல்~1' என்னும் வால்நட்சத்திரத்தின் மீது மோதிப் பிளக்கவுள்ள விண்கலத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ""நாஸô'' ஞாயிற்றுக்கிழமை விண்ணில் செலுத்தியது.
வால்நட்சத்திரத்தின் மையப் பகுதி எவ்வகைப் பொருளால் ஆனது என்பதை ஆராய்வதே இதன் நோக்கம். அதன் மூலம், சூரியனும் சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்களும் எவ்வாறு தோன்றின என்பதற்கான விடையைக் கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
ஏனென்றால், சூரியக் குடும்பம் தோன்றுவதற்கு ஆதாரமாக இருந்த பொருள்கள், வால்நட்சத்திரத்தின் மையப் பகுதியில் உறைந்து கிடக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வால்நட்சத்திரத்தின் மையப் பகுதியைப் பிளந்து ஆராய்வதற்காக விண்கலத்தை அனுப்பி மோதுவது இதுவே முதல் முறையாகும். ரூ.1500 கோடி செலவில் இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பாஸதீனாவிலிருந்து இந்திய நேரப்படி பகல் 11.37-க்குப் புறப்பட்ட அவ் விண்கலம், 24 மணி நேரத்தில் அந்த வால்நட்சத்திரத்தின் மீது மோதும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்னும் ஒரு சில மணி நேரத்தில் அந்த மோதல் நடைபெறும் என விஞ்ஞானிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
பீப்பாய் அளவுக்குள்ள அந்த விண்கலத்தின் பெயர் ""இம்பேக்டர்''. அதை ""டீப் இம்பேக்ட்'' என்னும் ராக்கெட் விண்ணில் செலுத்தியது. பூமியிலிருந்து 13 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் சென்றுகொண்டிருக்கும் ""டெம்பெல்~1'' வால்நட்சத்திரம், மும்பை நகரைவிட கொஞ்சம் பெரிதாக இருக்கும். அதன் மீது 372 கிலோ எடையுள்ள அவ் விண்கலம் மோதும்போது, ஒரு பெரிய விளையாட்டு மைதானம் அளவுக்கு ஓட்டை ஏற்படும்.
அந்த மோதலின் வேகம், 5000 கிலோ டிஎன்டி வெடிமருந்தை வெடிக்கச் செய்வதற்கு இணையான சக்தியை வெளிப்படுத்தும்.
அந்த மோதலை பூமியிலிருந்து வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
13 கோடி கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் அந்த மோதல் நிகழ்வதால் பூமிக்குப் பாதிப்பு ஏதும் ஏற்படாது; வால்நட்சத்திரத்தின் பாதையிலும் பெரிதாக மாற்றம் ஏதும் நடக்காது என்றும் அவர்கள் கூறினர்.
செய்தி நன்றி - தினமணி
படம் நன்றி - பிபிசி இணையம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

