06-30-2005, 08:53 PM
இரண்டாவது சம்பவம். இது எதிர் வீட்டில் குடியிருந்த கிழவியைப் பற்றியது. கிழவிக்கு 90 வயதுக்கு மேல் இருக்கும். தனியாகத்தான் வசித்து வந்தார். பிள்ளைகள் தூர இடங்களில் வசிக்கின்றனர். எப்போதாவது வருவர், வீட்டைச் சுத்தம் செய்வர், திரும்பிப் போய்விடுவர். கிழமைநாட்களில் கவுன்சிலில் இருந்து முதியோரைப் பராமரிக்கும் வண்டி வரும், கிழவியை அழைத்துச் சென்று, பிற்பகலில் மீண்டும் கொண்டுவந்து விடும். மாலை நேரங்களில் பராமரிப்பு வேலை செய்யும் கறுப்பினப்பெண் ஒருத்தி வந்து உணவைக் கொடுத்துவிட்டுச் செல்வாள் (இதுவும் கவுன்சிலின் சேவை என்றே நினைக்கிறேன்).
ஒருதடவை பராமரிப்புப் பெண் வந்து கதவைத் தட்டியும் கிழவி திறக்கவில்லை. கிழவிக்கு ஏதாவது நடைபெற்றிருக்கலாம் என்று நினைத்து அயலாரின் முயற்சியுடன் பொலிஸும், தீயணைப்புப் படையும் வரவழைக்கப்பட்டது. அவர்கள் பின்கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது, கிழவி கீழே இறங்கமுடியாமல் படுக்கயறையிலேயே இருந்தது தெரிய வந்தது. அதன் பின்னர், கிழவியின் வீட்டுத் திறப்பு எப்போதும் மிதியடிக்குக் கிழேயே இருக்கும். பராமரிப்புப் பெண் வந்து இலகுவாகத் திறந்து உணவைப் பரிமாறிவிட்டுப் போய்விடுவாள்.
சில வாரங்களுக்கு முன்னர் திடீரென இரட்டைக் கண்ணாடி பொருத்தும் நிறுவனமொன்றின் வண்டி வந்து கிழவியின் வீட்டுக்கு கண்ணாடிகளை மாற்றின்னர்கள். கிழவி குளிர்காலத்தில் கஸ்டப்படாமலிருக்கப் பிள்ளைகள் இரட்டைக் கண்ணாடி பொருத்துகின்றனர் என்று நான் நினைத்தேன். தற்போது வீடு திருத்தப்பட்டு விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. அயல் வீட்டுக்காரரிடம் கிழவிக்கு என்ன நடந்தது என்று கேட்டபோது, கிழவி சில வாரங்களுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், பிள்ளைகள் வீட்டை விற்றுப் பணத்தைப் பங்கிடப் போவதாகவும் அயல் வீட்டுக்காரர் கூறினார்.
தற்போது, தமிழர்களே அதிகம் வந்து வீட்டைப் பார்வையிடுகின்றனர். எப்படியும் ஒரு தமிழ்க்குடும்பம் வந்துவிடுமென்றே நினைக்கிறேன்.
ஒருதடவை பராமரிப்புப் பெண் வந்து கதவைத் தட்டியும் கிழவி திறக்கவில்லை. கிழவிக்கு ஏதாவது நடைபெற்றிருக்கலாம் என்று நினைத்து அயலாரின் முயற்சியுடன் பொலிஸும், தீயணைப்புப் படையும் வரவழைக்கப்பட்டது. அவர்கள் பின்கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது, கிழவி கீழே இறங்கமுடியாமல் படுக்கயறையிலேயே இருந்தது தெரிய வந்தது. அதன் பின்னர், கிழவியின் வீட்டுத் திறப்பு எப்போதும் மிதியடிக்குக் கிழேயே இருக்கும். பராமரிப்புப் பெண் வந்து இலகுவாகத் திறந்து உணவைப் பரிமாறிவிட்டுப் போய்விடுவாள்.
சில வாரங்களுக்கு முன்னர் திடீரென இரட்டைக் கண்ணாடி பொருத்தும் நிறுவனமொன்றின் வண்டி வந்து கிழவியின் வீட்டுக்கு கண்ணாடிகளை மாற்றின்னர்கள். கிழவி குளிர்காலத்தில் கஸ்டப்படாமலிருக்கப் பிள்ளைகள் இரட்டைக் கண்ணாடி பொருத்துகின்றனர் என்று நான் நினைத்தேன். தற்போது வீடு திருத்தப்பட்டு விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. அயல் வீட்டுக்காரரிடம் கிழவிக்கு என்ன நடந்தது என்று கேட்டபோது, கிழவி சில வாரங்களுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், பிள்ளைகள் வீட்டை விற்றுப் பணத்தைப் பங்கிடப் போவதாகவும் அயல் வீட்டுக்காரர் கூறினார்.
தற்போது, தமிழர்களே அதிகம் வந்து வீட்டைப் பார்வையிடுகின்றனர். எப்படியும் ஒரு தமிழ்க்குடும்பம் வந்துவிடுமென்றே நினைக்கிறேன்.
<b> . .</b>

