06-30-2005, 08:33 PM
நான் பார்த்த இரு உண்மைச் சம்பவங்கள். இரண்டிலுமே முதியவர்கள் ஆங்கிலேயர்தான்.
1. முதியோருக்கென பிரத்தியேகமாக உள்ள மருத்துவமனையொன்றில் எனது நண்பனின் தந்தை சிறிதுகாலம் இருக்கவேண்டியேற்பட்டபோது அவரைப் பார்க்கச் சென்றபோது ஏற்பட்ட அனுபவம். எனது நண்பனின் தந்தையின் படுக்கைக்கு அடுத்ததாக இருந்த கட்டிலில் ஒரு ஆங்கிலேய முதியவர் இருந்தார். அவருக்குக் காது கேட்காது, கண் பார்வையும் சற்றுக் குறைவு, நடப்பதற்கும் சிரமம். அவரை எவருமே பார்க்க வருவதில்லையென்று நண்பனின் தந்தை கூறினார்.
நான் அங்கு நின்றபோது, அந்தக் கிழவர் தனது மாலைச் சாப்பாட்டை ஒருவாறு முடித்துவிட்டு, சற்று எழுந்து நடக்க ஆசைப்பட்டார். அவருக்குக் கட்டிலில் இருந்து கீழே காலை வைக்கவே 3 - 4 நிமிடங்கள் பிடித்தது. மெதுவாக கையைக் கட்டிலில் ஊன்றியவாறே நடக்க எத்தனிக்கத் தாதி வந்து சத்தமாக (காது கேளாதென்றபடியால்) அவரைத் திரும்பவும் கட்டிலில் சென்று படுக்குமாறு கூறினார். கிழவனும் பணிந்து நடப்பதுபோல் பாசாங்குசெய்து, தாதி போனவுடன் மீண்டும் தனது நடை முயற்சியில் ஏடுபட்டார். தாதி மீண்டும் வந்தாள். இப்படியே அவர் நடக்க முயற்சிப்பதும், தாதி வந்து அவரைப் படுக்க வைக்க முயற்சிப்பதுமாகப் நேரம் கழிந்தது. கிழவர் அதிகம் ஆசைப்படவில்லை. தனது கட்டிலைச் சுற்றி ஒருதடவை நடந்தால் போதும் என்றுதான் ஆசைப்பட்டார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, அவருக்கு உதவிசெய்யத் தோன்றியது. எனவே அவர் அடுத்தமுறை நடக்க எத்தனித்தபோது உதவிக்குச் சென்றேன். தாதி அவசரமாக வந்து எனக்கு நல்ல ஏச்சுத் தந்தாள். முதியவர் விழுந்து உடைந்தால் தங்களுக்குத்தான் பிரச்சினை எனது தாதியின் வாதம். அதிலும் நியாயம் உள்ளதாகப்பட்டது. வயது முதிர்ந்த காலத்தில் மேற்குலகில் வசதிகள் இருந்தாலும், தனியே வாழக்கூடாது என்று அப்போதே தீர்மானித்துவிட்டேன்.
1. முதியோருக்கென பிரத்தியேகமாக உள்ள மருத்துவமனையொன்றில் எனது நண்பனின் தந்தை சிறிதுகாலம் இருக்கவேண்டியேற்பட்டபோது அவரைப் பார்க்கச் சென்றபோது ஏற்பட்ட அனுபவம். எனது நண்பனின் தந்தையின் படுக்கைக்கு அடுத்ததாக இருந்த கட்டிலில் ஒரு ஆங்கிலேய முதியவர் இருந்தார். அவருக்குக் காது கேட்காது, கண் பார்வையும் சற்றுக் குறைவு, நடப்பதற்கும் சிரமம். அவரை எவருமே பார்க்க வருவதில்லையென்று நண்பனின் தந்தை கூறினார்.
நான் அங்கு நின்றபோது, அந்தக் கிழவர் தனது மாலைச் சாப்பாட்டை ஒருவாறு முடித்துவிட்டு, சற்று எழுந்து நடக்க ஆசைப்பட்டார். அவருக்குக் கட்டிலில் இருந்து கீழே காலை வைக்கவே 3 - 4 நிமிடங்கள் பிடித்தது. மெதுவாக கையைக் கட்டிலில் ஊன்றியவாறே நடக்க எத்தனிக்கத் தாதி வந்து சத்தமாக (காது கேளாதென்றபடியால்) அவரைத் திரும்பவும் கட்டிலில் சென்று படுக்குமாறு கூறினார். கிழவனும் பணிந்து நடப்பதுபோல் பாசாங்குசெய்து, தாதி போனவுடன் மீண்டும் தனது நடை முயற்சியில் ஏடுபட்டார். தாதி மீண்டும் வந்தாள். இப்படியே அவர் நடக்க முயற்சிப்பதும், தாதி வந்து அவரைப் படுக்க வைக்க முயற்சிப்பதுமாகப் நேரம் கழிந்தது. கிழவர் அதிகம் ஆசைப்படவில்லை. தனது கட்டிலைச் சுற்றி ஒருதடவை நடந்தால் போதும் என்றுதான் ஆசைப்பட்டார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, அவருக்கு உதவிசெய்யத் தோன்றியது. எனவே அவர் அடுத்தமுறை நடக்க எத்தனித்தபோது உதவிக்குச் சென்றேன். தாதி அவசரமாக வந்து எனக்கு நல்ல ஏச்சுத் தந்தாள். முதியவர் விழுந்து உடைந்தால் தங்களுக்குத்தான் பிரச்சினை எனது தாதியின் வாதம். அதிலும் நியாயம் உள்ளதாகப்பட்டது. வயது முதிர்ந்த காலத்தில் மேற்குலகில் வசதிகள் இருந்தாலும், தனியே வாழக்கூடாது என்று அப்போதே தீர்மானித்துவிட்டேன்.
<b> . .</b>

