06-29-2005, 10:01 PM
உங்களுடைய கருத்துக்கள் ஏற்புடையவைதான். வசம்புவின் கருத்துடன் நான் ஒத்துப்போகின்றேன். இங்கு புத்தகங்களை வெளியிடுவோர் தங்கiளுடைய புலமையை காண்பிப்பதில்தான் அக்கறை காட்டுகின்றனர். பிள்ளைகளைப்பற்றி அதிகம் அக்கறை காண்பிப்பதில்லை. அவர்களுடைய சுமையை புரிந்து கொள்வதில்லை. உதாரணமாக இங்கு குழந்தைகளுக்கு முதலில் பாடம் சொல்லிக்கொடுப்பதில்லை. அவர்களை விளையாட படம் கீற விட்டுவிடுகின்றார்கள். பிள்ளைகள் இதனால் பாடசாலையை வெறுக்காமல் போவதற்கு விரும்புகின்றார்கள். நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எங்கள் மொழியில் அதிக எழுத்துக்கள் இருப்பது பிள்ளைகளுக்கு மிகவும் சிரமம். அதனால் பிள்ளைகளுக்கு இலகுவான பாடமுறையை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயாத்தில் சம்மந்தப்பட்ட நிறுவனம் இருக்கின்றது. ஒருமுறை அவர்களுடைய கூட்டம் ஒன்றுக்கு சென்றபோது அங்கு ஆசிரியர்கள் பலர் குறைபாடுகளை சுட்டிக்காட்டியபோது அவர்கள் அதை திருத்திக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை. தட்டிக் கழிப்பதில் அதிக கவனம் செலுத்தினர்.
குழந்தைகளை அவர்கள் காணும் பொருட்களின் ஊடாக கற்பித்தலை ஆரம்பித்தல் நன்று இங்கு நாம்காணும் பொருட்களை கொண்டு பாடத்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.
புகையிரதம் என்ற சொல் தற்போது பாவனைக்குதவாது. புகையிரதம் என்று நாங்கள் சொல்லிக் கொடுத்தால் எங்கு புகை வருகின்றது என்று கேட்கக்கூடிய அறிவான குழந்தைகள் இப்போதைய குழந்தைகள் தயவு செய்து உங்கள் கருத்துக்களை வையுங்கள்.
குழந்தைகளை அவர்கள் காணும் பொருட்களின் ஊடாக கற்பித்தலை ஆரம்பித்தல் நன்று இங்கு நாம்காணும் பொருட்களை கொண்டு பாடத்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.
புகையிரதம் என்ற சொல் தற்போது பாவனைக்குதவாது. புகையிரதம் என்று நாங்கள் சொல்லிக் கொடுத்தால் எங்கு புகை வருகின்றது என்று கேட்கக்கூடிய அறிவான குழந்தைகள் இப்போதைய குழந்தைகள் தயவு செய்து உங்கள் கருத்துக்களை வையுங்கள்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

