06-14-2005, 01:20 AM
Quote:தமிழ் மீதான ஆர்வம் என்பது அதை ஏன் கற்க வேண்டும் என்ற ஒரே விடையில் மட்டுமே ஏற்பட முடியும்.
இது தான் எனது கருத்தும் கிருபன். தமிழ் கற்பதால் என்ன பயன் என்பதை நாம் உணர்த்த வேண்டும். வெறுமனே தமிழ் கற்பிக்கவேண்டும் என்று சொல்வதாலும், தமிழ் நமது அடையாளம் என்று சொல்வதாலும் பயனில்லை. அது நம்மைப் போன்றவர்களுக்கு சரியாக இருக்கலாம் - ஆனால் புலம்பெயர்ந்த மண்ணில் பிறந்து வளரும் நம்மவர் குழந்தைகளுக்கு அதுவல்ல யதார்த்தம். அவர்களுக்கு தமிழால் என்ன நன்மை என்பது தெளிவுபடுத்தப்படவேண்டும். அதுதவிர தமிழை வளப்படுத்தவேண்டும் - தமிழ் நவீனமயப்படுத்தப்படவேண்டும்! அதனில் கவர்ச்சி இருக்கவேண்டும்.
மேலும் கருத்தெழுத விருப்பம்தான் - நேரம் அனுமதிககவில்லை. பிறிதொரு சந்தர்ப்பத்தில் எனது கருத்துக்களை முழுமையாக வைக்கின்றேன்.
வியாசன் உங்கள் தலைப்பு ஆக்கபூர்வமான கருத்துப்பகிர்தலுக்கு வழிசெய்துள்ளது. நன்றிகள். தொடருங்கள்.

