06-12-2005, 10:17 AM
ஊமை Wrote:narathar Wrote:[புலிஎதிர்ப்பு அல்லது மாற்றுக்கருத்து என்னும் கருத்தியலை உடைப்பதாயின் அல்லது அம்பலப்படுத்துவதாயின் அதனை விமர்சனம் செய்யவேண்டும்.
தமிழ்த்தேசியம் என்பது இக்கருத்துத் தடைகளால் வளர்ந்தது அல்ல.
தேசியம் பற்றிய தெழிவு அரசியற்கருத்தாடலின் மூலம் மட்டுமே வரும்.புலிகளின் வாலைப்பிடித்துக்கொண்டு தடைசெய் என்று சொல்வதை புலிகளே ஏற்றுக் கொள்ளார்.கருனா விடயம் ஒருவர் புலியாக இருப்பதனால் மட்டுமே தேசியவாதி ஆகிவிட மாட்டார் என்பதைக் காட்டியது.தேசியம் பற்றிய அரசியற்தெழிவு ஒருவரை எந் நிலையிலும் போராட்டப் பாதையில் இருந்து நிலைதளம்ப விடாது.70 மற்றும் 80 களில் அரசியல்மயப்படுத்தப்படவர்களே இன்றும் தேசியம் பற்றிய தெழிவோடு போராட்டத்தை முன்னகர்த்திச்செலுகின்றனர்.90, மற்றும் 00 அரசியல் விவாதங்கள் எதுவுமற்ற வெறுமைக்குள் வந்தவர்களே தளம்பி உள்ளனர்.கருத்தை கருத்தால் வெல்லாத அரசிற்காலப் பகுதிகளில் வந்த தம்பிமார் சிலரே இக்களத்திலும் கருத்தியல்தடையை கொண்டு வர விரும்புகினம்.
கருத்தை கருத்தால் வெல்வோம்,அதுவே நிலைத்து நிற்கும், மாற்றுக்கருத்து என்றும்,பல்னிலைத் தன்மை என்றும் ,தேசியத்தை உடைப்பதற்கான இந்திய அரசியற்வூயகத்தை உடைப்பதற்கு அதுவே உதவும்,கருத்துத் தடை அல்ல.
தயவுசெய்து புலியெதிர்ப்பு பற்றி இங்கு பேசாதீர்கள். தமித்தேசியம் பற்றி இங்கு விமர்சிக்காதீர்கள். ஏனெனில் இங்கு புலியாதரவாளர்களும், செந்தமிழர்களுமே உள்ளனர். புலியை எதிர்க்கவோ தமிழ்த்தேசியத்தைப் பற்றி விமர்சிக்கவோ யாருக்கும் அருகதையும் அத்தோடு உரிமையும் கிடையாது. உங்களுக்கு துணிவிருந்தால் எனது செலவில் விமான பயணச்சீட்டு பெற்று தருகிறேன். வன்னியில் போய் புகிகளின் முகத்தைப் பார்த்து இவற்றைக் கேளுங்கள். அப்போது உங்களுக்கு போதும் போதும் என நன்றாகவே பதில்கள் கிடைக்கும். அதைவிட்டு அகதிக்காசிலே வயிறுவளர்த்துக்கொண்டு புலிகளை விமர்சிக்கிறீர்களோ? ஒரு உயிரின் பெறுமதி தெரியுமா உங்களுக்கு? உம்மையும் என்னையும் போல் எல்லா ஆசைகளும் உள்ளவனே எமது நாட்டுக்காக போய் இறக்கிறான். நீர் தப்பிவந்திருந்துகொண்டு அவனை விமர்சிக்கிறீரோ? சீ............... வெட்கமாய் இல்லை?
கீள் உள்ள இணைப்பை பயன்படித்தி விடுதலைப்பிலிகளின் மூத்த உறிப்பினர் க வே பாலகுமார் 08/05/05 அன்று கிளி நொச்ச்யில் நடைபெற்ற கருத்தரங்கில் என்ன சொல்கிறார் என்பதை கவனமாக கேட்கவும்.
http://www.tamilnatham.com/Speeches.htm
புலி எதிர்ப்பாளரை விமர்சிப்பது எவ்வாறு புலிகளை விமர்சிப்பதாகும் எனச் சொல்கிறீர்கள்?

