06-12-2005, 01:32 AM
kurukaalapoovan Wrote:வியாசன் என் கண்மூடிதனமாக தேசியத்திற்கு எதிரான கருத்துகள் வைக்கப்படக்கூடது என்று சர்வாதிகார தொனியில் எழுதுகிறீர்கள். அவை கருத்தா இல்லை விசமப்பிரச்சாரமா என்பதை பகுத்தறிய வோண்டிய கடமை சமூகத்துக்கு உண்டு. நீங்கள் தடை செய்வதால் அந்த கருத்தை (விசமப்பிரச்சாரத்தை) இல்லாதொழிக்க முடியாது வேறு இடங்களில் தொடரும். அடுத்த தாக எங்கு யார் போகலாம் என்று கட்டுப்பாட கொண்டுவருவது?
விசமப்பிரச்சாரங்களை உங்கள் கருத்துகளால் வெல்லுங்கள் அதை வாசித்து அறிவதால் எமது சமுதாயாம் தான் தெளிவு பொறும். தெளிவு பெற்றவர் இங்கு இல்லை எங்கு சென்றாலும் தவறாக வழிநடத்தப்படமாட்டார்.
மாற்றுக்கருத்து அரசியல் என்று நாடகமாடும் சுயநல எட்டப்பர்களின் சுயருhபம் கருத்துகளால காட்டப்படும் போது தான் எமது தேசியம் நிரந்தர வலுப்பெறும் .
மானமுள தமிழனுக்கு இவ்வாறான கருத்துக்கள் கோபத்தைத்தான் ஏற்படுத்தும் குறுக்காலை போனவரே. வியாசன் சற்று பண்பாகச் சொல்லி இருக்கிறார். ஆனால் இதை எல்லோரிடமும் எதிர்பார்க்காதீர்கள். இதைவிட்டு வாருங்கள் வேறுகருத்துக்களைப்பற்றி வாதாடுவோம்.

