06-11-2005, 11:35 PM
இளைஞன் Wrote:தூயா உங்கள் முயற்சிக்கு முதலில் வாழ்த்துக்கள். தேர்ந்தெடுத்த கருப்பொருள் நல்லதொன்று. சிறுகதைப்பாணியும், பயணக்குறிப்பும் கலந்திருக்கின்றது. இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சென்று சிலவிடயங்களை எழுதியிருக்கலாம். கதையில் ஒரு கருப்பொருள் இருந்தால் உங்களுக்கு எழுதுவதற்கு சுலபமாக இருக்கும். இரண்டு வெவ்வேறு விடயங்களைக் கலப்பதால் உங்களுக்கு எழுதும் போதும் கடினம், வாசிப்பவர்களுக்கும் குழப்பத்தைத் தரும் - திருப்தியைத் தராது.
இன்னும் இன்னும் தொடர்ந்து எழுதுங்கள். தொடர்ந்து எழுதுவதுவே உங்களுக்கு பயிற்சியைத் தரும். உங்கள் அனுபவங்களை சிறுகதைகளாக தொடர்ந்தும் தாருங்கள். அதேநேரத்தில் பிறர் எழுதிய சிறுகதைகளை வாசித்துப் பாருங்கள். அதுவும் நிறைய அனுபவங்களைத் தரும்.
கதையில் உணர்வுபூர்வமான சில விடயங்களைத் தொட்டுச் செல்கிறீர்கள். அருமை. உங்களின் அடுத்த சிறுகதையை எதிர்பார்க்கிறேன்.
முதல் கதை என்பதால் உண்மை சம்பவங்களை கலக்கும் போது சிறு குழப்பங்கள் வரலாம். தொடர்ந்து எழுத எழுத இன்னும் சிறப்பாக எழுதலாம்.
இளைஞன் நீங்கள் ஒரு கதை எழுதியிருக்கின்றீர்கள் தானே? அந்த ஸ்ரட்பான் கதையை கள உறுப்பினர்களுக்கு தாருங்களேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

