06-11-2005, 10:47 AM
kirubans Wrote:viyasan Wrote:வலைஞன் அவர்கட்கு என்ன கிருபனுக்கு களத்தில் விசேட சலுகைகள் கொடுத்திருக்கின்றீர்களா? மட்டுறுத்தனர் ஒருவர் கிருபன் என்ற பெயரில்எழுதுகின்றார் என்று தெரியும் அதனால் அவருக்கு விசேட சலுகைளா? அப்படியானால் நீங்கள் சொல்லுங்கள் இது பக்க சார்பான களம் இங்கு நீங்கள் கருத்துக்களை வைக்கவேண்டாம் என்றால் நான் களத்துக்கு வராமல் விடுகின்றேன்.
கிருபன் முன்பொரு தடவை புலி எதிர்ப்பாளர்கள் எப்படியான கருத்தக்களை வைப்பார்கள் என்பதை நீங்கள் வையுங்கள் பார்ப்போம் அவை உங்களுடைய சொந்தக் கருத்தாகவும் இருக்கலாம் என்று ஒரு தடவை களத்தில் ஒரு பகுதியில் தலைப்பு இட்டிருந்தார். அதையும் நீங்கள் அனுமதித்து இருந்தீர்கள் யாராவது புலிகளுக்கு எதிரான கருத்தை வைத்திருந்தால் அதை அனுமதித்து இருப்பீர்களா? அல்லாதுவிடின் இதையும் அகற்றி விடலாம் ஏனென்றால் யாழ்களம் இப்போது தடம்புரண்டுவிட்டது போல இருக்கின்றது. சிலவேளை கிருபனின் சொந்த களமாகவும் இருக்கலாம்.
.
நான் மட்டுறத்தினரும் இல்லை. களம் என்னதும் இல்லை. நான் எனது சொந்தப் பெயரில்தான் எழுதுகின்றேன், முகமூடி போட்டுத் திரியும் ஆளுமல்ல.
எனக்கு எந்த சலுகைகளையும் கேட்கவில்லை, கிடைத்ததாகவும் புரியவில்லை.
மேலும் களவிதி புலி எதிர்ப்பாளர்களைத் தடை செய்யவில்லை. முன்பு மதிவதனன் என்பவர் கடுமையான புலி எதிர்ப்ப்புக் கருத்துக்களை முன்வைத்தவர். அவருடன் கருத்து மோதலில் ஈடுபட்டவன் என்பதால் சொல்லுகிறேன். விரும்பினால் பழைய கருத்துக்களை வாசித்து அறியவும்.
பி.கு. உங்கள் புலனாய்வுத் திறமை வாழ்க <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நான் புலியெதிர்ப்ப்பு அரசியல் என்ற தலைப்பில் இணைத்த கேள்விகளைப் புரிந்துகொள்ளாத முடியாதவருக்கு ஒன்றும் சொல்லுவதற்கில்லை.
புலிஎதிர்ப்பு அல்லது மாற்றுக்கருத்து என்னும் கருத்தியலை உடைப்பதாயின் அல்லது அம்பலப்படுத்துவதாயின் அதனை விமர்சனம் செய்யவேண்டும்.
தமிழ்த்தேசியம் என்பது இக்கருத்துத் தடைகளால் வளர்ந்தது அல்ல.
தேசியம் பற்றிய தெழிவு அரசியற்கருத்தாடலின் மூலம் மட்டுமே வரும்.புலிகளின் வாலைப்பிடித்துக்கொண்டு தடைசெய் என்று சொல்வதை புலிகளே ஏற்றுக் கொள்ளார்.கருனா விடயம் ஒருவர் புலியாக இருப்பதனால் மட்டுமே தேசியவாதி ஆகிவிட மாட்டார் என்பதைக் காட்டியது.தேசியம் பற்றிய அரசியற்தெழிவு ஒருவரை எந் நிலையிலும் போராட்டப் பாதையில் இருந்து நிலைதளம்ப விடாது.70 மற்றும் 80 களில் அரசியல்மயப்படுத்தப்படவர்களே இன்றும் தேசியம் பற்றிய தெழிவோடு போராட்டத்தை முன்னகர்த்திச்செலுகின்றனர்.90, மற்றும் 00 அரசியல் விவாதங்கள் எதுவுமற்ற வெறுமைக்குள் வந்தவர்களே தளம்பி உள்ளனர்.கருத்தை கருத்தால் வெல்லாத அரசிற்காலப் பகுதிகளில் வந்த தம்பிமார் சிலரே இக்களத்திலும் கருத்தியல்தடையை கொண்டு வர விரும்புகினம்.
கருத்தை கருத்தால் வெல்வோம்,அதுவே நிலைத்து நிற்கும், மாற்றுக்கருத்து என்றும்,பல்னிலைத் தன்மை என்றும் ,தேசியத்தை உடைப்பதற்கான இந்திய அரசியற்வூயகத்தை உடைப்பதற்கு அதுவே உதவும்,கருத்துத் தடை அல்ல.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->