06-09-2005, 10:53 AM
இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் அமெரிக்காவில் அவசர கூட்டம்: ஸ்ரீலங்காவிற்கு அழைப்பில்லை!!
இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டம் எதிர்வரும் 12ம் திகதி அமெரிக்கத் தலைநகர் வோசிங்டனில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் நிக்பான்ஸ் இலங்கைக்கான ஜப்பானின் சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி நோர்வேயின் பிரதி வெளி விவகார அமைச்சர் விதார் ஹெல்கிசன் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார ஆணையாளர் ஆகியோர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
2003ம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ மாநாட்டின் பின்னரே இந்த உதவி வழங்கும் நாடுகளின் தலைவர்களின் சபை நியமிக்கப்பட்டது. பொதுக்கட்டமைப்பு சமாதான நடவடிக்கைகள் மற்றும் வெளிநாட்டு உதவிகள் என்பன குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளதாகவும் இராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
12ம் திகதி நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள சிறிலங்கா அரசுக்கு அழைப்பு விடுக்கப்பட மாட்டாது எனத் தெரியவருகின்றது.
-சங்கதி
இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டம் எதிர்வரும் 12ம் திகதி அமெரிக்கத் தலைநகர் வோசிங்டனில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் நிக்பான்ஸ் இலங்கைக்கான ஜப்பானின் சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி நோர்வேயின் பிரதி வெளி விவகார அமைச்சர் விதார் ஹெல்கிசன் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார ஆணையாளர் ஆகியோர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
2003ம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ மாநாட்டின் பின்னரே இந்த உதவி வழங்கும் நாடுகளின் தலைவர்களின் சபை நியமிக்கப்பட்டது. பொதுக்கட்டமைப்பு சமாதான நடவடிக்கைகள் மற்றும் வெளிநாட்டு உதவிகள் என்பன குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளதாகவும் இராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
12ம் திகதி நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள சிறிலங்கா அரசுக்கு அழைப்பு விடுக்கப்பட மாட்டாது எனத் தெரியவருகின்றது.
-சங்கதி

