06-08-2005, 07:43 AM
tamilini Wrote:Quote:இதுவா உங்கள மாதிரி படிக்கிற அக்காக்கள் எழுதிற கருத்தா? உதையெல்லாம் சிந்திக்கிற அக்காமாரின்ர கருத்தெண்டு சொல்லலாமாஉங்களுக்கு என்னாச்சு.. ஆஆஆஆ :evil:
பூனைக்குட்டிக்கு,
தமிழினி உட்பட ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை. அவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் நேரமும் விதமும் வித்தியாசமானவை. பூனைக்குட்டியின் இயல்பான பேச்சுத்தமிழ் அதற்கே உரிய தனிவகை.
பெண்கள் பெருமளவில் சிறந்த கருத்துக்களை பெரிய கட்டுரைகளாக எழுதுவதில்லை என்று நீங்கள் வருந்துவது போல தெரிகிறது. எல்லோருக்கும் தமிழில் நிறைய தொடர்ந்து கணணியில் செலுத்தும் ஆற்றல் இருக்காது.
மற்றவர்களை அவர்களது ஆற்றல்களோடும் அதற்கும் மேலாக அவர்களது பலவீனங்களோடும் ஏற்றுக்கொள்ள வேண்டும். உங்களுக்கு நிறைய நூல்களை படித்தறிந்த அறிவு இருப்பது தெரிகிறது. எல்லோருக்கும் அப்படி இல்லை. தமிழினிக்கு பரதநாட்டியம் பற்றிய அறிவு நிறையவே இருக்கிறது என்று நினைக்கிறேன். அது பற்றிய கலந்துரையாடலில் அவ நிறைய எழுதியிருந்ததாக நினைவு. அஸ்வினி நீங்கள் விரும்புவது போல நிறைய எழுதும் ஆற்றல் உள்ள எழுத்தாளர் போல தெரிகிறது. ஆக எல்லோரையும் அவரவர் திறமைகளுடனும் பலவீனங்களுடனும் ஏற்றுக்கொண்டு ஒருவரும் மனம் நோகாமல் பங்கு பற்றுவது நல்லது தானே? என்ன சொல்கிறீர்கள்?

