06-08-2005, 01:57 AM
பெண்கள் ஏன் பூச்சூடுகின்றனர் தெரியுமா? ஆண்களின் காமத்துக்கு, பெண்கள் தாங்களாகவே திரிவதாக காட்டி, அதற்கு துனை போவதற்குமே. இந்தியப் பண்பாட்டின் சின்னமாக காட்டும் பெண்களின் தலையில் வைக்கும் பூ, ஆண்களின் காமத்தை துண்டும் ஒரு ஊடகமாகும். மல்லிகை, முல்லைப் பூ காமத்தை ஏற்படுத்தும் மணம் கொண்டது என்ற அடிப்படை காரணத்தைக் கொண்டே, அதை பெண்கள் தலையில் அணிவிக்கப்பட்டது. ஆண்கள் படுக்கையை நாடி வீடுவரும் போது, பெண்ணின் கடமையை ஊக்குவிக்க, பூ கொடுக்கும் அதே நேரம் ஆணின் காமத்தை ஏற்படுத்த உதவுவதாகவே இந்த ஆணாதிக்க பண்பாடு காணப்படுகின்றது. இதில் இருந்தே கன்னிப் பெண்கள் மல்லிகை, முல்லை சூடக்கூடாது என்ற வழக்கமான ஆணாதிக்க கட்டுப்பாடுகளும் காணப்படுகின்றது.
<b> . .</b>

