06-07-2005, 02:35 AM
உலகில் எந்த மனிதனுக்கும் மற்றவனைப் பாதிக்காத நம்பிக்கையின் அடிப்படையில் வாழ உரிமை உண்டு...! இந்து மதத்தையும் அதன் கோட்பாடுகளை அடிப்படையாக நம்பி வாழ்ந்து தமிழுக்கும் மேற்குலக மத ஆதிக்கங்களுக்கும் எதிராகப் பணியாற்றிய நாவலர் போன்ற அருமக்கள் வாழ்ந்த தேசத்தில் இருந்து வந்த தமிழையே கொச்சைப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட தரக் குறைவான வக்கிர சிந்தனையிலான விசமத்தனமான ஒரு குறிப்பிட்ட சமூக எதிர்ப்புக் கருத்தை இக்களம் தாங்கி வருவது கவலைக்கிடமான விடயம்...! மூடநம்பிக்கை என்பதை தெளிவுபடுத்த இதுவல்ல முறை அதற்குக் கூட நாகரிக வடிவம் ஒன்று இருக்கிறது என்பதை அறியாத பலர் தங்கள் காழ்புணர்ச்சியின் வெளிபாடாக சக மனிதனின் நம்பிக்கையை வக்கிரப் பார்வையின் மூலம் சித்தரித்துச் சீரழித்து இன்புறும் புத்தி பேதலித்த இவர்களால் நிச்சயம் எந்தச் சமூகமும் விளிப்புணர்வோ விடுதலையோ உய்வோ அடையப் போவதில்லை...! மற்றவனின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து அதன் போலித்தனத்தை அவனுக்கு செய்மையாகச் செப்ப இயலாத இவர்கள் சமூகச் சீர்திருத்தவாதிகளே அல்ல..சமூகச் சீரழிவாளர்கள் என்பதை வெகுவிரைவில் சமூகம் உணரும்...இதன் பாதிப்புக்கள் எல்லை மீறியதாகும் போது அனைத்து சமூகக் கட்டமைப்புக்களும் சிதறிச் சின்னாபின்னாமாகும்...அப்போது இக்களத்தின் தேவை கூட இங்கிராது....! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

