06-04-2005, 06:30 PM
ஆசை வேகம் மணிக்கு 240 கி.மீ
ஆயிரத்து நூறு. ஆயிரத்து இருநூறு. ஆயிரத்து இருற்நூறைம்பது. ஆயிரத்து முன்நூறு. யாரும் கேக்கேல்லையோ. ஆயிரத்து முன்நூறு ஒருதரம் .ஆயிரத்து முன்நூறு இரண்டுதரம். ஆயிரத்து முன்நூறு முண்றுதரம்.சரி முடிஞ்சுது றமணி உனக்குத்தான் சீட்டு. என்றபடி ழூன்று கைத்தெலை பேசியிலும் ஒருவீட்டு தொலைபேசியிலும் ஏதோ உலக பங்கு சந்தை வியாபாரிபோல ராணி சீட்டு கூறிக்கொண்டிருந்தாள்.
சீட்டு ராணி என்றால் அந்த நகரத்தில் தெரியாத தமிழர்கள் இருக்க முடியாது சின்னன் பெரிசு என்று பல சீட்டுக்களை நடத்துபவள். சீட்டுநடத்தி சமபாதித்ததாலலும் உழைப்பினாலும் சொந்த வீடு கணவனுக்கும் அவளிற்குமென தனி தனியான சொகுசு கார்கள் என்று வசதியான வாழ்க்கை.
சீட்டு கூறிமுடிந்ததும்.அப்பாடா ஒருமாதிரி முடிஞ்சுது மாதத்திலை முதல் ஞாயிறு எண்டாலே ஓரே தலையிடி இந்த சீட்டாலை என அலுத்துக்கொண்டு சீட்டு கணக்கு கொப்பியை மடித்தவாறே
இந்தாங்கோ உங்டை கான்போன். நான் இஞ்சை தனிய இருந்து புலம்பிறன் நீங்கள் கொம்பியுட்டருக்கை தலையை குடுத்து போட்டு இருங்கோ. மனிசிபாவமெண்டு ஒரு தேத்தண்ணி வைச்சு தருவமெண்டில்லை. ஒரு தேத்தண்ணி போடுங்கோ இண்டைக்கு பிறந்தநாள் பாட்டிக்கு போகவேணுமல்லோ எழும்புங்கோ என்று கணவனிற்கு கட்டளைகள் பிறந்தன.
இஞ்சை பார் ராணி நான் எத்தனை தரம் உனக்கு சொன்னனான் உந்த சீட்டுகளை விடு எண்டு. எங்களுக்கென்ன குமர் பிள்ளையா இருக்கு கரைசேர்க்க இருக்கிறது இரண்டும் பெடியள். நானும் நீயும் வேலை செய்யிறம் பிறகேன் வேண்டாத தலையிடி. நான் சொன்னாலும் நீ கேட்கமாட்டாய் அதாலை நானும் உன்ரை சீட்டு அலுவலுக்கை தலை போட மாட்டன். ஆனா ஒண்டு நாளைக்கு ஒரு பிரச்சனையெண்டு என்னட்டை வந்து நிக்காதை
அதுஒருபிரச்சனையும் வராது நான் யார் ராணி சீட்டுக்கேராணியாக்கும். எல்லாம் நான் வெட்டியாடுவன். நீங்கள் பயப்பிடாதையுங்கோ. அதுசரியப்பா உவன் மதன் தன்ரை BMWகாரை விக்கபோறானாம். ஏதோகாசு அவசரமாம். நானும் என்னை காரை மாத்தவேணும். எனக்கப்பா அவன்ரை காரை வாங்குவமெண்டு யோசிக்கிறன்.
என்ன ராணி விளையாடுறியே அது ஸ்போட்ஸ் மொடல் கார் இப்பதான் எடுத்தவன் அவனே பெற்றேல் ஊத்திகட்டுபடியாகாமல் விக்கபோறான் நீவாங்கி என்ன கார் ரேசே ஓடப்போறாய்.அதோடை சரியான விலையும் வரும்.
அதில்லையப்பா எனக்கு கனநாள் ஆசை காரிலை ஹைவேயிலை ஒரு நாளைக்கெண்டாலும் 240லை ஒடிப்பாக்க வேணும்.அதோடை அவன் அவசரத்திலை விக்கிறதாலை நாப்பதாயிரம் யுரோக்கு தாறானாம்.நீங்கள் என்ன சொன்னாலும் நான் எடுக்கிறதுதான்.
சரி நான் சொல்லி நீ கேக்கவேபோறாய் நீ சீட்டுக்குமட்டுமில்லை வீட்டுக்கும் நீதானே ராணி நான் சொல்லி எங்கை எடுபடுது.நீ இப்ப நாப்பதாயிரம் யுரோ வைச்சிருக்கிறியே??.
அதெல்லாம் சின்னபிரச்சனையப்பா உவங்கள் ரவியும் ரமணணும் சீட்டு போடேக்கையே சொன்னவங்கள் தாங்கள் கடைசியிலை தான் எடுப்பமெண்டு அதைவிட தனிப்பெடியள் அவங்களுக்கு காசுதேவையும் வராது அதாலை அவங்கடை சீட்டை எடுத்து போட்டு அவங்களிற்கு கடைசியிலை குடுப்பம்.
அடீயே உப்பிடித்தான் போனமாதம் ஒரு சீட்டை எடுத்து உன்ரை தங்கச்சிக்கு கடை போட குடுத்தனி இதையெண்டாலும் அவங்களை கேட்டுப்போட்டு செய். சீட்டுகாரர் நம்பிக்கையிலை தான் வீட்டுக்குவராமல் ரெலிபோனிலையே கேக்கிறவை அதோடை நீ சொல்லுற கழிவு தொகையையும் நம்பி காசு தாறவை உன்ரை போக்கு இப்ப வரவர சரியில்லாமல் போகுது எங்கை போய் முடிய போகுதோ பாப்பம்.
நீங்கள் எதுக்கெடுத்தாலும் அபசகுனமா கதையுங்கோ நான் அவங்களிட்டை கேக்கபோக பிறகு ராணி இப்பிடித்தான் மற்றவையின்ரை சீட்டிலை வசதியா வாழுது எண்டுகதைக்க எரிச்சல் பிடிச்ச கனபேர் கதைப்பினம்.அதை நானே பாத்துகொள்ளுறன் நீங்கள் பேசாமல் இருங்கோ.
இரண்டுவாரத்தில் ராணி தான் நினைத்தபடியே மதனிடம் அவனதுBMWகாரை வாங்கிவிட்டாள். அவளது கணவன் வேலையிலிருந்து வீடுவந்ததும். இஞ்சையப்பா மதனிட்டை கார் வாங்கிட்டன். ஓடிப்பாத்தனான் நானும் பிள்ளையளும் அப்போதை ஒரு ரவுண்ட் அடிச்சனாங்கள் சும்மா பறக்குதப்பா நீங்களும் ஓடிப்பாருங்கோ. ஓருநாளைக்கு இரவு நாங்கள் இரண்டுபேருமா ஹைவேயிலை 240 வரைக்கும் ஓடிப்பாப்பம் என்று மகழ்ச்சி தாங்கமுடியாமல் சொன்னாள்.
ம்........பறக்குதோ அப்ப அடுத்த வருசம் ஊருக்கு போகேக்கை உன்ரை காரிலையே போகலாம் பிளேன் ரிக்கற் செலவு மிச்சம். பாத்தடி கனக்க பறக்காதை பொலிஸ் பிடிச்சா லைசென்சை பிடுங்கி போடுவான்.பிறகு உன்ரை காரை தள்ளிகொண்டுதான் திரியவேணும்
இருண்டுமாதங்களின் பின்னர் ராணியின் வீட்டில் தொலைபேசி அடித்தது.கலோ நான் ராணிதான் அட ரவியே என்ன அலுவல் திடீரெண்டு சொல்லும்
மறுமுனையில் ரவி. என்னண்டா ராணியக்கா இந்தமுறை ஆரும் சீட்டு எடுக்கிற மாதிரியிருக்கோ? ஏனெண்டால் ஊரிலை இருந்து தம்பி ரெலிபோன் எடுத்தவன். அம்மாக்கு சுகமில்லையாம். யாழ்ப்பாண ஆசுப்பத்திரியிலை காட்டினதாம்.பரிசோதிச்சு போட்டு கான்சர் வருத்தம் உடனை மகரகமைக்கு கொண்டுபோக சொன்னவங்களாம் உடனை ஒப்பிறேசன் சொய்ய வேணுமாம். அதுதான் கொஞசம் காசு வேணும்.
என்னதம்பி உங்கடை அம்மாக்கு கான்சராமோ அட கடவுளே....
ஓமக்கா அதுதான் இனி யாருட்டையும் கோட்டுகொண்டு நிக்காமல் சீட்டு இருக்குதானே யாரும்போட்டிக்கு ஏத்தாட்டி எடுத்து பிரச்சனையை முடிப்பம் எண்டு பாத்தனான்.அதுதான் அடிச்சனான். ஆரும் எடுக்கிற மாதிரியிருக்கே???
சற்று தடுமாறிய ராணி அதுவந்து ம்......ரமணணும் கேக்கிற மாதிரி கதைச்சவன் என்ன மாதிரியெண்டு தெரியேல்லை எதுக்கம் கேட்டுபாப்பம்..
என்னக்கா ரமணன் தானே போன சீட்டு எடத்ததெண்டு சொன்னனீங்கள் ஆரு அந்த மொட்டை ரமணன்தானே இல்லாட்டி வேறை ரமணன் எண்டு ஆரும் இருக்கினமோ??
இல்லை ரவி அது வேறை சீட்டு அண்டைக்கு மாறி சொல்லிபோட்டன் சரி பிரச்சனையில்லை நீர் வந்து சிரமப்படாமல் ரெலிபோனிலையே கேளும் வேறையென்ன ஞாயிறு போன் அடியும் சந்திப்பம் என்று தொலை போசியைவைத்து விட்டு திரும்ப அவளது கணவன் என்னப்பா யாரது போனிலை
இல்லையப்பா அது ரவி தன்ரை தாய்க்கு சுவமில்லையாம் அதுதான் இந்தமுறை சீட்டு எடுக்கபேறானாம் எண்டு அடிச்சவன்..........என்று கைகளை பிசைந்தபடியே கூற
இப்ப என்ன செய்யபோறீர்; காசு வைச்சிருக்கிறீரே குடுக்க எனக்கு தெரியும் எண்டைக்காவது உது நடக்குமெண்டு என்றவாறே குளியலறைக்குள் நுளைந்தான்.
சிறிது யேசித்த ராணி சரி இனியொண்டும் செய்யேலாது வேறு யாருடைய சீட்டையாவது எடுத்து இப்போதைக்கு ரவியின்ரை பிரச்சனையை முடிப்பம் பிறகு மற்றதை யோசிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தாள். ஆனால் தற்சமயம் உவன் ரவி ரமணணை சந்திச்சு ஏதும் கேட்டானெண்டால்?? கடவுளே சீ சீ ரவிக்கு ரமணணை பெரிய பழக்கம் இல்லை அவனைபோய் கேக்கமாட்டான் . எங்கையும் தற்செயலா சந்தித்தால் ?? அப்படியெதுவும் நடக்காது . என்றுதானே கேள்விகள் கேட்டு தானே பதிலையும் சொல்லிக்கொண்டிருந்தாள்.
எது நடக்ககூடாது என்று ராணி நினைத்தாளோ அதுநடந்து விட்டது அன்று ஒரு ஞாயிற்று கிழைமை ரவி கொஞசம் சாமான்கள் வாங்கவென தமிழ் கடையொன்றிற்கு போன பொழுது தற்செயலாக ரமணனை கண்டு விட்டான். ரமணனிடம் வழமையான விசாரிப்புகளின் பின்னர் ரவிகேட்டான் ரமணன் நீங்கள் உவா ராணியக்காட்டையல்லோ சீட்டு போடுறனீங்கள்.என்று கேட்டு விட்டு ரமணனை உற்று பார்த்தான்
ஓம் ரவி அவவிட்டைதான்ஏன் கேக்கிறிர் நீரும் அவவிட்டை சீட்டு போடுறதெண்டு எனக்கு தெரியும் நீர்தானே போன சீட்டு எடுத்தனீர் எண்டு சொன்னவா ஏன் உப்பிடி கழிவிலை எடுத்தனீர் ஏதும் அவசரமோ நான் கடைசியிலை எடுப்பம் எண்டு விட்டிட்டன்
ரவி திடுக்கிட்டவனாய் என்ன நானோ சீட்டு எடுத்தனான். நான் நினைச்சது சரியாதான் போச்சுது உவ ராணி சுத்துறா
என்ன சொல்லுறீர் ரவி எனக்கொண்டுமா விழங்கேல்லை என்று கூற ரவியோ தனக்கும் ராணிக்கும் நடந்த தொலைபேசி உரையாடலை அப்படியே ரமணணிடம் விபரித்தான் ரமணன் நம்ப முடியாதவனாய். நான் நினை;க்கேல்லை ராணியக்கா சுத்துவாஎண்டு கனகாலமா சீட்டு பிடிக்கிறா மனிசனும் நல்ல மனிசன் எனக்கெண்டா குழப்பமா கிடக்கு என்ன செய்யலாம்.
சரிரமணன் எதுக்கும் அவசரபட்டு முடிவெடுக்க கூடாது நான் ஒரு யேசனை சொல்லுறன் அடுத்த சீட்டு எப்பிடியும் நான்தான் எடுக்க போறன் அண்டைக்கு நிங்கள் சீட்டு கேக்க அவவின்ரை வீட்டை வருவீங்கள் எண்டு சொன்னவா நானும் நீங்களும் அவவின்ரை வீட்டுக்கு கீழை போய்நிண்டு நான் வழமைபோலை கான் போனிலை; சீட்டை கேக்கிறன். நீங்கள் அங்கை நிக்கிறீங்கள் எண்டு சொல்லி சீட்டை ஏத்தினா வெண்டா அவவின்ரை களவு பிடிபடும்.அல்லது வேறு யாரும் ஏத்தினதெண்டா அதையும் யாரெண்டு விசாரிச்சு பாப்பம். வாற ஞாயிறு சந்திப்பம் என்று கூறி விடை பெற்றான்
அன்று சீட்டு நாள் ரவியும் ரமணனும் ராணியின் வீட்டிற்கு பக்கத்தில் மறைவாக நிண்டு கொண்டு ரவி ராணியின் வீட்டு இலக்கத்தை அழுத்தினான்.
கலோ ராணியக்காவொ நான் ரவி சீட்டு தொடங்கீட்டுதோ ஆ தொடங்கிட்டுதா கனபேர் நிக்கினமோ? ஒம் கனபேர் நிக்கினம் என்று ராணியின் பதில்வர. ரமணனும் நிக்கிறாரே அவர்தான் கேக்கிறமாதிரி யெண்டு சொன்னனீங்கள்........ஓம் அவரும் நிக்கிறார் முதல் கேள்வி 1800 நீங்கள் கெளுங்கோ என்று ராணி சொல்ல ரவி ரமணனை பாத்து கண்ணடித்தவாறே கேட்க தொடங்கினான். கேள்வியின் முடிவில் ரவிக்கு சீட்டு என்று ராணி சொல்ல தொலை பேசி இணைப்பு துண்டிக்கபட்டது.ரவியும் ரமணனும் சிறிது நேரம் அங்கேயே நின்றுபார்த்தார்கள் யாராவது அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறுகிறார்களா என்று ஒருவர்மட்டும் வெளியே வந்தார்.
சில நிமிடங்களில் ராணியின் வீட்டு அழைப்பு மணி ஒலித்து ராணி கதவு துவாரத்தின்வழியாக பார்தாள் அவளையுமறியாமல் அய்யோ ரவி இவன் ஏன் இஞ்சை வந்தவன் என்று நினைத்வாறு கதவை திறந்தாள். பின்னால் ரமணனும் நிண்டு கொண்டிருந்தான்.அவளின் இதயதுடிப்பும் நாடித்துடிப்பும் போட்டி போட்டுகொண்டு வேகமெடுத்தது. வார்த்தைகளை உச்சரிக்க நா மறுத்தது. வா வாங்கோ என்ன திடீரெண்டு இரண்டு பேருமா முடிந்தளவு நடுக்கத்தை கட்டுப்படுத்தியவாறு இயன்றளவு சிரிப்பை வரவழைக்க முயன்றாள்.
இருங்கோ என்ன குடிக்கிறியள் என்றவாறு கணவனை என்னப்பா வந்து இவையோடை கதைச்சு கொண்டிருங்கோ நான் கோப்பி ஊத்தி கொண்டு வாறன்.என்று கணவனை அழைக்க. கணவனே ஏதோ விபரீதம் நடக்கபோகிறது என்பதை உணர்ந்தவாறே அவர்களை நோக்கி வாங்கோ தம்பியவை இருங்கோ என்றார்.
ரவி பேச தொடங்கினான் அண்ணை முதல் இதிலை இருங்கோ ராணியக்கா கோப்பி வேண்டாம் நீங்களும் இதிலை இருங்கோ நான் கொஞசம் கதைக்க வேணும். நாங்கள் நம்பிக்கையிலைதான் உங்களோடை இவ்வளவு நாளும் Pட்டு போடுறனாங்கள் ஆனால் நீங்கள் என்னெண்டா சுத்துமாத்து விடுறியள். கனபேர் கேக்க வந்திருக்கினமெண்டியள் ஒரு ஆள்தான் வெளியிலை போறார் ரமணன் கேள்வியை ஏத்திது எண்டியள் ரமணன் என்னோடை நிக்கிது..
எனும்போது ராணி குறுக்கிட்டு தம்பி உமக்கு வேறை கதை தேவையில்லை நிர் சீட்டு எடுத்தனீர் உமக்கு சொன்ன திகதிக்கு காசு வரும் பயப்பிடாதையும் நான் ஒண்டும் சும்மா சீட்டை ஏத்தேல்லை ஆக்கள் கேட்டதை தான் சொன்னனான்.என்று கூற
ரமணனோ ஆவேசமாய் நான் சீட்டை ஏத்துறன் எண்டு ஏன் பொய் சொன்னனீங்கள் எனக்கு உங்கடை சீட்டும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் என்ரை கட்டின காசை திருப்பி தாங்கோ இல்லாட்டி நடக்கிறதே வேறை.என்று தொடங்கி அவர்களின் பேச்சுக்கள் மரியாதையாய் பன்மையில் தொடங்கி மரியாதை கெட்ட ஒருமையில் நடந்து கொண்டிருந்தது
ரமணனே உடனடியாக காசை வைக்க சொல்லி அடம்பிடிக்க ராணி காசு தந்ததற்கான அத்தாட்சி எதுவுமில்லை காசுதரமுடியாத போய் செய்யிறதை செய் வெளியே போடா என்று கத்த ரமணனனே உன்ரை ஊத்தையை ஊர்முழுக்க இப்ப சொல்லுறன் பார் கள்ளி என்று கத்த ரவி ரமணனை சமாதான படுத்தி அழைத்து கொண்டு போய்விட்டான்.போன ரமணன் ராணியிடம்சிட்டு பிடிக்கும் எல்லோருக்கும் நடந்ததை தொலைபேசி எடத்து சொல்லிவிட்டான்
அவர்கள் போனதும்ராணியின் கணவன். என்னப்பா உன்கு விசர் பிடிச்சிட்டுதே ஏன் அப்பிடி பேசினனீ இனி அவன் ரமணன் சும்மாயிருக்க மாட்டான் எல்லாருக்கும் பரப்ப போறான் நல்லவேளை பிள்ளையள் இல்லை இல்லாட்டி பயந்திருக்குங்கள் எங்கை போய் முடிய போகுதெண்டு தெரியேல்லை உன்ரை கூத்து.
நிப்பாட்டுங்கோ இப்ப என்ன அவை இரண்டு பேற்றை காசும் குடுத்தா சரிதானே நான் ஒழுங்கு பண்ணுறன்.என்ற சொல்லி கொண்டிருக்கும்போதே வீட்டு தொலை பேசி அடித்தத தொலை பேசியில் ஒருவர் என்ன ராணி கதையொண்டு கேள்விப்பட்டன் உண்மையோ என்று கதைத்து கொண்டிருக்கும் போதே கைத்தொலை பெசியும் அடித்தது. சீட்டு போட்டவர்கள் எல்லோருக்கும் கதை பரவி ஆளாளுக்கு கேள்விகள் கேட்டு துனைக்க தொடங்கிவிட்டனர்
ஒவ்வொரு சீட்டிலும் சில சீட்டுகளை உரியவருக்கு தெரியாமல் ராணியே எடுத்தது அம்பல்த்துக்கு வரவே எல்லோரும் ஒரேயடியாக தங்களிற்கு சீட்டு வேண்டாம் கட்டிய காசை திருப்பி தர சொல்லி பணிவு கெஞ்சல் மிரட்டல் என்று கேட்டு பிரச்சனை கூடிக்கொண்டிருந்தது. சிலர் நேரிலேயே வந்து கேட்டு விட்டு போனார்கள் எல்லோருக்கும் ராணி 2 3 நாட்களில் பிரச்சனை முடிப்பதாக உறுதிமெழி கொடுத்தே களைத்து போய் விட்டாள்.
இப்போ ராணியின் கோபம் முளுவதும் ரமணனிடம் திரும்ப ரமணனிற்கு தொலை பேசியில் எடுத்து மீண்டும் திட்டிவிட அவன் இரவு தனது வேறு இரண்டு நண்பர்களுடன் மதுபோதையில் வந்து கண்டபடி மிரட்டி விட்டு போயிருந்தான் இதை பார்த்த ராணியின் குழந்தைகளும் பயந்து போயிருந்தனர் ராணி குழந்தைகளிற்கு உணவை கொடுத்து படுக்கவைத்து விட்டு வந்து அமர்ந்தள்.
நடந்து முடிந்த எல்லா பிரச்சனையையும் பாத்து வெறுத்து போய்
தலையில் கையை வைத்தபடி அமர்ந்திருந்து யோசித்து கொண்டிருந்த ராணியின் கணவன் மெல்ல மௌனத்தை கலைத்து ராணி எதுக்கு நான் பயந்தனோ எல்லாம் நடந்து முடிஞ்சிது இனியென்ன முடிவு எடுக்க போறீர் வீட்டிலை எல்லா முடிவும நீர்தான் எடுக்கிறனீர் இதுக்கும் ஒரு முடிவை எடும் மானம் மரியாதையெல்லாம் போட்டுது.
ராணி கணவனின் முகத்தை பார்க்க முடியாதவளாய் என்னப்பா நீங்களும் போய் இந்த நேரத்திலை இப்பிடி சொன்னா நான் என்ன செய்ய??
ராணி எனக்கு இப்ப இரண்டு வளிதான் தெரியிது வடிவா கேளும் முதலாவது பிள்ளையளும் பயந்து போச்சுதுகள் நாளைக்கும் ஆரும் வந்து சத்தம் போடுவாங்கள் அதாலைபிரச்சனை முடியிறவரை பிள்ளையளை உம்மட தங்கச்சி வீட்டிலை கொண்டு போய் விட்டிட்டு நீர் நாளைக்கு வேலைக்கு போகாமல் நிண்டு உம்மடை தங்கச்சிக்கு கொடுத்த காசு மற்றது வேறை யாரிட்டையெண்டாலும் மாறி
பிரச்சனையை முடிக்க பாரும் இல்லாட்டி இரண்டாவது என்று சற்று தொண்டையை செருமியவாறு சொல்ல ராணி எவ்வித உணர்ச்சியின் வெளிப்பாடுமின்றி கோட்டுகொண்டிருந்தாள்.
மறுநாள்காலை வேலைக்கு புறப்பட்டுகொண்டிருந்த ராணியின் கணவன் ராணியை அழைத்தான் ராணி பின்னேரம நான் வேலையாலை வரேக்கை நான் சொன்ன இரண்டு முடிவிலை எது எண்டு தீர்மானிச்சு வைச்சிரும் நான் போட்டு வாறன் என்று சொல்லி விட்டு போய்விட்டான்.
ராணி தொலை பேசியை எடுத்து தெரிந்தவர்கனின் இலக்கத்திற்கொல்லாம் உதவி கேட்டு இலக்கங்களை அழுத்த தொடங்கினாள்.........
மாலை ராணியின் கணவன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கதவை திறந்துபார்த்தான் என்ன ஒரே இருட்டாயிரக்க என்றபடி மின் விளக்கை போட்டான். கதிரையில் அழுதழுது வீங்கிய கண்களுடன் ராணி பிள்ளைகள் வீட்டில் இல்லை என்பதை உணர்ந்தான் மெல்ல அவளருகில்போய். என்ன மாதிரி என்ன முடிவெடுத்தனீர் என்றவும் ராணி அடக்கி வைத்திருந்த அழுகையை அணை உடைத்த வெள்ளம்போல ஓவென அழுதபடி
அப்பா நான் பாவி நீங்கள் படிச்சு படிச்சு சொன்னனீங்கள் நான் கேக்கேல்லை தங்கச்சி கூட உடனை ஒண்டும் செய்யேலாது எண்டு கையை விரிச்சிட்டாள். தெரிஞ்சாக்களும் பிரச்சனை கேள்விபட்டதாலை சீட்டு காசையே சுத்திட்டியாம் கடனா என்னெண்டு நம்பி காசு தாறது எண்டு முகத்திலை அடிச்ச மாதிரி கேக்கினம் என்னை மன்னிச்சு கொள்ளுங்கோ என்று குழந்தையை போல விக்கி விக்கியழுதாள்
ராணி இனியழுது பிரயேசனமில்லை காலம் கடந்து ஞானோதயம் உனக்கு வந்திருக்கு இனி அதாலை எந்த பிரயோசனமும் இல்லை எனக்கு தெரியும் கொஞச காசே உடடை பிரட்ட கிட்டத்தட்ட ஒரு லச்சம் யுரோக்கு எங்கை போறது
ராணி கண்களை துடைத்தவாறே அப்பா நீங்கள் சொன்ன இரண்டாவது யோசனையே எனக்கு சரியெண்டு படுது நீங்கள் குளிச்சிட்டு வாங்கோ நான் சமைக்கிறன் எனறவாறு விறு விறுவென சமைக்க தொடங்கினாள்.
இருவருமாக சாப்பிட்டு விட்டு உடை மாற்றி கொண்டார்கள் ராணி திருமணத்தன்று கணவன் பரிசாக வாங்கி கொடுத்த சேலையை எடுத்து உடுத்தி கொண்டு நன்றாக அலங்காரம் செய்து கொண்டு நான் ரெடி போவமே எந்த காரிலை போவம் என்று கணவனை பார்த்து கேட்டாள்.
உம்மன்ரை BMWவிலை போவம் என்றவாறே அதன் சாவியை எடுத்து வீட்டை விட்டு வெளியேறினார்கள். வெளியே வந்த இருவரும் விட்டை ஒரமுறை திரும்பி பார்த்து விட்டு வண்டியிலேறிகொண்டனர்.
அவர்களின் வண்டி ஒரு மலைப்பாதையில் வளைந்த வளைந்து மேலேறிகொண்டிருந்தது. இருவரிடமும் ஒருவித மௌனம் ராணி அடிக்கடி கண்ணீரை துடைப்பதும் வண்டியோடிக்கொண்டிருந்த கணவனை பார்ப்பதுமாயிருந்தாள். வண்டி ஓரிடத்தில் நின்றது.
இந்தாரும் உமக்கு தானே கனநாள் ஆசை கார் 240லை ஓடவேணுமெண்டு இதிலையருந்து ஒரு 2 கிலோ மீற்றருக்கு நேர் றோட்டு முடிவிலை ஒரு பெரிய வழைவு வரும பாத்து ஓடும் என்று அவன் கூற புரிந்து கொண்ட ராணியும் இருக்கை மாறி வண்டியை ஓட தொடங்கினாள்.
வண்டி வேகமெடுத்து ஓட தொடங்கியது ராணி விசை மாற்றியினை(கியர்)கடைசி நிலைக்கு தட்டி விட்டு மேலும் வேகத்தை அதிகரித்தாள். வேகமானியின் முள் 200. 210.220 என்று ஏறிகொண்டு போனது பாதை வளைவு நெருங்கி விட்டது ராணி வேகமுளஇளை பார்த்தாள் 240 காட்டியது அவளையுமறியாமல் சிரித்து கொண்டு ஒருகையால் கணவனின் கைகளை இறுக பற்றியபடி கண்களை முடிகொண்டாள்.
அவர்களின் வண்டி வீதியின் வேக தடை சுவரை உடைத்துகொண்டு பாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருந்தது
உறவுகளே மீண்டும் ஒர்கற்பனை கலந்த உண்மை சம்பவத்துடன் சந்திப்போம் அதுவரை அன்புடன் சியாம்
ஆயிரத்து நூறு. ஆயிரத்து இருநூறு. ஆயிரத்து இருற்நூறைம்பது. ஆயிரத்து முன்நூறு. யாரும் கேக்கேல்லையோ. ஆயிரத்து முன்நூறு ஒருதரம் .ஆயிரத்து முன்நூறு இரண்டுதரம். ஆயிரத்து முன்நூறு முண்றுதரம்.சரி முடிஞ்சுது றமணி உனக்குத்தான் சீட்டு. என்றபடி ழூன்று கைத்தெலை பேசியிலும் ஒருவீட்டு தொலைபேசியிலும் ஏதோ உலக பங்கு சந்தை வியாபாரிபோல ராணி சீட்டு கூறிக்கொண்டிருந்தாள்.
சீட்டு ராணி என்றால் அந்த நகரத்தில் தெரியாத தமிழர்கள் இருக்க முடியாது சின்னன் பெரிசு என்று பல சீட்டுக்களை நடத்துபவள். சீட்டுநடத்தி சமபாதித்ததாலலும் உழைப்பினாலும் சொந்த வீடு கணவனுக்கும் அவளிற்குமென தனி தனியான சொகுசு கார்கள் என்று வசதியான வாழ்க்கை.
சீட்டு கூறிமுடிந்ததும்.அப்பாடா ஒருமாதிரி முடிஞ்சுது மாதத்திலை முதல் ஞாயிறு எண்டாலே ஓரே தலையிடி இந்த சீட்டாலை என அலுத்துக்கொண்டு சீட்டு கணக்கு கொப்பியை மடித்தவாறே
இந்தாங்கோ உங்டை கான்போன். நான் இஞ்சை தனிய இருந்து புலம்பிறன் நீங்கள் கொம்பியுட்டருக்கை தலையை குடுத்து போட்டு இருங்கோ. மனிசிபாவமெண்டு ஒரு தேத்தண்ணி வைச்சு தருவமெண்டில்லை. ஒரு தேத்தண்ணி போடுங்கோ இண்டைக்கு பிறந்தநாள் பாட்டிக்கு போகவேணுமல்லோ எழும்புங்கோ என்று கணவனிற்கு கட்டளைகள் பிறந்தன.
இஞ்சை பார் ராணி நான் எத்தனை தரம் உனக்கு சொன்னனான் உந்த சீட்டுகளை விடு எண்டு. எங்களுக்கென்ன குமர் பிள்ளையா இருக்கு கரைசேர்க்க இருக்கிறது இரண்டும் பெடியள். நானும் நீயும் வேலை செய்யிறம் பிறகேன் வேண்டாத தலையிடி. நான் சொன்னாலும் நீ கேட்கமாட்டாய் அதாலை நானும் உன்ரை சீட்டு அலுவலுக்கை தலை போட மாட்டன். ஆனா ஒண்டு நாளைக்கு ஒரு பிரச்சனையெண்டு என்னட்டை வந்து நிக்காதை
அதுஒருபிரச்சனையும் வராது நான் யார் ராணி சீட்டுக்கேராணியாக்கும். எல்லாம் நான் வெட்டியாடுவன். நீங்கள் பயப்பிடாதையுங்கோ. அதுசரியப்பா உவன் மதன் தன்ரை BMWகாரை விக்கபோறானாம். ஏதோகாசு அவசரமாம். நானும் என்னை காரை மாத்தவேணும். எனக்கப்பா அவன்ரை காரை வாங்குவமெண்டு யோசிக்கிறன்.
என்ன ராணி விளையாடுறியே அது ஸ்போட்ஸ் மொடல் கார் இப்பதான் எடுத்தவன் அவனே பெற்றேல் ஊத்திகட்டுபடியாகாமல் விக்கபோறான் நீவாங்கி என்ன கார் ரேசே ஓடப்போறாய்.அதோடை சரியான விலையும் வரும்.
அதில்லையப்பா எனக்கு கனநாள் ஆசை காரிலை ஹைவேயிலை ஒரு நாளைக்கெண்டாலும் 240லை ஒடிப்பாக்க வேணும்.அதோடை அவன் அவசரத்திலை விக்கிறதாலை நாப்பதாயிரம் யுரோக்கு தாறானாம்.நீங்கள் என்ன சொன்னாலும் நான் எடுக்கிறதுதான்.
சரி நான் சொல்லி நீ கேக்கவேபோறாய் நீ சீட்டுக்குமட்டுமில்லை வீட்டுக்கும் நீதானே ராணி நான் சொல்லி எங்கை எடுபடுது.நீ இப்ப நாப்பதாயிரம் யுரோ வைச்சிருக்கிறியே??.
அதெல்லாம் சின்னபிரச்சனையப்பா உவங்கள் ரவியும் ரமணணும் சீட்டு போடேக்கையே சொன்னவங்கள் தாங்கள் கடைசியிலை தான் எடுப்பமெண்டு அதைவிட தனிப்பெடியள் அவங்களுக்கு காசுதேவையும் வராது அதாலை அவங்கடை சீட்டை எடுத்து போட்டு அவங்களிற்கு கடைசியிலை குடுப்பம்.
அடீயே உப்பிடித்தான் போனமாதம் ஒரு சீட்டை எடுத்து உன்ரை தங்கச்சிக்கு கடை போட குடுத்தனி இதையெண்டாலும் அவங்களை கேட்டுப்போட்டு செய். சீட்டுகாரர் நம்பிக்கையிலை தான் வீட்டுக்குவராமல் ரெலிபோனிலையே கேக்கிறவை அதோடை நீ சொல்லுற கழிவு தொகையையும் நம்பி காசு தாறவை உன்ரை போக்கு இப்ப வரவர சரியில்லாமல் போகுது எங்கை போய் முடிய போகுதோ பாப்பம்.
நீங்கள் எதுக்கெடுத்தாலும் அபசகுனமா கதையுங்கோ நான் அவங்களிட்டை கேக்கபோக பிறகு ராணி இப்பிடித்தான் மற்றவையின்ரை சீட்டிலை வசதியா வாழுது எண்டுகதைக்க எரிச்சல் பிடிச்ச கனபேர் கதைப்பினம்.அதை நானே பாத்துகொள்ளுறன் நீங்கள் பேசாமல் இருங்கோ.
இரண்டுவாரத்தில் ராணி தான் நினைத்தபடியே மதனிடம் அவனதுBMWகாரை வாங்கிவிட்டாள். அவளது கணவன் வேலையிலிருந்து வீடுவந்ததும். இஞ்சையப்பா மதனிட்டை கார் வாங்கிட்டன். ஓடிப்பாத்தனான் நானும் பிள்ளையளும் அப்போதை ஒரு ரவுண்ட் அடிச்சனாங்கள் சும்மா பறக்குதப்பா நீங்களும் ஓடிப்பாருங்கோ. ஓருநாளைக்கு இரவு நாங்கள் இரண்டுபேருமா ஹைவேயிலை 240 வரைக்கும் ஓடிப்பாப்பம் என்று மகழ்ச்சி தாங்கமுடியாமல் சொன்னாள்.
ம்........பறக்குதோ அப்ப அடுத்த வருசம் ஊருக்கு போகேக்கை உன்ரை காரிலையே போகலாம் பிளேன் ரிக்கற் செலவு மிச்சம். பாத்தடி கனக்க பறக்காதை பொலிஸ் பிடிச்சா லைசென்சை பிடுங்கி போடுவான்.பிறகு உன்ரை காரை தள்ளிகொண்டுதான் திரியவேணும்
இருண்டுமாதங்களின் பின்னர் ராணியின் வீட்டில் தொலைபேசி அடித்தது.கலோ நான் ராணிதான் அட ரவியே என்ன அலுவல் திடீரெண்டு சொல்லும்
மறுமுனையில் ரவி. என்னண்டா ராணியக்கா இந்தமுறை ஆரும் சீட்டு எடுக்கிற மாதிரியிருக்கோ? ஏனெண்டால் ஊரிலை இருந்து தம்பி ரெலிபோன் எடுத்தவன். அம்மாக்கு சுகமில்லையாம். யாழ்ப்பாண ஆசுப்பத்திரியிலை காட்டினதாம்.பரிசோதிச்சு போட்டு கான்சர் வருத்தம் உடனை மகரகமைக்கு கொண்டுபோக சொன்னவங்களாம் உடனை ஒப்பிறேசன் சொய்ய வேணுமாம். அதுதான் கொஞசம் காசு வேணும்.
என்னதம்பி உங்கடை அம்மாக்கு கான்சராமோ அட கடவுளே....
ஓமக்கா அதுதான் இனி யாருட்டையும் கோட்டுகொண்டு நிக்காமல் சீட்டு இருக்குதானே யாரும்போட்டிக்கு ஏத்தாட்டி எடுத்து பிரச்சனையை முடிப்பம் எண்டு பாத்தனான்.அதுதான் அடிச்சனான். ஆரும் எடுக்கிற மாதிரியிருக்கே???
சற்று தடுமாறிய ராணி அதுவந்து ம்......ரமணணும் கேக்கிற மாதிரி கதைச்சவன் என்ன மாதிரியெண்டு தெரியேல்லை எதுக்கம் கேட்டுபாப்பம்..
என்னக்கா ரமணன் தானே போன சீட்டு எடத்ததெண்டு சொன்னனீங்கள் ஆரு அந்த மொட்டை ரமணன்தானே இல்லாட்டி வேறை ரமணன் எண்டு ஆரும் இருக்கினமோ??
இல்லை ரவி அது வேறை சீட்டு அண்டைக்கு மாறி சொல்லிபோட்டன் சரி பிரச்சனையில்லை நீர் வந்து சிரமப்படாமல் ரெலிபோனிலையே கேளும் வேறையென்ன ஞாயிறு போன் அடியும் சந்திப்பம் என்று தொலை போசியைவைத்து விட்டு திரும்ப அவளது கணவன் என்னப்பா யாரது போனிலை
இல்லையப்பா அது ரவி தன்ரை தாய்க்கு சுவமில்லையாம் அதுதான் இந்தமுறை சீட்டு எடுக்கபேறானாம் எண்டு அடிச்சவன்..........என்று கைகளை பிசைந்தபடியே கூற
இப்ப என்ன செய்யபோறீர்; காசு வைச்சிருக்கிறீரே குடுக்க எனக்கு தெரியும் எண்டைக்காவது உது நடக்குமெண்டு என்றவாறே குளியலறைக்குள் நுளைந்தான்.
சிறிது யேசித்த ராணி சரி இனியொண்டும் செய்யேலாது வேறு யாருடைய சீட்டையாவது எடுத்து இப்போதைக்கு ரவியின்ரை பிரச்சனையை முடிப்பம் பிறகு மற்றதை யோசிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தாள். ஆனால் தற்சமயம் உவன் ரவி ரமணணை சந்திச்சு ஏதும் கேட்டானெண்டால்?? கடவுளே சீ சீ ரவிக்கு ரமணணை பெரிய பழக்கம் இல்லை அவனைபோய் கேக்கமாட்டான் . எங்கையும் தற்செயலா சந்தித்தால் ?? அப்படியெதுவும் நடக்காது . என்றுதானே கேள்விகள் கேட்டு தானே பதிலையும் சொல்லிக்கொண்டிருந்தாள்.
எது நடக்ககூடாது என்று ராணி நினைத்தாளோ அதுநடந்து விட்டது அன்று ஒரு ஞாயிற்று கிழைமை ரவி கொஞசம் சாமான்கள் வாங்கவென தமிழ் கடையொன்றிற்கு போன பொழுது தற்செயலாக ரமணனை கண்டு விட்டான். ரமணனிடம் வழமையான விசாரிப்புகளின் பின்னர் ரவிகேட்டான் ரமணன் நீங்கள் உவா ராணியக்காட்டையல்லோ சீட்டு போடுறனீங்கள்.என்று கேட்டு விட்டு ரமணனை உற்று பார்த்தான்
ஓம் ரவி அவவிட்டைதான்ஏன் கேக்கிறிர் நீரும் அவவிட்டை சீட்டு போடுறதெண்டு எனக்கு தெரியும் நீர்தானே போன சீட்டு எடுத்தனீர் எண்டு சொன்னவா ஏன் உப்பிடி கழிவிலை எடுத்தனீர் ஏதும் அவசரமோ நான் கடைசியிலை எடுப்பம் எண்டு விட்டிட்டன்
ரவி திடுக்கிட்டவனாய் என்ன நானோ சீட்டு எடுத்தனான். நான் நினைச்சது சரியாதான் போச்சுது உவ ராணி சுத்துறா
என்ன சொல்லுறீர் ரவி எனக்கொண்டுமா விழங்கேல்லை என்று கூற ரவியோ தனக்கும் ராணிக்கும் நடந்த தொலைபேசி உரையாடலை அப்படியே ரமணணிடம் விபரித்தான் ரமணன் நம்ப முடியாதவனாய். நான் நினை;க்கேல்லை ராணியக்கா சுத்துவாஎண்டு கனகாலமா சீட்டு பிடிக்கிறா மனிசனும் நல்ல மனிசன் எனக்கெண்டா குழப்பமா கிடக்கு என்ன செய்யலாம்.
சரிரமணன் எதுக்கும் அவசரபட்டு முடிவெடுக்க கூடாது நான் ஒரு யேசனை சொல்லுறன் அடுத்த சீட்டு எப்பிடியும் நான்தான் எடுக்க போறன் அண்டைக்கு நிங்கள் சீட்டு கேக்க அவவின்ரை வீட்டை வருவீங்கள் எண்டு சொன்னவா நானும் நீங்களும் அவவின்ரை வீட்டுக்கு கீழை போய்நிண்டு நான் வழமைபோலை கான் போனிலை; சீட்டை கேக்கிறன். நீங்கள் அங்கை நிக்கிறீங்கள் எண்டு சொல்லி சீட்டை ஏத்தினா வெண்டா அவவின்ரை களவு பிடிபடும்.அல்லது வேறு யாரும் ஏத்தினதெண்டா அதையும் யாரெண்டு விசாரிச்சு பாப்பம். வாற ஞாயிறு சந்திப்பம் என்று கூறி விடை பெற்றான்
அன்று சீட்டு நாள் ரவியும் ரமணனும் ராணியின் வீட்டிற்கு பக்கத்தில் மறைவாக நிண்டு கொண்டு ரவி ராணியின் வீட்டு இலக்கத்தை அழுத்தினான்.
கலோ ராணியக்காவொ நான் ரவி சீட்டு தொடங்கீட்டுதோ ஆ தொடங்கிட்டுதா கனபேர் நிக்கினமோ? ஒம் கனபேர் நிக்கினம் என்று ராணியின் பதில்வர. ரமணனும் நிக்கிறாரே அவர்தான் கேக்கிறமாதிரி யெண்டு சொன்னனீங்கள்........ஓம் அவரும் நிக்கிறார் முதல் கேள்வி 1800 நீங்கள் கெளுங்கோ என்று ராணி சொல்ல ரவி ரமணனை பாத்து கண்ணடித்தவாறே கேட்க தொடங்கினான். கேள்வியின் முடிவில் ரவிக்கு சீட்டு என்று ராணி சொல்ல தொலை பேசி இணைப்பு துண்டிக்கபட்டது.ரவியும் ரமணனும் சிறிது நேரம் அங்கேயே நின்றுபார்த்தார்கள் யாராவது அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறுகிறார்களா என்று ஒருவர்மட்டும் வெளியே வந்தார்.
சில நிமிடங்களில் ராணியின் வீட்டு அழைப்பு மணி ஒலித்து ராணி கதவு துவாரத்தின்வழியாக பார்தாள் அவளையுமறியாமல் அய்யோ ரவி இவன் ஏன் இஞ்சை வந்தவன் என்று நினைத்வாறு கதவை திறந்தாள். பின்னால் ரமணனும் நிண்டு கொண்டிருந்தான்.அவளின் இதயதுடிப்பும் நாடித்துடிப்பும் போட்டி போட்டுகொண்டு வேகமெடுத்தது. வார்த்தைகளை உச்சரிக்க நா மறுத்தது. வா வாங்கோ என்ன திடீரெண்டு இரண்டு பேருமா முடிந்தளவு நடுக்கத்தை கட்டுப்படுத்தியவாறு இயன்றளவு சிரிப்பை வரவழைக்க முயன்றாள்.
இருங்கோ என்ன குடிக்கிறியள் என்றவாறு கணவனை என்னப்பா வந்து இவையோடை கதைச்சு கொண்டிருங்கோ நான் கோப்பி ஊத்தி கொண்டு வாறன்.என்று கணவனை அழைக்க. கணவனே ஏதோ விபரீதம் நடக்கபோகிறது என்பதை உணர்ந்தவாறே அவர்களை நோக்கி வாங்கோ தம்பியவை இருங்கோ என்றார்.
ரவி பேச தொடங்கினான் அண்ணை முதல் இதிலை இருங்கோ ராணியக்கா கோப்பி வேண்டாம் நீங்களும் இதிலை இருங்கோ நான் கொஞசம் கதைக்க வேணும். நாங்கள் நம்பிக்கையிலைதான் உங்களோடை இவ்வளவு நாளும் Pட்டு போடுறனாங்கள் ஆனால் நீங்கள் என்னெண்டா சுத்துமாத்து விடுறியள். கனபேர் கேக்க வந்திருக்கினமெண்டியள் ஒரு ஆள்தான் வெளியிலை போறார் ரமணன் கேள்வியை ஏத்திது எண்டியள் ரமணன் என்னோடை நிக்கிது..
எனும்போது ராணி குறுக்கிட்டு தம்பி உமக்கு வேறை கதை தேவையில்லை நிர் சீட்டு எடுத்தனீர் உமக்கு சொன்ன திகதிக்கு காசு வரும் பயப்பிடாதையும் நான் ஒண்டும் சும்மா சீட்டை ஏத்தேல்லை ஆக்கள் கேட்டதை தான் சொன்னனான்.என்று கூற
ரமணனோ ஆவேசமாய் நான் சீட்டை ஏத்துறன் எண்டு ஏன் பொய் சொன்னனீங்கள் எனக்கு உங்கடை சீட்டும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் என்ரை கட்டின காசை திருப்பி தாங்கோ இல்லாட்டி நடக்கிறதே வேறை.என்று தொடங்கி அவர்களின் பேச்சுக்கள் மரியாதையாய் பன்மையில் தொடங்கி மரியாதை கெட்ட ஒருமையில் நடந்து கொண்டிருந்தது
ரமணனே உடனடியாக காசை வைக்க சொல்லி அடம்பிடிக்க ராணி காசு தந்ததற்கான அத்தாட்சி எதுவுமில்லை காசுதரமுடியாத போய் செய்யிறதை செய் வெளியே போடா என்று கத்த ரமணனனே உன்ரை ஊத்தையை ஊர்முழுக்க இப்ப சொல்லுறன் பார் கள்ளி என்று கத்த ரவி ரமணனை சமாதான படுத்தி அழைத்து கொண்டு போய்விட்டான்.போன ரமணன் ராணியிடம்சிட்டு பிடிக்கும் எல்லோருக்கும் நடந்ததை தொலைபேசி எடத்து சொல்லிவிட்டான்
அவர்கள் போனதும்ராணியின் கணவன். என்னப்பா உன்கு விசர் பிடிச்சிட்டுதே ஏன் அப்பிடி பேசினனீ இனி அவன் ரமணன் சும்மாயிருக்க மாட்டான் எல்லாருக்கும் பரப்ப போறான் நல்லவேளை பிள்ளையள் இல்லை இல்லாட்டி பயந்திருக்குங்கள் எங்கை போய் முடிய போகுதெண்டு தெரியேல்லை உன்ரை கூத்து.
நிப்பாட்டுங்கோ இப்ப என்ன அவை இரண்டு பேற்றை காசும் குடுத்தா சரிதானே நான் ஒழுங்கு பண்ணுறன்.என்ற சொல்லி கொண்டிருக்கும்போதே வீட்டு தொலை பேசி அடித்தத தொலை பேசியில் ஒருவர் என்ன ராணி கதையொண்டு கேள்விப்பட்டன் உண்மையோ என்று கதைத்து கொண்டிருக்கும் போதே கைத்தொலை பெசியும் அடித்தது. சீட்டு போட்டவர்கள் எல்லோருக்கும் கதை பரவி ஆளாளுக்கு கேள்விகள் கேட்டு துனைக்க தொடங்கிவிட்டனர்
ஒவ்வொரு சீட்டிலும் சில சீட்டுகளை உரியவருக்கு தெரியாமல் ராணியே எடுத்தது அம்பல்த்துக்கு வரவே எல்லோரும் ஒரேயடியாக தங்களிற்கு சீட்டு வேண்டாம் கட்டிய காசை திருப்பி தர சொல்லி பணிவு கெஞ்சல் மிரட்டல் என்று கேட்டு பிரச்சனை கூடிக்கொண்டிருந்தது. சிலர் நேரிலேயே வந்து கேட்டு விட்டு போனார்கள் எல்லோருக்கும் ராணி 2 3 நாட்களில் பிரச்சனை முடிப்பதாக உறுதிமெழி கொடுத்தே களைத்து போய் விட்டாள்.
இப்போ ராணியின் கோபம் முளுவதும் ரமணனிடம் திரும்ப ரமணனிற்கு தொலை பேசியில் எடுத்து மீண்டும் திட்டிவிட அவன் இரவு தனது வேறு இரண்டு நண்பர்களுடன் மதுபோதையில் வந்து கண்டபடி மிரட்டி விட்டு போயிருந்தான் இதை பார்த்த ராணியின் குழந்தைகளும் பயந்து போயிருந்தனர் ராணி குழந்தைகளிற்கு உணவை கொடுத்து படுக்கவைத்து விட்டு வந்து அமர்ந்தள்.
நடந்து முடிந்த எல்லா பிரச்சனையையும் பாத்து வெறுத்து போய்
தலையில் கையை வைத்தபடி அமர்ந்திருந்து யோசித்து கொண்டிருந்த ராணியின் கணவன் மெல்ல மௌனத்தை கலைத்து ராணி எதுக்கு நான் பயந்தனோ எல்லாம் நடந்து முடிஞ்சிது இனியென்ன முடிவு எடுக்க போறீர் வீட்டிலை எல்லா முடிவும நீர்தான் எடுக்கிறனீர் இதுக்கும் ஒரு முடிவை எடும் மானம் மரியாதையெல்லாம் போட்டுது.
ராணி கணவனின் முகத்தை பார்க்க முடியாதவளாய் என்னப்பா நீங்களும் போய் இந்த நேரத்திலை இப்பிடி சொன்னா நான் என்ன செய்ய??
ராணி எனக்கு இப்ப இரண்டு வளிதான் தெரியிது வடிவா கேளும் முதலாவது பிள்ளையளும் பயந்து போச்சுதுகள் நாளைக்கும் ஆரும் வந்து சத்தம் போடுவாங்கள் அதாலைபிரச்சனை முடியிறவரை பிள்ளையளை உம்மட தங்கச்சி வீட்டிலை கொண்டு போய் விட்டிட்டு நீர் நாளைக்கு வேலைக்கு போகாமல் நிண்டு உம்மடை தங்கச்சிக்கு கொடுத்த காசு மற்றது வேறை யாரிட்டையெண்டாலும் மாறி
பிரச்சனையை முடிக்க பாரும் இல்லாட்டி இரண்டாவது என்று சற்று தொண்டையை செருமியவாறு சொல்ல ராணி எவ்வித உணர்ச்சியின் வெளிப்பாடுமின்றி கோட்டுகொண்டிருந்தாள்.
மறுநாள்காலை வேலைக்கு புறப்பட்டுகொண்டிருந்த ராணியின் கணவன் ராணியை அழைத்தான் ராணி பின்னேரம நான் வேலையாலை வரேக்கை நான் சொன்ன இரண்டு முடிவிலை எது எண்டு தீர்மானிச்சு வைச்சிரும் நான் போட்டு வாறன் என்று சொல்லி விட்டு போய்விட்டான்.
ராணி தொலை பேசியை எடுத்து தெரிந்தவர்கனின் இலக்கத்திற்கொல்லாம் உதவி கேட்டு இலக்கங்களை அழுத்த தொடங்கினாள்.........
மாலை ராணியின் கணவன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கதவை திறந்துபார்த்தான் என்ன ஒரே இருட்டாயிரக்க என்றபடி மின் விளக்கை போட்டான். கதிரையில் அழுதழுது வீங்கிய கண்களுடன் ராணி பிள்ளைகள் வீட்டில் இல்லை என்பதை உணர்ந்தான் மெல்ல அவளருகில்போய். என்ன மாதிரி என்ன முடிவெடுத்தனீர் என்றவும் ராணி அடக்கி வைத்திருந்த அழுகையை அணை உடைத்த வெள்ளம்போல ஓவென அழுதபடி
அப்பா நான் பாவி நீங்கள் படிச்சு படிச்சு சொன்னனீங்கள் நான் கேக்கேல்லை தங்கச்சி கூட உடனை ஒண்டும் செய்யேலாது எண்டு கையை விரிச்சிட்டாள். தெரிஞ்சாக்களும் பிரச்சனை கேள்விபட்டதாலை சீட்டு காசையே சுத்திட்டியாம் கடனா என்னெண்டு நம்பி காசு தாறது எண்டு முகத்திலை அடிச்ச மாதிரி கேக்கினம் என்னை மன்னிச்சு கொள்ளுங்கோ என்று குழந்தையை போல விக்கி விக்கியழுதாள்
ராணி இனியழுது பிரயேசனமில்லை காலம் கடந்து ஞானோதயம் உனக்கு வந்திருக்கு இனி அதாலை எந்த பிரயோசனமும் இல்லை எனக்கு தெரியும் கொஞச காசே உடடை பிரட்ட கிட்டத்தட்ட ஒரு லச்சம் யுரோக்கு எங்கை போறது
ராணி கண்களை துடைத்தவாறே அப்பா நீங்கள் சொன்ன இரண்டாவது யோசனையே எனக்கு சரியெண்டு படுது நீங்கள் குளிச்சிட்டு வாங்கோ நான் சமைக்கிறன் எனறவாறு விறு விறுவென சமைக்க தொடங்கினாள்.
இருவருமாக சாப்பிட்டு விட்டு உடை மாற்றி கொண்டார்கள் ராணி திருமணத்தன்று கணவன் பரிசாக வாங்கி கொடுத்த சேலையை எடுத்து உடுத்தி கொண்டு நன்றாக அலங்காரம் செய்து கொண்டு நான் ரெடி போவமே எந்த காரிலை போவம் என்று கணவனை பார்த்து கேட்டாள்.
உம்மன்ரை BMWவிலை போவம் என்றவாறே அதன் சாவியை எடுத்து வீட்டை விட்டு வெளியேறினார்கள். வெளியே வந்த இருவரும் விட்டை ஒரமுறை திரும்பி பார்த்து விட்டு வண்டியிலேறிகொண்டனர்.
அவர்களின் வண்டி ஒரு மலைப்பாதையில் வளைந்த வளைந்து மேலேறிகொண்டிருந்தது. இருவரிடமும் ஒருவித மௌனம் ராணி அடிக்கடி கண்ணீரை துடைப்பதும் வண்டியோடிக்கொண்டிருந்த கணவனை பார்ப்பதுமாயிருந்தாள். வண்டி ஓரிடத்தில் நின்றது.
இந்தாரும் உமக்கு தானே கனநாள் ஆசை கார் 240லை ஓடவேணுமெண்டு இதிலையருந்து ஒரு 2 கிலோ மீற்றருக்கு நேர் றோட்டு முடிவிலை ஒரு பெரிய வழைவு வரும பாத்து ஓடும் என்று அவன் கூற புரிந்து கொண்ட ராணியும் இருக்கை மாறி வண்டியை ஓட தொடங்கினாள்.
வண்டி வேகமெடுத்து ஓட தொடங்கியது ராணி விசை மாற்றியினை(கியர்)கடைசி நிலைக்கு தட்டி விட்டு மேலும் வேகத்தை அதிகரித்தாள். வேகமானியின் முள் 200. 210.220 என்று ஏறிகொண்டு போனது பாதை வளைவு நெருங்கி விட்டது ராணி வேகமுளஇளை பார்த்தாள் 240 காட்டியது அவளையுமறியாமல் சிரித்து கொண்டு ஒருகையால் கணவனின் கைகளை இறுக பற்றியபடி கண்களை முடிகொண்டாள்.
அவர்களின் வண்டி வீதியின் வேக தடை சுவரை உடைத்துகொண்டு பாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருந்தது
உறவுகளே மீண்டும் ஒர்கற்பனை கலந்த உண்மை சம்பவத்துடன் சந்திப்போம் அதுவரை அன்புடன் சியாம்
; ;

