09-25-2003, 09:33 PM
என்ன சாமி இது.. கொழும்பில் பம்பலப்பிட்டி சந்திக்கு கொஞ்சம் சற்று தள்ளி கொள்ளுப்பிட்டிப் பக்கமாக.. காண்டம் வாசிப்பவர்கள் இருக்கிறார்கள்.. காண்டங்களை வாழ்வின் காலங்களுக்கேற்ப பகுத்து வைத்திருக்கிறார்கள். நீங்கள் கொடுக்க வேண்டியது அந்தந்த காண்டத்துக்குரிய கட்டணமும்.. கைரேகை அடையாளமும்தான்.. நண்பன் ஆகா ஓகோ என்று புகழ்ந்தான்.. ம்.. அரைமனதுடன் பிறந்த காலத்துக் காண்டத்தை கேட்டேன் சாமி.. கைரேகையை பார்த்து பிறந்த திகதி மாதம் ஆண்டு சொன்னார்களே.. எழுதியும் தந்தார்களே.. எதிர்காலத்தைபற்றி கேட்க சொன்னான்.. பயத்திலை ஓடி வந்திட்டேன்.. கம்பியூட்டரிலை கொடுத்து மனிதர்களை அடையாளங்காண இங்கே கைவில் அடையாளம் என்றால்.. அங்கே அதே அடையாளம் காண்டம்மூலம் வாழ்க்கையே சொல்கிறது..
.

