05-30-2005, 12:48 PM
புலிகளின் தளபதிகளின் `ஹெலி' பயணத்திற்கு அனுமதி வழங்க பாதுகாப்பு அமைச்சு மறுப்பு
கிழக்கிலிருந்து வன்னிக்குச் சென்ற விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தளபதிகள், அங்கிருந்து மீண்டும் கிழக்கே செல்வதற்கு ஹெலிகொப்டர் வழங்க பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.
கிளிநொச்சியிலிருந்து புலிகளின் திருமலை மாவட்ட தளபதி கேணல் சொர்ணம் சம்பூருக்கும் கிளிநொச்சியிலிருந்து புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி கேணல் பானு கரடியனாறுக்கும் செல்வதற்கே ஹெலிகொப்டரை வழங்க பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.
திருகோணமலையிலிருந்து கடந்த 2 ஆம் திகதி கேணல் சொர்ணம் மற்றும் மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் உட்பட ஐவர் ஹெலிகொப்டர் மூலம் கிளிநொச்சி சென்றிருந்தனர்.
இவர்களே சம்பூர் திரும்புவதற்கு ஹெலிகொப்டர் வசதி கேட்டபோது அதனை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்தது.
இது போன்று, இம் மாத முற்பகுதியில் மட்டக்களப்பிலிருந்து வன்னிக்குச் சென்ற கேணல் பானுவும் மற்றும் உறுப்பினர்களும் எதிர்வரும் 2 ஆம் திகதி கரடியனாறு திரும்புவதற்கு ஹெலிகொப்டர் வசதி கோரப்பட்டது. எனினும் அதுவும் பாதுகாப்பு அமைச்சால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதே நேரம் வன்னியிலிருந்து தரை வழியாக மட்டக்களப்பிற்கு புலிகளின் அணியொன்று இராணுவப் பாதுகாப்புடன் சென்று திரும்புவதற்கான அனுமதி கோரப்பட்ட போதும் அதனையும் பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.
இதற்கான கோரிக்கைகள் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினூடாக விடுக்கப்பட்டிருந்தது.
இதே நேரம் ஐரோப்பாவிலிருந்து கொழும்புக்கு திரும்பும் இரு புலி உறுப்பினர்களை ஓமந்தை சோதனை நிலையம் வரை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
தினக்குரல்
கிழக்கிலிருந்து வன்னிக்குச் சென்ற விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தளபதிகள், அங்கிருந்து மீண்டும் கிழக்கே செல்வதற்கு ஹெலிகொப்டர் வழங்க பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.
கிளிநொச்சியிலிருந்து புலிகளின் திருமலை மாவட்ட தளபதி கேணல் சொர்ணம் சம்பூருக்கும் கிளிநொச்சியிலிருந்து புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி கேணல் பானு கரடியனாறுக்கும் செல்வதற்கே ஹெலிகொப்டரை வழங்க பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.
திருகோணமலையிலிருந்து கடந்த 2 ஆம் திகதி கேணல் சொர்ணம் மற்றும் மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் உட்பட ஐவர் ஹெலிகொப்டர் மூலம் கிளிநொச்சி சென்றிருந்தனர்.
இவர்களே சம்பூர் திரும்புவதற்கு ஹெலிகொப்டர் வசதி கேட்டபோது அதனை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்தது.
இது போன்று, இம் மாத முற்பகுதியில் மட்டக்களப்பிலிருந்து வன்னிக்குச் சென்ற கேணல் பானுவும் மற்றும் உறுப்பினர்களும் எதிர்வரும் 2 ஆம் திகதி கரடியனாறு திரும்புவதற்கு ஹெலிகொப்டர் வசதி கோரப்பட்டது. எனினும் அதுவும் பாதுகாப்பு அமைச்சால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதே நேரம் வன்னியிலிருந்து தரை வழியாக மட்டக்களப்பிற்கு புலிகளின் அணியொன்று இராணுவப் பாதுகாப்புடன் சென்று திரும்புவதற்கான அனுமதி கோரப்பட்ட போதும் அதனையும் பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.
இதற்கான கோரிக்கைகள் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினூடாக விடுக்கப்பட்டிருந்தது.
இதே நேரம் ஐரோப்பாவிலிருந்து கொழும்புக்கு திரும்பும் இரு புலி உறுப்பினர்களை ஓமந்தை சோதனை நிலையம் வரை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

